search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல்துறை அதிகாரிகள்"

    • காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடந்தது.
    • கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் களுக்கு பல்வேறு ஆலோ–சனைகளை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள சங்கராபுரம், மூங்கில் துறைப்பட்டு, வடபொன் பரப்பி, பகண்டை கூட்டு ரோடு ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கி, போலீஸ் இன்ஸ்பெக் டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் களுக்கு பல்வேறு ஆலோ–சனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர், குற்ற சம்பவங்களில் கைது செய்யப்படும் நபர்களை போலீஸ் நிலை–யங்களில் வைத்து விசாரிக்க வேண்டும்.

    கைது செய்யப்படும் குற்றவாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால், சிகிச்சைக்காக அவரை உடனடியாக ஆஸ்பத்தி–ரிக்கு அழைத்துச் செல்ல–வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடு–பவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லக்கூடாது. குறிப்பாக குற்றவாளிகளை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அனைவரும் கடைபிடிக்க–வேண்டும் என பேசினர்.

    இதில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, சங்கரா–புரம் இன்ஸ்பெக்டர் பால–கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், முருகன், சூர்யா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

    ×