என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட செம்மல்.
- எல்லோர்க்கும் சம உரிமைகளை பெற்று தந்திட்ட புரட்சியாளர்.
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்தியாவின் மாண்பிற்குரிய அரசியலமைப்பு சாசனத்தின் தந்தை, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட செம்மல், எல்லோர்க்கும் சம உரிமைகளை பெற்று தந்திட்ட புரட்சியாளர், அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாளில் அவர்தம் தியாகத்தை நினைவுகூறி போற்றி வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- இருவரும் இன்று காலை ஒரே மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டனர்.
- விபத்து குறித்து உடனடியாக எலச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் ராகுல் (வயது 20). இவர் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.
இதேபோல் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் பூந்தமிழன் (20). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இன்பர்மேஷன் டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவரும், ராகுலும் நண்பர்கள் ஆவர். இருவரும் இன்று காலை ஒரே மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டனர். மாணவர் பூந்தமிழன் திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியில் படித்து வருவதால் அவரை அங்கு இறக்கி விடுவதற்காக மோட்டார்சைக்கிளை ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி ஓட்டினார்கள்.
திருச்செங்கோடு அடுத்த எலச்சிப்பாளையம் நல்லாம்பாளையம் ரேசன் கடை அருகில் சாலையில் இருவரும் சென்றபோது மோட்டார்சைக்கிளும், திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரத்தை நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் மாணவர்கள் ராகுல், பூந்தமிழன் இருவரும் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து உடனடியாக எலச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டனர். மேலும் இது பற்றி போலீசார், மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் மாணவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதை பார்க்கும்போது நெஞ்சை கரைய வைத்தது.
மாணவர்கள் பலியானதை தொடர்ந்து அவர்கள் படித்த கல்லூரி சோகத்தில் மூழ்கியது.
- டாஸ்மாக் ஊழியர் சக்திவேல் என்பவர் வெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தார்.
- அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமழிசை:
ஃபெஞ்ஜல் புயலின்போது விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூர் பகுதியில் டாஸ்மாக் ஊழியர் சக்திவேல் என்பவர் வெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க கோரி திருமழிசையில் உள்ள டாஸ்மாக் கிடங்கு அருகே திருவள்ளூர் கிழக்கு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலர் தனசேகர், ஐ.என்.டி.யூ.சி மாநில தலைவர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அண்ணல் அம்பேத்கர் அவர்களது நினைவு தினம் இன்று.
- சகோதரத்துவம் காப்போம். ஜெய் பீம்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய அரசியல் அமைப்பின் தலைமைச் சிற்பி, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அண்ணல் அம்பேத்கர் அவர்களது நினைவு தினம் இன்று.
நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதியான அண்ணல் அம்பேத்கர் அவர்களது சமத்துவ நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உழைப்போம். சகோதரத்துவம் காப்போம். ஜெய் பீம்! என்று தெரிவித்துள்ளார்.
- அனைத்து பஸ்களும் சீரமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும்.
- தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்பரம்:
தாம்பரம் பஸ்நிலைய பகுதி எப்போதும் போக்கு வரத்து நெரிசலாக காணப்படும். தாம்பரத்திற்கு என தனி பஸ் நிலையம் இல்லாததால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் ரெயில் நிலையத்துக்கு எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி ஆங்காங்கு நிறுத்தப்படுவது வழக்கம்.
ஜி.எஸ்.டி.சாலை மூன்று தடங்களை கொண்டதாக உள்ளது. பயணிகளை இறக்குவதற்காக ஒரு தடத்தில் பஸ்கள் வரிசை கட்டி நிற்கும்போது மற்ற இருதடங்களில் பஸ்கள், வாகனங்கள் செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது. இதற்காக தாம்பரத்தில் இருந்து பல்லாவரம், அனகாபுத்தூர், குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி செல்ல 110 மீட்டர் நீளத்திற்கு மேற் கூரையுடன் கூடிய(தடம்66) பஸ்நிலையமும், பல்லாவரம் கிண்டி வடபழனி வழியாக கோயம்பேடு செல்ல (தடம்70) 90 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு பஸ்நிலையமும் ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்நிலையங்களாலும் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த 2 பஸ்நிலையங்களிலும் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், ஆணையர் பாலச்சந்தர், மண்டல தலைவர் காமராஜ் இந்திரன், தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் போக்குவரத்து உதவி ஆணையர் ராஜன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இந்த இரண்டு பஸ் நிலையங்களிலும் ஆய்வு செய்தனர். அப்போது 2 பஸ்நிலையங்களையும் நவீன வசதியுடன் மறு சீர மைப்பு செய்து போக்கு வரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
அதன்படி ஜி.எஸ்.டி.சாலையின் ஓரத்தில் ஒருபுறத்தில் மட்டுமே இரண்டு மீட்டர் அகலத்திற்கு நடைபாதை, கான்கிரீட் தூண்களுடன் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது. சென்னைக்கு செல்லும் பஸ்கள் மட்டுமல்லாமல் தென் மாவட்டம் மற்றும் சென்னையை ஒட்டி உள்ள பிற மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் சீரமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும்.
இதில் சாலையின் ஓரத்தில் ஒரு புறத்தில் மட்டுமே தூண்கள் அமைத்து கட்டப்படவுள்ளதால் சாலையை ஒட்டி உள்ள பகுதியில் சாலை மார்க்கத்தில் 10 மீட்டர் அகலத்திற்கு காலியிடம் கிடைக்கும். இதன் மூலம் தற்போது இரண்டு வரிசைகளில் செல்லும் வாகனங்கள் 3 வரிசைகளில் செல்ல முடியும்.
இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் சீரமைக்கப்படும் பஸ்நிலையங்களில் நவீன மேற்கூரை, கண்காணிப்பு கேமராக்கள். ஒலிபெருக்கிகள், டிஜிட்டல் பெயர்பலகை உள்ளிட்டவை நவீனமாக அமைக்கப்படுகிறது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- மண்டல கால வழிபாடு தொடங்கியதில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுபோன்ற காணிக்கையை அளித்துள்ளனர்.
- மாளிகைபுரத்தம்மன் கோவிலில் வழக்கம் போல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கலாம்.
கூடலூர்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினந்தோறும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நேரடி பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால் ஆன்லைன் பதிவுதாரர்களில் தினமும் 15 ஆயிரம் பேர் வருவதில்லை. இதனால் நேரடியாக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. தற்போது மழை குறைந்துள்ளதால் புல்மேடு, முக்குழி உள்ளிட்ட வனப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு தானியங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
இதற்காக சபரிமலை சன்னிதானம் மற்றும் மாளிகைபுரத்தம்மன் கோவிலில் மரக்கால் போன்ற பாத்திரம் வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நெல், அரிசி, சர்க்கரை, மஞ்சள், பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இதில் நிரப்பி காணிக்கையாக தருகின்றனர். மண்டல கால வழிபாடு தொடங்கியதில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுபோன்ற காணிக்கையை அளித்துள்ளனர்.
இனிமேல் சபரிமலை சன்னிதானத்தில் நாணயங்களையும் நிறைபடி காணிக்கையாக வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு
உள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றை வேண்டி பக்தர்கள் பலரும் நெல், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கலனில் நிறைத்து காணிக்கையாக தருகின்றனர்.
சபரிமலை சன்னிதானத்தை பொறுத்தவரையில் நெல் மட்டுமின்றி நாணயங்களையும் இனிமேல் நிறைபடி காணிக்கையாக வழங்கலாம். மாளிகைபுரத்தம்மன் கோவிலில் வழக்கம் போல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கலாம்.
இதற்காக காலை 3.30 மணி முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.15 மணி வரையிலும் மாளிகைபுரத்தில் காலை 3 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இந்த காணிக்கையை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மாநிலங்களில் இருந்து முருங்கைக்காய் குறைந்த அளவே விற்பனைக்கு வருகிறது.
- காய்கறி கடையில் ஒரு முருங்கைக்காய் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
போரூர்:
கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து முருங்கைக்காய் அதிக அளவு விற்பனைக்கு வருவது வழக்கம். அங்கு தற்போது சீசன் முடிந்துள்ளதால் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து முருங்கைக்காய் குறைந்த அளவே விற்பனைக்கு வருகிறது.
வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு தினந்தோறும் 1200 மூட்டைகளில் முருங்கைக்காய் வரும். ஆனால் இன்று வெறும் 200 மூட்டைகளில் மட்டுமே வந்தது. இதனால் அதன் விலை உச்சத்தை அடைந்துள்ளது.
மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 வரையிலும் வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ரூ.500 வரையிலும் விற்கப்படுகிறது. காய்கறி கடையில் ஒரு முருங்கைக்காய் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான காய்கறி வியாபாரிகள் விற்பனைக்கு முருங்கைக் காய் வாங்குவதையே நிறுத்தி விட்டனர். முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சம் அடைந்து வருவதால் இல்லத்தரசிகள் சமையலுக்கு முருங்கைக்காய் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர்.
இதேபோல் மொத்த விற்பனையில் தக்காளி விலையும் ஏறத்தொடங்கி உள்ளது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.55-க்கு விற்பனை ஆனது.
வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளன. கேரட், அவரைக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ ரூ.50 வரை விற்கப்படுகிறது.
மேலும் வெங்காயம் ரகத்தை பொறுத்து கிலோ ரூ.70 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய் விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது,
"கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக 1,200 மூட்டைகளில் குவிந்து வரும் முருங்கைக்காய் தற்போது 200 மூட்டைகளில் மட்டுமே வருகிறது. எனினும் விலை அதிகரிப்பால் முருங்கைக் காய் விற்பனை மந்தமாகவே நடக்கிறது. இனி வரும் நாட்களில் ஆந்திராவில் இருந்து அதிகளவில் முருங்கைக்காய் விற்பனைக்கு வர தொடங்கும். எனவே வரும் நாட்களில் முருங்கைக்காய் விலை படிப்படியாக குறையும்" என்றார்.
- அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
- சுமூக நிலை ஏற்படாத நிலையில் போலீசார் மேலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள வாடமங்கலம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதி மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் வீட்டு மனை மற்றும் வீடு கட்டி கொடுத்த நிலையில் அப்பகுதியில் கிராம மக்கள் குடியிருந்து வருகின்றனர். இதில் அப்பகுதி மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு நிலம் கொடுத்தவரின் வாரிசுதாரர்கள் இது எங்களுக்கு சொந்தமான இடம் என கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
மேலும் இதுகுறித்து இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இன்று டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை கிராம மக்கள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் இந்த இடம் எங்களுக்கு சொந்தம் என்றும், இதில் யாருடைய புகைப்படத்திற்கும் மாலை அணிவிக்க கூடாது என்று கூறி சிலர் திடீரென்று தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, பர்கூர் டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன், பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சுமூக நிலை ஏற்படாத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மேலும் குவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் வாடமங்கலம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- அரசு பஸ்களில் டிஜிட்டல் போர்டு, டிக்கெட் கொடுக்கும் கருவி, தானியங்கி கதவுகள், ஏ.சி. வசதி உள்ளிட்ட எத்தனையோ அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
- பயணிகள் எங்கு நின்றாலும் சத்தம் கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பஸ்சில் ஏறி பயணிப்பதற்கு வசதியாக அமைந்து உள்ளது.
கோவை:
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் பல்வேறு ஊர்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்கள் என்னென்ன ஊருக்கு செல்லும், எந்த வழித்தடம் வழியாக செல்லும் என்ற விவரங்கள் பக்கவாட்டு பகுதியில் எழுதப்பட்டுஇருக்கும். ஆனாலும் எழுத படிக்க தெரியாதவர்கள் கிராமங்களில் இருந்து வருவதால், அவர்களுக்கு பஸ்கள் எந்த ஊர்களுக்கு செல்கின்றன என்பது பற்றிய விவரம் தெரிய வாய்ப்பு இல்லை.
எனவே கண்டக்டர்கள் அந்த பஸ் செல்லும் ஊர்களின் பெயரை உரத்த குரலில் கூறி பயணிகளை அழைப்பார்கள். இந்த நடைமுறை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது.
அரசு பஸ்களில் டிஜிட்டல் போர்டு, டிக்கெட் கொடுக்கும் கருவி, தானியங்கி கதவுகள், ஏ.சி. வசதி உள்ளிட்ட எத்தனையோ அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
இருப்பினும் பஸ் நிலையத்திற்குள் வண்டி நுழைந்ததும் கண்டக்டர்கள் ஊர்ப்பெயரை கூறி பயணிகளை அழைக்கும் முறை மட்டும் மாறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கோவை மண்டல போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் குளிர்சாதன மற்றும் சொகுசு பஸ்களில் சம்பந்தப்பட்ட வாகனம் செல்லும் வழித்தடம் மற்றும் ஊர்ப்பெயரை அறிவிக்க ஏதுவாக, தானியங்கி ஒலிபெருக்கி வழங்கப்பட்டு உள்ளது.
சிறிய ரேடியோ போல இருக்கும் மேற்கண்ட சாதனம் பேட்டரி மூலம் இயங்குகிறது. இதில் சம்பந்தப்பட்ட பஸ் செல்லும் வழித்தடம், எந்தெந்த ஊர்களில் நிற்கும் என்பவை பற்றிய விவரங்கள் குரல் வழியில் பதிவு செய்யப்படுகின்றன.
பஸ் நிலையங்களுக்குள் வண்டி வந்ததும் மேற்கண்ட கருவியை வண்டியின் முன்பகுதியில் கண்டக்டர்கள் எடுத்து வைத்து சுவிட்சை போட்டு விடுகின்றனர்.
அதன்பிறகு தானாகவே கருவியில் இருந்து குரல்வழிப்பதிவு ஒலிபரப்பாக தொடங்கி விடுகிறது. சேலம், ஈரோடு, கரூர் என பஸ் இயக்கப்படும் ஊர்களின் பெயரை மாறி, மாறி ஒலிபரப்பிக் கொண்டே இருக்கிறது.
இதன் மூலம் பயணிகள் எங்கு நின்றாலும் சத்தம் கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பஸ்சில் ஏறி பயணிப்பதற்கு வசதியாக அமைந்து உள்ளது.
அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் நடைமுறைக்கு வந்து உள்ள இந்த குரல் ஒலிபரப்பு சாதனம், கண்டக்டர்களின் பணிப்பளுவை குறைக்கும் வகையில் உள்ளது.
இதுகுறித்து கோவை அரசு பஸ் கண்டக்டர்கள் கூறியதாவது:-
பஸ்சில் ஏறுவோருக்கு டிக்கெட் போடுவது, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, பயணிகளை பத்திரமாக ஏற்றி இறக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் பஸ் நிலையத்திற்குள் ஏகப்பட்ட சத்தம்-கூச்சல்களுக்கு மத்தியில் ஊர்கள் பெயரைக் கூறி பயணிகளை கூவி கூவி அழைத்து வந்தோம். இதனால் எங்களுக்கு தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன. தற்போது தானியங்கி மைக் ஒலிபரப்பு சாதனம் எங்களின் பணிப்பளுவை வெகுவாக குறைத்து உள்ளது மகிழ்ச்சி தருகிறது. பயணிகளும் மகிழ்ச்சியுடன் பஸ்சில் ஏறி பயணிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தூய்மை பணியாளர்கள் என்பதை விட தூய்மை உள்ளம் கொண்ட பணியாளர்கள் என கூற வேண்டும்.
- மத பிரிவினை, சாதி பிரிவினை எண்ணங்கள் பெரியார் மண்ணில் ஒரு போதும் ஈடேறாது.
சென்னை:
சென்னை எழும்பூரில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தூய்மை பணியாளர்கள் என்பதை விட தூய்மை உள்ளம் கொண்ட பணியாளர்கள் என கூற வேண்டும்.
* களப்பணியில் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க முழு முதல் காரணம் தூய்மை பணியாளர்கள் தான்.
* தூய்மை பணியாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
* மத பிரிவினை, சாதி பிரிவினை எண்ணங்கள் பெரியார் மண்ணில் ஒரு போதும் ஈடேறாது.
* இதுதான் பெரியார் மண்ணா? இதுதான் அம்பேத்கர் மண்ணா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
* சாதி, மதமற்ற சமத்துவ சமூகத்தை படைப்பதுதான் திமுகவின் இலக்கு என்று அவர் கூறினார்.
- ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தும் திட்டத்தை மின்சார வாரியமே செயல்படுத்துவதில் என்ன சிக்கல்? என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
- ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் ஒரு வகையான சீர்திருத்தம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் வழங்கக் கூடும் என்று வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட காலத்திற்கும் இன்றைக்கும் இடையிலான சூழல்கள் மிகப்பெரிய அளவில் மாறியிருக்கும் நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் குறிப்பிடப்பட்ட விலையில் ஸ்மார்ட் மீட்டர்களை வாங்கக்கூடாது.
அதானி குழும நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டிருப்பதால், அதற்கு ஒப்பந்தம் வழங்கப்படலாம் என்பதை மேலோட்டமாகப் பார்க்கும் போது, சரியான முடிவு தானே என்று தோன்றலாம். ஆனால், ஸ்மார்ட் மீட்டர் குறித்த முழுமையான விவரங்களை நன்றாக அறிந்தவர்களுக்குத் தான் இதன் பின்னணியில் உள்ள குறைகள் தெரியும். ஸ்மார்ட் மீட்டர்கள் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை புதிய தத்துவமாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதானி குழுமம் ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு எவ்வளவு விலை குறிப்பிட்டிருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் துல்லியமாக வெளியாகவில்லை.
ஸ்மார்ட் மீட்டர்களை பராமரிப்பதற்கான காலம் 7 ஆண்டுகளா அல்லது 10 ஆண்டுகளா? என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஒருவேளை ஒப்பந்தக்காலம் 7 ஆண்டுகளாக இருந்து, ஒரு மீட்டருக்கு வசூலிக்கப்படவிருக்கும் தொகை ரூ.125 என்று வைத்துக் கொண்டால், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் முன்பணமாக வழங்கப்பட்ட தொகை இல்லாமல், ஒவ்வொரு மீட்டருக்கும் கூடுதலாக ரூ.10,500 வசூலிக்கப்படும். அதுவே ஒப்பந்தக்காலம் 10 ஆண்டுகளாக இருந்தால், ரூ.15,000 ஆகும். மாதாந்திர தொகையை குறைப்பது குறித்து அதானி குழுமத்துடன் பேச்சு நடத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி 10 சதவீதம் குறைக்கப்பட்டாலும் கூட, அதானி குழுமத்திற்கு செலுத்தப்படும் தொகை மிகவும் அதிகமாகவே இருக்கும். இதை நேரடியாக நுகர்வோரிடமிருந்து மின் வாரியம் வசூலிக்காவிட்டாலும், கட்டண உயர்வு உள்ளிட்ட மறைமுக வழிகளில் வசூலித்து விடும்.
ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தும் திட்டத்தை மின்சார வாரியமே செயல்படுத்துவதில் என்ன சிக்கல்? என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு மத்திய அரசின் சார்பில் சராசரியாக ரூ.900 மானியம் வழங்கப்படும் நிலையில், அத்துடன், ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள மீட்டருக்கான கட்டணத்தையும் சேர்த்து கழித்து விட்டால், ஒவ்வொரு ஸ்மார்ட் மீட்டருக்கும் நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகை ரூ.2000 முதல் ரூ.2500 என்ற அளவில் தான் இருக்கும்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் ஒரு வகையான சீர்திருத்தம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அதையே காரணம் காட்டி, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி, பராமரிப்பதில் அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது.
எனவே, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோரப்பட்ட அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையும் மின்வாரியம் ரத்து செய்ய வேண்டும். மின்வாரியமே வெளிப்படையான போட்டி ஏல முறையில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்து மின் இணைப்புகளுக்கு பொருத்த வேண்டும்.
அதற்கு மாறாக, தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஒப்பந்தம் வழங்கப்பட்டால், அதை எதிர்த்து தமிழக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
- தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விக்கிரவாண்டியில் விஜய் பேசியது அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜெயங்கொண்டம்:
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 10-க்கும் மேற்பட்ட உயிர்களும், ஏராளமான கால்நடைகளும், விவசாய பயிர்களும் அழிந்துள்ளன.
இதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அண்டை மாநிலமான புதுச்சேரியில் ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.
ஆகவே தமிழ்நாடு அரசும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார். இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் ராணுவம் போல போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க என்னை ஒரு மாதத்திற்கு முன்பாகவே அழைத்திருந்தார்கள்.
இருந்தபோதிலும் நான் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளேன். புத்தக வெளியீட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
விக்கிரவாண்டியில் விஜய் பேசியது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் சாயம் பூசியதால் சிக்கல் எழுந்தது.
நானும் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றால் அரசியல் சாயம் பூசப்படும். விஜய் மட்டும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கட்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். விஜய்க்கும் எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை, முரண்பாடும் இல்லை.
ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக பேசி வருவது அவரது தனிப்பட்ட கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.






