என் மலர்tooltip icon

    கேரளா

    • இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    இந்த சீசனில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    அதன்படி ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.


    திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அடையாள சின்னத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.

    மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 'சுவாமி சாட்பாட்' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஐயப்ப பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    இந்த செயலி மூலம் சபரிமலை கோவில் நடை திறப்பு, அடைப்பு, சிறப்பு பூஜை விவரம், அருகில் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய முழு விவரங்களையும் பக்தர்கள் அறிந்து கொள்ளலாம்.

    • நட்சத்திர வேட்பாளரான பிரியங்கா காந்தி 3 கட்டங்களாக பிரசாரம் செய்தார்.
    • அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களில் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.

    திருவனந்தபுரம்:

    மக்களவை தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார். அவர் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பலத்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பாரதிய ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிட்டனர்.

    வயநாடு தொகுதியை பொருத்தவரை காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக் கிடையே தான் கடும் போட்டி நிலவியது. இதனால் அந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நட்சத்திர வேட்பாளரான பிரியங்கா காந்தி 3 கட்டங்களாக பிரசாரம் செய்தார்.

    அவருடன் அவரது சகோதரரான ராகுல் காந்தியும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர்கள் பிரசாரம் சென்ற இடங்களில் எல்லாம் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு அதிக வாக்குகள் கிடைக்கக்கூடும் என்றும், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

    தேர்தலுக்கு முந்தைய பல கணிப்புகளிலும் அவ்வாறே கூறப்பட்டன. ஆனால் வயநாடு இடைத்தேர்தலில் கடந்த தேர்தல்களை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது. வாக்குப்பதிவு தொடங்கிய போது வாக்காளர்கள் ஆர்வமாக வந்து ஓடடுப் போட்ட நிலையில், நேரம் செல்லச்செல்ல வாக்காளர்களின் வருகை எதிர்பார்த்தபடி இல்லை.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களில் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது. அங்கு 14 லட்சத்து 71 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ள நிலையில், 64.69 சதவீத வாக்குகளே பதிவாகின. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் 80.33 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியிருந்தது.

    கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 73.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதனை ஒப்பிடுகையில் தற்போது நடந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு 8.79 சதவீதம் குறைந்திருக்கிறது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பிரசாரத்தின் போது காணப்பட்ட உற்சாகம் கூட, நேற்று நடந்த இடைத்தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் காணப்படவில்லை.

    வயநாடு மக்களவை தொகுதியில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. இளம் வயதினர் பலர் மேற்படிப்புக்காக வெளி நாடுகளில் இருப்பதால், வாக்குச்சாவடிகளுக்கு இளைஞர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு இது ஒரு காரணமாக கருதப்படுகிறது.

    அதே நேரத்தில் கடந்த மே மாத இறுதியில் நடந்த வயநாடு நிலச்சரிவு அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை என்பதன் வெளிப்பாடாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. நிலச்சரிவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மேப்பாடியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மிக குறைந்த வாக்காளர்களே ஓட்டுப்போட வந்தனர்.

    அவ்வாறு வந்தவர்களும் சோகத்துடனே காணப்பட்டனர். இப்படி பல்வேறு காரணங்களால் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்திருக்கிறது. வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. எப்படியும் வயநாடு தேர்தல் களத்தில் வெற்றிவாகை சூடப்போவது யார்? என்பது ஓட்டுக்கள் எண்ணிக்கை நடைபெற இருக்கும் வருகிற 23-ந்தேதி தெரிந்துவிடும்.

    • பக்தா்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசுடன் இணைந்து திருவிதாங்கூா் தேவசம்போர்டு செய்து வருகிறது.
    • திருவனந்தபுரத்தில் முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்செயலியின் இலச்சினையை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதந்தோறும் நடை திறக்கப்படும் குறிப்பிட்ட சில நாள்களில் நாடெங்கும் இருந்து பக்தா்கள் வந்து தரிசித்து செல்வது வழக்கம். கார்த்திகை மாதம் 1-ந்தேதி (16-ந்தேதி) தொடங்கும் மண்டல பூஜை மற்றும் சிறிய இடைவெளியைத் தொடா்ந்து மகரவிளக்கு யாத்திரை சமயத்தில் லட்சக்கணக்கான பக்தா்கள் சபரிமலையில் திரள்வா்.

    கூட்டநெரிசலைத் தடுக்க நிகழாண்டு தினசரி இணைய வழியில் பதிவு செய்த 80,000 பக்தா்களுக்கும் நேரடியாக வரும் 10,000 பக்தா்களுக்கும் மட்டுமே அனுமதியளிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. பக்தா்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசுடன் இணைந்து திருவிதாங்கூா் தேவசம்போர்டு செய்து வருகிறது.

    அந்த வகையில், ஏஐ மூலம் பக்தா்களுக்குத் துல்லிய தகவல்களை வழங்கும் சுவாமி ஏஐ சாட் பாட் செயலியை முத்தூட் குழுமத்தின் ஒத்துழைப்போடு பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

    திருவனந்தபுரத்தில் முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்செயலியின் இலச்சினையை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.

    இது தொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'சுவாமி ஏஐ சாட்பாட் செயலியை பக்தா்கள் தங்கள் அறிதிறன் பேசிகளில் நிறுவி, ஏஐ மூலம் உரையாடலில் தகவல்களைக் கேட்டு பெறலாம். பூஜை நேரங்கள், ரெயில் மற்றும் விமான நிலைய வசதிகள் பற்றிய விரிவான தகவல்களை மலையாளம், தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சாட்பாட் வழங்கும்.

    இந்த ஆண்டு புனித யாத்திரை காலத்தில் ஐயப்ப பக்தா்களுக்கு மிகவும் வசதியான, துல்லியமான மற்றும் பாதுகாப்பான யாத்திரை அனுபவத்தை சாட்பாட் உறுதி செய்யும். இச்செயலி விரைவில் பக்தா்களின் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கேரளாவின் மிக நீளமான ஜிப்லைனில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பயணம் செய்தார்.
    • அப்போது, தென்னிந்தியாவின் மிகப் பெரிய ராட்சத ஊஞ்சல் என வர்ணித்தார்.

    திருவனந்தபுரம்:

    வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிட்டனர்.

    இதற்கிடையே, பிரியங்கா காந்தி வெற்றி பெற்றால் வயநாடு தொகுதியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.

    இந்நிலையில், கராப்புழா அணைப்பகுதிக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வருகை தந்தனர். அங்கு அமைந்துள்ள கேரளாவின் மிக நீளமான ஜிப்லைனில் ராகுல் காந்தி பயணம் செய்தார்.

    'தென்னிந்தியாவின் மிகப்பெரிய ராட்சத ஊஞ்சல்' என்று வர்ணித்த ராகுல் காந்தி, வயநாடு எப்போதும்போல் பிரமிக்க வைக்கிறது. ஜிப்லைனில் சென்ற ஒவ்வொரு நொடியும் தனக்கு மிகவும் பிடித்துள்ளது என தெரிவித்தார். ராகுல் காந்தியின் ஜிப் லைன் பயணம் குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    • புதிய நடைமுறைகளை தேவசம் போர்டு அறிவித்திருக்கிறது.
    • சாலைகளின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்)-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் (15-ந்தேதி) மாலை திறக்கப்படுகிறது.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகளை தேவசம் போர்டு அறிவித்திருக்கிறது.

    அதன்படி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் 'ஆன்லைன் முன்பதிவு' மற்றும் 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர்.

    அது மட்டுமின்றி பக்தர்கள் தங்களின் இருமுடி கட்டுகளில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் ஆகியவற்றை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஸ்பாட் புக்கிங் கிற்கு ஆதார் அட்டை கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதேபோல் பல்வேறு புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் சபரி மலைக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களின் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பம்பையில் நிறுத்த கோரள கோர்ட்டு அனுமதி வழங்கியிருக்கிறது.

    சபரிமலையில் பக்தர்களுக்கான வசதிகள் தொடர்பான மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அனில் நரேந்திரன், முரளி கிருஷ்ணா உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-

    சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு விழாவில் பம்பை மலை உச்சி மற்றும் சக்குபாலம் பகுதியில் பக்தர்கள் தங்களின் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். அந்த பகுதிகளில் பக்தர்கள் 24 மணி நேரமும் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

    அதேநேரத்தில் சாலைகளின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கேரள அரசு போக்குவரத்து கழகத் துக்கு சொந்தமான 20 பஸ்க ளையும் மலை உச்சியின் தொடக்கத்தில் நிறுத்தலாம். தேவசம்போர்டு மற்றும் காவல்துறை இணைந்து வாகன நிறுத்தத்தை கட்டுப் படுத்த வேண்டும்.

    இந்த அனுமதி தற்காலிக மானது தான். போக்குவரத்து நெரிசல் அல்லது வேறு பிற பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் பம்பையில் வாகனங்கள் நிறுத்தும் முடிவை திரும்பப் பெறலாம். கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க அனைத்து அதிகாரங்களும் காவல் துறைக்கு அனுமதி வழங்கப் படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

    பக்தர்களின் வாகனங்களை பம்பையில் நிறுத்த அனுமதி வழங்கினால் தங்களின் சங்கிலித்தொடர் சேவை பாாதிக்கப்படும் என்று கூறி, அந்த முடிவுக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வாதிட்டது.

    ஆனால் தேவசம் போர்ட்டு தனது தரப்பு வாதத்தை வலுவாக வைத்ததால் பம்பையில் பக்தர்ளின் வாகனங்களை நிறுத்த ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தொகுதி முழுவதும் மொத்தம் 1,354 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
    • காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல்காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    அங்கு காங்கிரஸ் கட்சி யின் சார்பில் ராகுல் காந்தி யின் சகோதரி பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.


    இந்தநிலையில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. இதற்காக தொகுதி முழுவதும் மொத்தம் 1,354 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஒரு சில வாக்குச்சாவடிகளை தவிர, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். பல வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வாக்காளர்கள் வந்து காத்து நின்றதை காண முடிந்தது. ஏராளமான இளம் வாக்காளர்கள் மற்றும் பெண்கள் காலையிலேயே ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்.

    நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். ஓட்டுப்பதிவு தொடங்கிய ஒன்றரை மணி நேரத்தில் வயநாடு மக்களவை தொகுதியில் 6.97 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியிருந்தது.

    காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி கல்பெட்டாவில் உள்ள ஒரு பள்ளியில் செயல்பட்ட வாக்குச்சாவடிக்கு இன்று காலை வந்து ஓட்டுப் பதிவை பார்வையிட்டார்.

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களும் சில வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார்கள்.

    அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

    வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 14 லட்சத்து 71 ஆயிரத்து 742 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.


    வயநாடு மக்களவை தொகுதியில் கடந்த தேர்த லில் ராகுல்காந்தி 6லட்சத்து 47 ஆயிரத்து 445 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் அன்னி ராஜா 2 லட்சத்து 83 ஆயிரத்து 23 வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளர் சுரேந்திரன் 1 லட்சத்து 41 ஆயிரத்து 45 வாக்குகளும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோன்று செலக்கரா சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதாகிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியிலும், பாலக்காடு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆகினர்.

    இதனால் அவர்கள் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக அந்த இரு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    அந்த தொகுதிகளுக்கும் வயநாடு மக்களவை தொகுதியுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் பாலக்காடு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 20-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. செலக்கரா சட்டசபை தொகுதிக்கு மட்டும் இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. அங்கும் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.

    இடைத் தேர்தல் காரணமாக செலக்கரா சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று பொதுவிடுமுறை விடப்பட்டிருந்தது.

    • வேளாண்மை துறை சிறப்பு செயலாளராக இருப்பவர் பிரசாந்த்.
    • புகார்கள் தொடர்பாக விசாரிக்க தலைமை செயலாளருக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில அரசில் தொழில்துறை இயக்குனராக இருப்பவர் கோபால கிருஷ்ணன். வேளாண்மை துறை சிறப்பு செயலாளராக இருப்பவர் பிரசாந்த்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான இவர்கள் மீது அரசுக்கு புகார்கள் வந்தன. மத சார்பின் அடிப்படையில் வாட்ஸ்-அப் குழுவை கோபாலகிருஷ்ணன் உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் இந்து அதிகாரிகள் என்ற வாட்ஸ்-அப் குழுவை ஏற்படுத்தியதற்கு குழுவில் சேர்க்கப்பட்ட சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரசாந்த், கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெயதிலக்கிற்கு எதிராக சமூக ஊடகங்களில் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு இருந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க தலைமை செயலாளருக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

    அதன்படி விசாரணை நடத்திய தலைமை செயலாளர் சாரதா முரளீதரன், சேவை விதிகளுக்கு எதிராக 2 அதிகாரிகளும் செயல்பட்டதால், அவர்கள் மீது விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரை செய்திருந்தார். அதன்பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கோபால கிருஷ்ணன், பிரசாந்த் ஆகியோரை சஸ்பெண்டு செய்து முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்தார்.

    • தொடர் மழை காரணமாக பணிகள் தாமதமானாலும், மண்டல சீசன் தொடங்குவதற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும்.
    • எருமேலியில் வாகனங்களை நிறுத்த கூடுதலாக 6½ ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

    கடந்த காலங்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த காரணத்தால் தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக சில பக்தர்கள் தரிசனம் செய்யாமலேயே திரும்பியதாக கூறப்பட்டது. இதுபோன்ற நிலை வரும் சீசனில் ஏற்படாமல் இருக்க கேரள அரசும், தேவசம் போர்டும் நடவடிக்கை எடுத்துள்ளன. இது தொடர்பாக கேரள தேவசம்போர்டு மந்திரி வாசவன் கூறியதாவது:-

    சபரிமலை வரும் பக்தர்களுக்கு அதிகபட்ச வசதிகள் செய்து தரப்படும். இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தொடர் மழை காரணமாக பணிகள் தாமதமானாலும், மண்டல சீசன் தொடங்குவதற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும்.

    ஆன்லைன் முன்பதிவு தவிர, ஆதார் அட்டையுடன் தினமும் வரும் 10 ஆயிரம் பேருக்கு கூடுதல் சேர்க்கை வழங்க 3 இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்யப்படும். நடைபயணமாக வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க 3 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டோலி தொழிலாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க இந்த சீசனில் ப்ரீபெய்டு டோலி முறை அறிமுகப்படுத்தப்படும்.

    எருமேலியில் வாகனங்களை நிறுத்த கூடுதலாக 6½ ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகள் இந்த சீசனில் செய்யப்படுவதால், எந்த பக்தரும் கோவிலில் தரிசனம் செய்யாமல் மனமுடைந்து திரும்ப வேண்டியதில்லை. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முறைப்படி தரிசனம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    அரவணை பிரசாதம் தட்டுப்பாட்டை தவிர்க்க 40 லட்சம் கண்டெய்னர்களில் இருப்பு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பிரணவ் மோகன்லால் இப்போது ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார்.
    • பிரணவ் மோகன்லால் இப்போது ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார்.

    மலையாள திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் மோகன்லால், திரைப்பட தயாரிப்பாளரான கே.பாலாஜியின் மகளான சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த தம்பதிக்கு விஸ்மயா மோகன்லால் என்ற மகளும் பிரணவ் மோகன்லால் என்ற மகனும் உள்ளனர்.

    FTQ வித் ரேகா மேனன் என்ற மலையாள யூடியூப் நிகழ்ச்சிக்கு சுசித்ரா மோகன்லால் பேட்டி கொடுத்துள்ளார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அப்பு (பிரணவ்) இப்போது ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். தங்குமிடம் மற்றும் உணவுக்காக சம்பவம் எதுவும் வாங்காமல் அவர் வேலை செய்து வருகிறார். அவர் அங்கிருந்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் அந்த அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

    எனக்கு சினிமா பட ஸ்கிரிப்ட்களைக் கேட்பது பிடிக்கும், அதனால் நான் உட்கார்ந்து கேட்கிறேன். அவர் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கிறார். வருடத்திற்கு குறைந்தது 2 படங்களாவது நடிக்குமாறு நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அவர் சினிமா வாழ்க்கை என அனைத்தையும் பேலன்ஸ் செய்ய நினைக்கிறார்.

    அதே சமயம் அவரது அப்பாவுடன் அப்பு சேர்ந்து நடிப்பதை நான் விரும்பவில்லை. இருவரையும் ரசிகர்கள் ஒப்பிட்டு பார்ப்பது தனக்கு பிடிக்காது" என்று தெரிவித்தார்.

    2022 ஆம் ஆண்டு வெளியான ஹிருதயம் திரைப்படத்தின் மூலம் பிரணவ் மலையாள ரசிகர்களிடையே புகழ்பெற்றார். இந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான வர்ஷங்கல்க்கு ஷேஷம் என்ற மலையாளப் படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (13-ந்தேதி) நடைபெறுகிறது.
    • பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் பிரசாரம் செய்தார்.

    மக்களவை தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்தியன் மொகேரி, பாரதிய ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    பிரியங்கா காந்தியை பொருத்தவரை வேட்பு மனு தாக்கல் செய்த தினத்தில் தனது முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். பின்பு கடந்த 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை இரண்டாம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    நேற்று தனது 3-ம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். அதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் வேட்பாளர்களும் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

    வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (13-ந்தேதி) நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் இன்று ஓய்ந்தது. பிரியங்கா காந்தி உள்ளிட்ட வேட்பாளர்கள் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

    பிரியங்கா காந்தி இன்று காலை வயநாடு பத்தேரி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிற்பகல் கோழிக்கோடு திருவம் பாடியில் நடைபெற்ற ரோடு-ஷோவிலும் கலந்து கொண்டார். பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் பிரசாரம் செய்தார். அவர் பிரியங்கா காந்தியுடன் சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான சத்தியன் மொகேரி கல்பெட்டாவில் ரோடு- ஷோவில் பங்கேற்று இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். பாரதிய ஜனதா வேட்பாளர் நவ்யா ஹரி தாஸ் பத்தேரி சுங்கச்சாவடி பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

    பிரசாரம் ஓய்ந்ததையடுத்து பிரசாரத்துக்காக வந்திருந்த தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் வெளியேற தொடங்கினர். வெளி நபர்கள் யாரும் தொகுதியில் தங்கியிருக்கிறார்களா? என்று கண்காணிக்கும் பணியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

    • ஒரு சிறுமி தான் உண்டியலில் சேர்த்த ரூ.3000 பணத்தையும் வயநாடு நிலச்சரிவுக்கு வழங்கினார்.
    • முஜிப் என்ற பெயர் கொண்ட 79 பேர் அங்கிருந்து 2 வாகனங்கள் மூலம் திண்டுக்கல் வந்தனர்.

    திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் முஜிப். இவர் ரவுண்டு ரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட்டு மாதம் 7ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தனது ஓட்டலில் மொய் விருந்து நடத்தினார்.

    ஓட்டலுக்கு வந்தவர்களுக்கு அசைவ உணவு வழங்கியதுடன் விருந்தில் பங்கேற்பவர்கள் தங்களால் இயன்ற நிவாரண தொகையை இலைக்கு அடியில் வைத்து செல்லுமாறு கூறினார். இதனை ஏற்று மொய் விருந்தில் ஏராளமானோர் பங்கேற்று உதவிகள் அளித்துச் சென்றனர். இதில் ஒரு சிறுமி தான் உண்டியலில் சேர்த்த ரூ.3000 பணத்தையும் வயநாடு நிலச்சரிவுக்கு வழங்கினார்.

    இதன் மூலம் கிடைத்த சுமார் ரூ.3.30 லட்சம் நிதியை முஜிப் மற்றும் ஓட்டல் அசோசியேசன் நிர்வாகிகள், ரோட்டரி சங்கத்தினர் கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயனை நேரில் சந்தித்து ஆகஸ்ட்டு 14-ந் தேதி வழங்கினர்.

    அவரது இந்த சேவையை பாராட்டும் வகையில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த முஜிப் என்ற பெயர் கொண்ட 79 பேர் அங்கிருந்து 2 வாகனங்கள் மூலம் திண்டுக்கல் வந்தனர். அவர்களை ஓட்டல் உரிமையாளர் முஜிப் வரவேற்றார்.

    மாநிலம் கடந்தும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய முஜிப்பை அவர்கள் பாராட்டி நினைவு பரிசு மற்றும் கேரள பாரம்பரியம் கொண்ட கேடயத்தை வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் தனது ஓட்டலில் முஜிப் தலைவாழை இலை விரித்து பிரியாணி மற்றும் பல்வகை அசைவ விருந்து வழங்கினார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • வயநாடு தொகுதியில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடியவுள்ளது.
    • இன்று சுல்தான் பத்தேரி பகுதியில் பிரியங்கா காந்தியுடன் இணைந்து ராகுல் காந்தியும் பிரசாரம் மேற்கொண்டார்.

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில், ஏற்கனவே அந்த தொகுதியில் எம்.பியாக இருந்த ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

    அவர் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை கடந்த 2-ந்தேதி தொடங்கினார். அவர் வயநாடு தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும் பல பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பேசினார்.

    பிரசாரத்தின் போது அவர் கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். வயநாடு தொகுதியில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடியவுள்ள நிலையில், சுல்தான் பத்தேரி பகுதியில் பிரியங்கா காந்தியுடன் இணைந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது ராகுல் காந்தி தனது டீ-ஷர்ட் பின்புறம் 'I LOVE WAYANAD' என்று எழுதியிருந்ததை பார்த்து பொதுமக்கள் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோவை கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    ×