search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opening of water"

    • விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அம்பேத்கர் படத்தை வைத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் உபரி நீரை வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறையினரோ திருமூர்த்தி அணை முழு கொள்ளளவை எட்டிய பிறகுதான் தண்ணீர் திறக்க முடியும் என கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட உப்பாறு அணை விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் கூறும்போது,

    கடந்த 4 ஆண்டுகளாக உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி வலியுறுத்தி வருகிறோம். பலமுறை பி.ஏ.பி. அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளோம். இது தொடர்பாக 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு முந்தையநாள் பேச்சுவார்த்தையை ரத்து செய்கின்றனர். உப்பாறு அணை பகுதி விவசாயிகளுக்கு, கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. இதே நிலை நீடித்தால் ஊரை காலி செய்துவிட்டு விவசாயத்தை விட்டு விட்டு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்படும். எங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    இதையடுத்து இன்று 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடக்கிறது. மேலும் விவசாயிகள் அம்பேத்கர் படத்தை வைத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் மூலம் நேரடியாக 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், மறைமுகமாக 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    இந்நிலையில் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு இன்று முதல் ஜூன் 12-ந் தேதி வரை 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வரட்டுப்பள்ளம் நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார்.

    இந்த நிகழ்வில் உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறி யாளர் தமிழ்பரத், பாசன விவசாய சங்க தலைவர் நாகராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் குருசாமி, சரவணன், முன்னாள் ஊராட்சி செயலாளர் கவின் பிரசாத், இளைஞர் அணி வைத்தீஸ்வரன், மூலக்கடை லோகு, சங்கராபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×