என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியாய விலைக்கடை"

    • இருப்பு மற்றும் நுகர்வின் அடிப்படையில் 20-ந்தேதிக்குள் அனைத்துப் பொருள்களும் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.
    • ஆனாலும் 15.11.2025-க்குள் 100% கோதுமையும் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.

    உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இன்று ஒரு நாளிதழில் வந்த செய்தியை வைத்து எடப்பாடி பழனிசாமி 12,573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருக்கிறார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

    ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை கோதுமை ஒதுக்கீடு மாதம் 8,576 மெட்ரிக் டன் மட்டுமே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வந்தது.

    தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி தமிழ்நாட்டிற்கான கோதுமை ஒதுக்கீட்டினை உயர்த்திட ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 8,576 மெட்ரிக் டன்னிலிருந்து 17,100.38 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுப் பொது மக்களுக்குத் தங்குதடையின்றி நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    தற்போது மார்ச் 2025 முதல் கோதுமை ஒதுக்கீட்டைப் பழைய அளவிற்கே குறைத்துத் தற்போது மாதம், 8,576 மெட்ரிக் டன் கோதுமை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 2025 மாதத்திற்கு 8722 மெட்ரிக் டன் கோதுமை மாவட்டங்களுக்கு நுகர்வின் அடிப்டையில் உப ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கடந்த மூன்று மாதங்களில் கோதுமையின் நுகர்வு சதவீதம் சராசரியாக 92% எனப் பதிவாகி உள்ளது. நவம்பர் மாதத்தில் 08.11.2025 வரை 63% (5,386 மெட்ரிக் டன்) கோதுமை நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யபட்டுள்ளது.

    இருப்பு மற்றும் நுகர்வின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 20-ஆம் நாளுக்குள் அனைத்துப் பொருள்களும் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனாலும் 15.11.2025-க்குள் 100% கோதுமையும் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வழக்கம்போல் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்.

    நடப்புக் குறுவைப் பருவத்தில் 9/11/25 வரை 1923 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 13.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1.75 லட்சம் விவசாயிகளுக்கு ரூ3249.38 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் கடைசி ஆண்டில் இதே காலகட்டத்தில் 4.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. அவர் ஆட்சியில் பொது ரகத்திற்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூ.1918, சன்ன ரகத்திற்கு ரூ1958 மட்டுமே வழங்கப்பட்டது.

    ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 2500, சன்ன ரகத்திற்கு ரூ2545 வழங்கப்பட்டு வருகிறது.

    ஆதலால் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றிலும் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சக்கரபாணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 8,15,484 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • புதிய பகுதி நேர நியாய விலைக்கடையானது வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பாப்பினி ஊராட்சி பச்சாபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடையை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 8,15,484 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. வரதப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ள காங்கேயம் வட்டத்தில் 2 முழு நேர விலைக்கடைகளும் தற்போது பச்சாபாளையம் பகுதி நேர நியாய விலைக்கடையுடன் சேர்த்து மொத்தம் 2 முழு நேர நியாய விலைக்கடை மற்றும் 1 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் சேர்த்து மொத்தம் 3 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    வரதப்பம்பாளையம் முழு நேர நியாய விலைக்கடையில் 746 குடும்ப அட்டைகளில் 140 குடும்ப அட்டைகளை பிரித்தும் பாப்பினி முழு நேர நியாய விலைக்கடையில் 848 குடும்ப அட்டைகளில் 289 குடும்ப அட்டைகளை பிரித்து 429 குடும்ப அட்டைகளுடன் பச்சாபாளையத்தில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய பகுதி நேர நியாய விலைக்கடையானது வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுசங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • அரியலூர் நியாய விலைக்கடைகளில் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை தொடங்கபட்டது
    • விற்பனையினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் கூட்டுறவு நியாய விலைக்கடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், இது பற்றி அவர் கூறும்போது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 465 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் நகர்ப்பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் வரவேற்பினைப் பொறுத்து கிராமபுறங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, துணைப்பதிவாளர் அறப்பளி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் துரை மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வரலொட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடை- அங்கன்வாடியில் கலெக்டர் ஜெயசீலன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    • அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், வரலொட்டி கிரா மத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்புகள் மற்றும் அவை களின் தரம் குறித்து கேட்ட றிந்தார்.

    பின்னர் அங்குள்ள கிராம அங்கன்வாடி மையத் தில் குழந்தைகள் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு மற்றும் அதன் தரம் குறித்து கேட் டறிந்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள், கட்ட மைப்புகள், மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள், குழந் தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×