என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • யூடியூபர் சபீர் அலி என்பவர் கடையில் பணியாற்றிய 7 பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டிருந்தது.
    • சபீர் அலி கடை நடத்துவதற்கு விமான நிலைய ஆணையத்திற்கு பிருத்வி பிரந்துரை செய்ததாக தகவல்.

    சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் கடையை மையமாக வைத்து தங்கம் கடத்திய விவகாரத்தில், கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கத்தை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சென்னையை சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர் கடையில் பணியாற்றிய 7 பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டிருந்தது.

    வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவோரிடம் இருந்து தங்கத்தை பெற்று, சுக்க சோதனை இல்லாமல் கடத்தியது தெரியவந்தது.

    இந்நிலையில், சபீர் அலி உள்பட 9 பேர் கைதான நிலையில், பாஜக நிர்வாகி பிருத்வி என்பவருக்கு சம்மன் அனுப்பி சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சபீர் அலி கடை நடத்துவதற்கு விமான நிலைய ஆணையத்திற்கு பிருத்வி பிரந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை.
    • கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை.

    கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தினார்.

    கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    3 மாவட்டத்திற்கும் சவாலாக உள்ள புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

    சட்டம்- ஒழுங்கு குறித்தும் கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    பொது மக்கள் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல் துறையினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் 63.83 அடியாக உயர்ந்துள்ளது.

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடகு மாவட்டத்தில் தயார் நிலையில் பேடரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி மற்றும் பல்வேறு ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து காணப்படுவதால் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த தண்ணீர் நேரமாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 44 ஆயிரத்து 353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 53 ஆயிரத்து 98 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.31 அடியாக உயர்ந்தது.

    இந்நிலையில் இன்று மதியம் முதல் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 1000 கனஅடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68,843 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 63.83 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • சென்னை உயர்நீதிமன்றம் ஆலமரம் போன்றது.
    • மதுரை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை:

    மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளை கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 24-ந்தேதி தொடங்கப்பட்டது. 14 மாவட்டங்களை சேர்ந்த வழக்குகளை மதுரை ஐகோர்ட்டு கிளை விசாரித்து வருகிறது. இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகளை முடித்து 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    இதற்கான நிறைவு விழா மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் வரவேற்றார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் தமிழில் காலை வணக்கம் எனக்கூறி தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசியதாவது:-

    ஔவையார், அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என குறிப்பிட்டுள்ளார். எனது மராத்திய மொழியில் அறிந்து சொல்கிறேன். இயன்றவரை பிறருக்கு உதவுவது நல்லது. தமிழ் கலாசாரத்தின் நல்ல இயல்புகள் எப்போதுமே மகிழ்ச்சி அளிப்பவை. விருந்தோம்பல் பண்பு அழகானது. சென்னை உயர்நீதிமன்றம் ஆலமரம் போன்றது.

    நேற்று நாலடியாரின் ஆங்கில பதிப்பு எனக்கு கிடைத்தது. அதில் நம்பிக்கை குறித்து குறிப்பிடப்பட்ட விசயம் உண்மையானது. வழக்கறிஞர்கள் பொதுமக்கள் என அனைவரும் உற்றுநோக்கும் வண்ணம் மதுரைக்கிளையின் பல உத்தரவுகள் உள்ளன. ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது, அது சமூகத்தின் பிரச்சனையை முன்னிறுத்தும் விதமாகவே அமைகிறது.

    மதுரைக்கிளை நீதியை மட்டுமல்ல சமூக மாற்றத்தையும் வழங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கலாசாரத்தின் அடையாளமாகவும் மதுரைக்கிளை அமைந்துள்ளது. நீதிமன்றங்களில் மொழி ஒரு சிக்கலாக வந்தபோது, அந்தத்த மாநில மொழிகளில் உத்தரவுகளை அறிந்து கொள்ளும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2000-க்கும் அதிகமான உத்தரவுகள் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து காணோலி காட்சி மூலம் மதுரை ஐகோர்ட்டு 20-வது ஆண்டு நினைவு சின்னத்தை திறந்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

    இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், விஸ்வநாதன், மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ், சுந்தர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், தமிழக அட்வகேட் ஜெனரல் ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    விழாவில் தமிழகத்தின் 100 இ-சேவை மையங்கள் காணோலி காட்சி மூலம் திறந்த வைக்கப்பட்டது. முடிவில் நீதிபதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    இதில் மதுரை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • வேலூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரும்போது என்கவுன்ட்டர்செய்ய திட்டம்.
    • தேசிய மனித உரிமை ஆணையத்தில் நாகேந்திரன் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    மேலும், ரவுடிகளிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் பரவியது.

    இந்த விவகாரம் தொடர்பாக, ரவுடி நாகேந்திரனை என்கவுன்ட்டரில் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி விசாலாட்சி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன்படி, வேலூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரும்போது என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக புகார் தெரவித்துள்ளார்.

    அதனால், உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் நாநே்திரன் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

    • ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
    • அஞ்சலையைத் தொடர்ந்து மேலும் இரண்டு ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடிவரப்பட்ட பெண் தாதாவான அஞ்சலை புளியந்தோப்பில் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    பெண் தாதாவான அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் பணத்தை வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர்.

    புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அஞ்சலையின் பெயர் உள்ளது. கந்து வட்டி வசூலிப்பது தொடர்பாக அவர் மீது புகார்கள் உள்ள நிலையில் பி.வகை ரவுடிகள் பட்டியலில் அஞ்சலை இடம் பெற்றிருக்கிறார். இந்த கொலை வழக்கில் அஞ்சலைக்கு தொடர்பு இருப்பதை தொடர்ந்து பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    அஞ்சலையைத் தொடர்ந்து மேலும் இரண்டு ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஐஸ் ஹவுஸை சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைவாசிகளுக்கு வெளியில் இருந்து பண உதவி, சிறைவாசிகளிடம் இருந்து வெளியில் தகவல்களை கூறுபவராக எல்லப்பன் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கோடாரி ஒன்றை வாங்கியதும், அதனை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. முதல் திட்டம் வேலூரில் இருந்து தொடங்கியுள்ளது.

    முதலில் வேலூரில் வைத்து அருள், பொன்னை பாலுவை மூளை சலவை செய்துள்ளார். அதற்காக பாலு, தங்க பிரேஸ்லெட்டை வைத்து ரூ.3.50 லட்சம் பணமாக்கியுள்ளார். சம்போ செந்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஹரிஹரனுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கோடாரி ஒன்றை வாங்கி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அதனை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. மேலும் பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

    • தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி, திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    வேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை புறநகர் சப்-டிவிஷன் காவல் டிஎஸ்பியாக இருந்த பாலசுந்தரம் மதுரை காவல் மாவட்ட ஊமச்சிக்குளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தாம்பரம் காவல் ஆணையராக எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த இளஞ்செழியன் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துதுறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
    • ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும்.

    போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    • மாற்றத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் தேவைப்பட்டால் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    • மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது.

    • மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கைகளுக்கு மேல் உள்ள ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும்.

    • ஸ்டிக்கர் கிழிந்த நிலையிலோ, மங்கிய நிலையிலோ இருந்தால் புதிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும் போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல், தக்க மேல் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

    • 2 நாளைக்கு ஒருமுறை 5, 6 குடங்கள் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    மங்கலம்பேட்டை:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எம்.அகரம் ஊராட்சியின் புதுக் காலனி மற்றும் பழைய காலனியில் சுமார் 160-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனார்.

    இங்கு குடிநீர் பற்றாக்குறை பிரச்சனை இருந்து வருவதாகவும், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் ஒரே ஒரு வேளை மட்டும்தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும், 2 நாளைக்கு ஒருமுறை 5, 6 குடங்கள் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிகிறது.

    இதனால் பாட்டில் மற்றும் கேன்களில் அடைத்து விற்கக்கூடிய குடிநீரை காசு கொடுத்து வாங்கி அக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் எம். அகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தின் முன் கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும், மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லாஹ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருஞானம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாக குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
    • பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் இதுவாகும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும், இதுவரை இருந்து வந்த மத்திய திட்டக்குழு என்னும் அமைப்பு கலைக்கப்பட்டது. அதற்கு பதிலாக "நிதி ஆயோக்" அமைப்பு நிறுவப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாக குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். பிரதமர் மோடி, 3-வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் இதுவாகும்.

    இந்த நிலையில் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி டெல்லி செல்கிறார்.

    நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் நிலுவைத் தொகை, நிதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் நீட் தேர்வுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார்.
    • மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தவும் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில் பா.ஜ.க. புதிதாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறது.

    நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடும் நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயருடன் நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார்.

    தேர்தல் களத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இருந்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு உதவிகளை செய்வது, தமிழகத்தின் நலன் சார்ந்த செயல்களுக்காக குரல் கொடுப்பது என விஜய்யின் அரசியல் பயணம் திட்டமிட்ட திசையில் சென்று கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

    தமிழக தேர்தல் களத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களும் மரணம் அடைந்த பிறகு கூட்டணி அரசியல் தான் கை கொடுத்து வருகிறது. அந்த வகையில் விஜய்யும் கூட்டணி அரசியலுக்கு தயாராக இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளோடு விஜய் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தனித்து களம் காண விஜய் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.

    விஜய்யின் அரசியல் பயணம் தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க. மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிராகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். மறைந்த தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரது கொள்கைகளை பின்பற்றி அரசியல் களத்தில் நடைபோட உள்ள விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற திருவள்ளுவரின் வார்த்தைகளையும் பயன்படுத்தியே அரசியல் மேற்கொண்டு வருகிறார்.

    சமூக நீதிக் கொள்கைகள், இரு மொழிக் கொள்கை ஆகியவற்றை முன்னெடுத்து செல்ல முடிவு செய்துள்ள விஜய் நீட் தேர்வுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார்.

    கல்வியை தமிழக பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும் என்பதும் தமிழக வெற்றி கழகத்தின் கோரிக்கையாக உள்ளது. இப்படி தமிழ் தமிழர்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி சட்ட மன்றத் தேர்தலை அவர் சந்திக்க இருக்கிறார்.

    ஆன்லைன் மூலமாக தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 48 லட்சம் பேர் இதுவரை உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் பிரமாண்டமான வகையில் பொதுமக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.

    சட்டமன்ற தேர்தலுக்குள் 5 மண்டல மாநாடுகளை நடத்துவதற்கு முடிவு செய்துள்ள விஜய் 10 மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த உள்ளார். 100 தொகுதிகளில் பாதயாத்திரை மேற் கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநிலம் முழுவதும் தனது ரசிகர்கள் மற்றும் கட்சியில் சேரும் இளைஞர்களை ஒருங்கிணைத்து புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.

    2 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் அணி, வக்கீல் அணி, இளைஞரணி என 30 அணிகளை தமிழக வெற்றிக் கழகத்தி்ல் உருவாக்குவதற்கும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.

    விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தி கோட்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது. அதன் பிறகு அக்டோபர் மாதத்தில் திருச்சி அல்லது மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தவும் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.

    2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வது தொடர்பாக பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை விஜய் வெளியிட உள்ளார். கட்சியின் கொடியையும் அவர் மாநாட்டில் ஏற்ற உள்ளார். இப்படி வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு விஜய் அதிரடியாக தயாராகி வருவதால் நிச்சயம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கணித்து இருக்கிறார்கள்.

    தேர்தல் களத்தில் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி என்பதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுதியோடு இருக்கிறார்கள். இதனால் நிச்சயம் 2026 -ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக ஆவார் என்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.
    • மழை நிலவரத்துக்கு ஏற்ப உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது.

    நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் பலத்த மழை காரணமாக அதிக அளவில் வெள்ளம் தேங்கி நிற்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதேபோல் கனமழை பெய்துவரும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.

    இந்த நிலையில் கனமழை பெய்துவரும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை சேர்ந்த மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை உடனடியாக துரிதப்படுத்த வேண்டும், நிவாரண மையங்களை

    அமைத்து மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அங்கு பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

    ஏற்கெனவே பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக மீட்பு குழுவினர் தேவைப்பட்டாலும் உடனடியாக அனுப்பி வைக்க அரசு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களிடமும், அந்தந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மீட்பு பணிகள் தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததுடன் மீட்பு பணிகள் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும் மழை நிலவரத்துக்கு ஏற்ப உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான தகவல்களை தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    ×