என் மலர்
நீங்கள் தேடியது "Fair Price Shop"
- நியாய விலை கடையை தி.மு.க. மாவட்டச் செயலாளர் திறந்து வைத்தார்.
- 1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சி 99-வது வார்டுக்கு உட்பட்ட பாம்பன் நகரில் நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. தி.மு.க. பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சுவிதா விமல் முன்னிலை வகித்தார்.புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நியாய விலை கடையை திறந்து வைத்தார்.
மேலும் அவர் முதியோர்களுக்கு உதவித்தொகை, 1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சிவனம்மாள், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் மதன்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தென்பழஞ்சி சுரேஷ், வட்டச்செயலாளர் சாமிவேல், பரமேஷ் பாபு, இளங்கோவன் சுந்தரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் சூலக்கரையில் பகுதி நேர நியாயவிலை கடைைய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
- 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் கூட்டுறவுத்துறை மூலம் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேசன் பொருட்களையும், 3 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டிகளையும் வழங்கினார்.
பின்பு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 725 முழு நேர நியாய விலை கடைகளும், 270 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் இயங்கி வருகின்றன. மேலும் 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் 6 லட்சத்து 10 ஆயிரத்து 845 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6 லட்சத்து 248 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் சூலக்கரை பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, பகுதி நேர நியாயவிலைக் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடையின் மூலம் 310 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, அருப்புக்கோட்டை யூனியன் தலைவர் சசிகலா, வட்டாட்சியர் அறிவழகன், வட்ட வழங்கல் அலுவலர் ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- ராஜபாளையம் அருகே நியாயவிலை கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
- இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள முத்துசாமியாபுரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைய இருக்கும் நியாய விலை கடை கட்டித்திற்கான பூமி பூஜை நடந்தது.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து பொதுநிதியிலிருந்து ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கணேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரி தாலுகா எஸ்.மாத்தூர் ஊராட்சியில் நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது.
- இதில் கூட்டுறவு சங்கத் தலைவர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள எஸ்.மாத்தூர் ஊராட்சியில் நியாய விலை கடை திறப்பு நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா சதாசிவம் தலைமை தாங்கினார். சிங்கம்புணரி யூனியன் ஆணையாளர் லட்சுமணன் ராஜ் முன்னிலை வகித்து கடையை திறந்து வைத்தார். இதில் கூட்டுறவு சங்கத் தலைவர் துரைப்பாண்டியன், துணைத் தலைவர் ஜானகிராமன், வருவாய் ஆய்வாளர் முரளி, கிராம நிர்வாக அலுவலர் செல்வம், மன்ற துணைத் தலைவர் மனோகரன், நியாயவிலைக் கடை மேலாளர் சங்கர் மற்றும் கவுன்சிலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கிராம மக்கள் பங்கேற்றனர்.
- நியாய விலை கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
- ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சி கீழவரகுணராமபுரம் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலைக்கடை அமைக்கும் பணிக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.. யூனியன் சேர்மன் சிங்கராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி கிளைச்செயலாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.