என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சமத்துவ சமூகத்தை படைப்பதுதான் திமுக-வின் இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தூய்மை பணியாளர்கள் என்பதை விட தூய்மை உள்ளம் கொண்ட பணியாளர்கள் என கூற வேண்டும்.
- மத பிரிவினை, சாதி பிரிவினை எண்ணங்கள் பெரியார் மண்ணில் ஒரு போதும் ஈடேறாது.
சென்னை:
சென்னை எழும்பூரில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தூய்மை பணியாளர்கள் என்பதை விட தூய்மை உள்ளம் கொண்ட பணியாளர்கள் என கூற வேண்டும்.
* களப்பணியில் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க முழு முதல் காரணம் தூய்மை பணியாளர்கள் தான்.
* தூய்மை பணியாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
* மத பிரிவினை, சாதி பிரிவினை எண்ணங்கள் பெரியார் மண்ணில் ஒரு போதும் ஈடேறாது.
* இதுதான் பெரியார் மண்ணா? இதுதான் அம்பேத்கர் மண்ணா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
* சாதி, மதமற்ற சமத்துவ சமூகத்தை படைப்பதுதான் திமுகவின் இலக்கு என்று அவர் கூறினார்.
Next Story






