search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: அரசாணை வெளியிட்டார் ஜனாதிபதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: அரசாணை வெளியிட்டார் ஜனாதிபதி

    • வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும்.
    • வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தல் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அரசாணையை திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

    வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×