search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் நியாய விலைக்கடைகளில் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை
    X

    அரியலூர் நியாய விலைக்கடைகளில் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை

    • அரியலூர் நியாய விலைக்கடைகளில் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை தொடங்கபட்டது
    • விற்பனையினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் கூட்டுறவு நியாய விலைக்கடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், இது பற்றி அவர் கூறும்போது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 465 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் நகர்ப்பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் வரவேற்பினைப் பொறுத்து கிராமபுறங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, துணைப்பதிவாளர் அறப்பளி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் துரை மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×