என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • செப்டிக் டேங்கின் தருப்பிடித்த இரும்பு மூடியின் மீடி நின்றபோது சிறுமி விழுந்து விபத்து.
    • குழந்தையின் சடல்ததை கைப்பற்றியதுடன், பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் கைது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து யுகேஜி படித்து வந்த 5 வயது சிறி உயிரிழந்துள்ளது.

    செப்டிக் டேங்கின் தருப்பிடித்த இரும்பு மூடியின் மீடி நின்றபோது இந்த விபத்து நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    குழந்தையின் சடல்ததை கைப்பற்றியதுடன், பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் கைது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், குழந்தையின் இறப்பிற்கு பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும்" என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை காட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வந்த மூன்றரை வயது சிறுமி லியா லட்சுமி கழிவுநீர் தொட்டி விழுந்து உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

    எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமையாகும். குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளி முழு பொறுப்பேற்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் விரும்பதகாத சம்பவம் ஏற்படுத்திய பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறப்பிட்டுள்ளார்.

    • தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு இரங்கல்.
    • பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவு.

    விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த குழந்தை லியா லக்ஷ்மி (வயது 5) த/பெ.பழனிவேல் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் இன்று (03.01.2025) பிற்பகல் பள்ளியிலிருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை லியா லக்ஷமியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு.
    • பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றச்சாட்டு.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பாக தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

    குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.

    இவ்வாறு பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர் டொமினிக் மேரி, யுகேஜி வகுப்பு ஆசிரியை ஏஞ்சல், தாளாளர் எமால்டா ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பான தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

    குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.

    இவ்வாறு பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தனியார் பள்ளிகள் இயக்குனர் முத்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    • குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது.
    • ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பான தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

    லஞ்ச் முடிந்து 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. சிறுமி மதியம் 2 மணிக்கு ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் எனக் கூறி வக்குப்பறையில் இருந்த வெளியேறினார். 2.05 வரை சிறுமி திரும்பாததால் ஆசிரியர் ரெஸ்ட் ரூம் சென்று பார்த்தபோது சிறுமி அங்கு இல்லாததால் தேட ஆரம்பித்தார்கள்.

    எல்லா வகுப்பறையிலும் பார்த்தோம். எங்கேயும் இல்லை. பின்னர் கழிவுநீர் தொட்டி அருகே சென்று பார்க்கும்போது, கம்பி வலை எடுக்கப்பட்டிருந்தது. உடனே கழிவுநீர் தொட்டியை பார்க்கும்போது உள்ளே சிறுமியின் செருப்பு கிடந்தது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் தொட்டியில் பார்க்கும்போது குழந்தை உள்ளே விழுந்தது தெரியவந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என தலைமை ஆசிரியர் கூறுகிறார்.

    மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக தலைமை ஆசிரியர் கூறிய நிலையில், சிறுமியை ஒருவர் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.

    ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சிசிடிவி-யில் 2.40 மணி எனக் காட்டுகிறது. குழந்தையை கழிவுநீர் தொட்டியில் இருந்து தூக்கிய பிறகு சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏன்? என்ற கேள்வி எழும்புகிறது.

    மேலும், கழிவு நீர் மேடான பகுதியில் உள்ளது. UKG சிறுமியால் மேடான பகுதியில் ஏற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது?

    அத்துடன் சிறுமியின் ஆடை நணையாமல் இருந்துள்ளது. கழிவுநீர் தொட்டியில் விழுந்தால் எப்படி ஆடை நணையாமல் இருக்கும். மேலும், கழிவுகள் ஆடையில் ஒட்டாமல் இருக்குமா?. ஆடையில் கழிவு ஒட்டியதற்கான அடையாளம் இல்லை.

    குழந்தையை தூக்கிச் செல்லும் நபர் எந்தவித பதற்றமின்றி சாதாரணமாக தூக்கிச் செல்கிறார். குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி மட்டுமே சிசிடிவி காட்சியில் இடம் பெற்றுள்ளது.

    தலைமை ஆசியர் கூறியதற்கும் சிசிடிவி காட்சியில் தெரியும் நேரத்திற்கும் மாறுபாடு உள்ளது. சிறுமி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரண் தகவலை தெரிவிப்பதாகவும், சிறுமி உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    • தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து உயிரிழப்பு.
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படுவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்யவேண்டும்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளியில் குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள புனித மேரி தனியார் பள்ளியில் மூடி உடைந்ததால், திறந்த நிலையில் கிடந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி, பல மாதங்களாகவே துருப்பிடித்து உடைந்த நிலையில் கிடப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககமும், பிற அரசு அமைப்புகளும் ஆய்வு செய்து உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அமைப்புகள் அவற்றின் கடமையை செய்யத் தவறியதன் விளைவாகவே மூன்றரை வயது குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

    தங்களின் வளாகத்திலேயே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியாக செய்யத் தவறிய தனியார் பள்ளிகள் தான், அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி வழங்கப் போவதாக கூறுகின்றன. அதையும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அகமகிழ்ந்து வரவேற்கிறார். அரசுப் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளிடம் இருந்து ஏதேனும் உதவி கிடைக்குமா என்று ஏங்குவதைவிடுத்து, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பலி வாங்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படுவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்யவேண்டும்.

    மூன்றரை வயது குழந்தையின் உயிரிழப்புக் காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 5ம் தேதி அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
    • மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

    சென்னையில் வரும் 5ம் தேதி நடைபெற இருக்கும் மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 5.1.2025(ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Fresh Works Chennai Marathon உடன் இணைந்து, அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயணத்தை வழங்குவதற்காக, மெட்ரோ ரெயில் சேவைகள், வருகின்ற 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும்.

    மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

    வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.

    மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இயக்கப்படும் சிறப்பு ரெயில் குறித்து அறிவிப்பு.
    • ஜன் சதாப்தி சிறப்பு அதி விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி, தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி, தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி, ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஜன் சதாப்தி சிறப்பு அதி விரைவு ரயில் இயக்கம்; மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆம் தேதிகளில் மாலை 5.35 மணிக்கு சிறப்பு ரயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது.

    ரெயில் எண். 06190/06191 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் – திருச்சிராப்பள்ளி ஜன் சதாப்தி அதிவிரைவு சிறப்பு ரயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் விவரம் பின்வருமாறு.

    திருச்சியில் இருந்து மாலை 5.35 க்கு புறப்படும் இந்த ரயில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திரிபாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இரவு 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல் தாம்பரத்திலிருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு திருச்சி சென்றடையும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பலிக்கு காரணமான அலட்சிய அலுவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டுள்ளனர்
    • அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விக்கிரவாண்டி பகுதியில் உள்ள செயிண்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் சிறுமி லியா லெட்சுமி UKG படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியாகினார்.

    குழந்தை பலியான சம்பவத்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குழந்தை பலிக்கு நீதி கேட்டும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

    மேலும் பலிக்கு காரணமான அலட்சிய அலுவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • முக்கிய ஆவணங்கனை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை அடுத்து அவரது வீட்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமைச்சர் துரைமுருகன் வீடு, அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்

    இந்நிலையில், வேலூர் மாவட்டம் பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

    இதில், முக்கிய ஆவணங்கனை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    திமுக எம்பி கதிர் ஆனந்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் 90 சதவீதம் அதாவது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
    • கடையடைப்பு போராட்டம் காரணமாக கோடிக்கணக்கான வர்த்தகம் முடங்கியது.

    நகராட்சியில் டிரேடு லைசென்ஸ் என்ற பெயரில் வருடம் தோறும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விதித்துள்ள கட்டணத்தை குறைக்க வேண்டும். கடை மற்றும் வீட்டு வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மின்சார கணக்கெடுப்பை மாதம் ஒருமுறை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் ஆல் டிரேடர்ஸ் அசோசியேசன் சார்பில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி கோபிசெட்டிபாளையம் பகுதியில் 90 சதவீதம் அதாவது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.பஸ் நிலையப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.


    இதே போல் கடைவீதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டல்கள், மளிகை கடைகள், நகைக் கடைகள், ஜவுளி

    க்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கடையடைப்பு போராட்டம் காரணமாக கோடிக்கணக்கான வர்த்தகம் முடங்கியது. இதே போல் கோபிசெட்டிபாளையத்தில் இன்று காலை முதல் மாலை வரை தியேட்டரில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

    • ரூ.100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
    • இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளன.

    திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    ரூ.100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

    இதுகுறித்து தமிமழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இந்தியாவிலேயே அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு பாராட்டியுள்ளது.

    தமிழ்நாட்டில் நெல், அரிசி உட்பட அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு நிலவரங்களை எப்போதும் சீராக நிர்வகித்திட உதவும் வகையில் வெளிச் சந்தை வர்த்தகம் உட்பட அனைத்து வர்த்தக நடவடிக்கைளையும் மேற்கொள்வதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1956ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின்படி 23.2.1972 அன்று நிறுவப்பட்டது.

    தமிழ்நாட்டு மக்களுக்குக் குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கியது உட்படப் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களால் தமிழ்நாட்டிலிருந்து வறுமை முற்றிலும் அகற்றப்பட்டு மக்கள் பசிப்பிணி ஒழிந்து வளமான வாழ்வில் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

    ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகள் வாயிலாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது.

    கடந்த 40 மாதங்களில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கியப் பணிகள் விவரம் :

    உணவு பொருள் வழங்கல் துறை குறை தீர்ப்புப் பணிகள்

    மாதாந்திர பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்கள் நடத்தப்பட்டு நகல் அட்டை, புதிய குடும்ப அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல். உள்ளிட்ட 1 இலட்சத்து 83 ஆயிரத்து 610 கோரிக்கைகள் பெறப்பட்டு அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நிவாரணத் தொகையாக ரூ.4,000/- வீதம் 2 கோடியே 8 இலட்சத்து 14 ஆயிரத்து 528 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

    கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நியாய விலைக் கடைகளின் மூலம்

    14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு 2 கோடியே 7 இலட்சத்து 70 ஆயிரத்து 726 அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களைத் தகுதியான பயனாளிகளுக்கு அளிக்கும் பொருட்டு கைவிரல் ரேகை பதிவு முறை ஏற்படுத்தப்பட்டு, ஆதார் எண்கள் குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன.

    புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரைப்படி, ஏழை எளிய பொதுமக்களின் வசதிக்காக அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 633 முழுநேர நியாய விலைக் கடைகளும், 1,033 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 1,666 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. 31.12.2023 வரை நியாய விலைக் கடைகளின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழலை மேம்படுத்துவதற்கான பணிகள் 2,778 நியாய விலைக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு

    2023ஆம் ஆண்டு சர்வதேசச் சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபையினால் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறுதானிய உணவுத் திருவிழா நிகழ்ச்சிகள் ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு மக்களிடையே சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு வளர்க்கப்பட்டது. விவசாயிகள் விளைவிக்கும் நெல்லினை இடைத்தரகர்கள் தலையீடின்றியும் கால தாமதமின்றியும் உடனடியாக விற்பனை செய்யும் பொருட்டு ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு 1 கோடியே 8 இலட்சத்து 35 ஆயிரத்து 621 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    விருப்பப்படி அரிசிக்குப் பதில் கோதுமை

    அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கிலோ வீதமும். ஏனைய பகுதிகளில் 5 கிலோ வீதமும் நியாய விலைக் கடைகளின் இருப்பைப் பொறுத்து அவர்களது விருப்பத்தின்படி அரிசிக்குப் பதிலாகக் கோதுமை விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதுவரை 7 இலட்சத்து 23 ஆயிரத்து 482 மெ.டன் கோதுமை விலையில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்குவழங்கப்பட்டுள்ளது.

    புயல் பாதித்தபோது திராவிட மாடல் அரசு வழங்கிய நிவாரணம்

    கடந்த 2023 ஆம் ஆண்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையினால், சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6,000/- வீதம் வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபடி 23 இலட்சத்து 18 ஆயிரத்து 200 குடும்பங்களுக்கு ரூ.1,390.92 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

    தென் மாவட்டங்கள் புயலால் பாதித்தபோது வழங்கப்பட்ட நிவாரணம்

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபடி 17.12.2023, 18.12.2023 ஆகிய இரு தினங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிகன மழையினால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள் / பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்களை இழந்த 6 இலட்சத்து 36 ஆயிரத்து 971 குடும்பங்களுக்கு ரூ.6,000/- மற்றும் 5 கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், இதர வட்டங்களில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மொத்தம் 13 இலட்சத்து 34 ஆயிரத்து 561 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000/- வீதம் 92சதவீதப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    கருணை அடிப்படையில் நியமனங்கள்

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணியின்போது இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில்

    233 பேர்களுக்குப் பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒப்பந்தப் பணியாளர் நிரந்தரம்

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் பருவகாலப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வந்தவர்களுக்கு 12(3) ஒப்பந்தத்தின் அடிப்படையில் 591 பணியாளர்கள் நிரந்தரப் பணியாளர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கட்டடங்கள்

    திராவிட மாடல் அரசு விவசாயிகளின் நலன் கருதி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குப் படிப்படியாகக் கட்டடங்களைக் கட்டி வருகிறது. 40 மாதங்களில் 230 நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு, இதுவரை 130 நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எஞ்சியவற்றின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

    முதலமைச்சர் அவர்களின் கருணை மனம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படும் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்ற கருணை மனதோடு 358.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 259 மேற்கூரை அமைப்புடன்கூடிய நெல் சேமிப்புத் தளங்களை நிறுவ ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, 213 நெல் சேமிப்புத் தளங்கள் கட்டப்பட்டு எஞ்சியவை கட்டப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டிற்கு முதல் பரிசு

    புதுடெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புப் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது.

    இப்படி ஒவ்வொரு துறையிலும் பாராட்டுகளைப் பெற்றுவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதற்காகப் புதிய பல திட்டங்கள் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திச் சாதனைகள் நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×