என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சமத்துவ சமூகத்தை படைப்பதுதான் திமுக-வின் இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    சமத்துவ சமூகத்தை படைப்பதுதான் திமுக-வின் இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • தூய்மை பணியாளர்கள் என்பதை விட தூய்மை உள்ளம் கொண்ட பணியாளர்கள் என கூற வேண்டும்.
    • மத பிரிவினை, சாதி பிரிவினை எண்ணங்கள் பெரியார் மண்ணில் ஒரு போதும் ஈடேறாது.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தூய்மை பணியாளர்கள் என்பதை விட தூய்மை உள்ளம் கொண்ட பணியாளர்கள் என கூற வேண்டும்.

    * களப்பணியில் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க முழு முதல் காரணம் தூய்மை பணியாளர்கள் தான்.

    * தூய்மை பணியாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

    * மத பிரிவினை, சாதி பிரிவினை எண்ணங்கள் பெரியார் மண்ணில் ஒரு போதும் ஈடேறாது.

    * இதுதான் பெரியார் மண்ணா? இதுதான் அம்பேத்கர் மண்ணா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

    * சாதி, மதமற்ற சமத்துவ சமூகத்தை படைப்பதுதான் திமுகவின் இலக்கு என்று அவர் கூறினார்.

    Next Story
    ×