என் மலர்tooltip icon

    கேரளா

    • அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது.
    • மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அது மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னிதானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நடைமுறை பக்தர்கள் நெரிசலின்றி சென்று சாமி தரிசனம் செய்வற்கு உதவியாக இருக்கிறது.

    அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட நேரத்தில் வலிய நடை பந்தலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அதன்பிறகு கூட்டம் குறைந்தது. நடைப்பந்தலில் பக்தர்கள் காத்திருக்கும் போது அவர்களுக்கு பிஸ்கட், சுக்கு தண்ணீர் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்படுகிறது. பதினெட்டாம் படியிலும் பயிற்சி பெற்ற போலீசார் நியமிக்கப்பட்டு இருப்பதால், பக்தர்களை விரைவாக படியில் ஏற்றி விடப்படுகிறார்கள்.

    அது மட்டுமின்றி தற்போது கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பக்தர்கள் இருமுடி கட்டுடன் படியேறாமல் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு இருக்கிறது.

    நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் படியேறும் பக்தர்கள், நடை திறக்கப்பட்டதும் சாமி தரிசனம் செய்வதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

    வருகிற நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் அதற்கு தகுந்தாற்போல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்றைய தினம் பூஜைகள் எதுவும் நடக்காவிட்டாலும், அன்றைய தினமே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அன்று முதல் நேற்று(18-ந்தேதி) மாலை வரையிலான 4 நாட்களில் 2.26லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.

    • ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    கேரளா மாநிலம் திருச்சூரில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொடர்ந்து சைரன் சத்தம் எழுப்பியபோதும் கார் ஓட்டுநர் திரும்பத் திரும்ப ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் தடுத்தார்.

    ஆம்புலன்சில் இருந்த மருத்துவ பணியாளர்கள் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ஆம்புலன்சை தடுத்த நபரின் ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்து போலீசார் ரத்து செய்தனர்.

    மேலும் அந்த நபருக்கு போக்குவரத்து ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    • யாத்திரையின்போது தவறாமல் பயன்படுத்தப்படும் மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.
    • யாத்திரையின்போது வெதுவெதுப்பான நீரை மட்டுமே அருந்த வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்(16-ந்தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

    மேலும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமத்துக்கு உள்ளாகாமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்திருக்கிறது. அதன்படி அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை என தினமும் 18 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் சபரிமலை யாத்திரை வரக்கூடிய பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தேவசம் போர்டு வெளியிட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:-

    * சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாத்திரையின்போது மயக்கம் அடைந்தால், பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவ உதவியை பெற தாமதிக்க வேண்டாம்.

    * யாத்திரையின்போது தவறாமல் பயன்படுத்தப்படும் மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும். பக்தர்கள் ஏற்கனவே ஏதேனும் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால், பயணத்தின்போது உரிய மருந்துகள் மற்றும் மருந்துச் சீட்டுகளை உங்களுடன் வைத்திருக்கவும்.

    * சபரிமலைக்கு ஒரே நேரத்தில் நடந்து செல்வது சிரமமாக இருக்கும். எனவே யாத்திரை செல்லும் முன் நடைபயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகளை பக்தர்கள் மேற்கொள்வது நல்லது.

    * உங்களுக்கு உடல் தகுதி இல்லையென்றால் மெதுவாக மலை ஏறுங்கள். தேவையான இடங்களில் நின்று ஓய்வெடுக்கவும். நீலிமலை பாதைக்கு பதிலாக சுவாமி ஐயப்பன் சாலையை தேர்வு செய்வது நல்லது. சாப்பிட்ட உடன் மலை ஏறக்கூடாது.

    * நீலிமலை, பம்பை, அப்பாச்சிமேடு மற்றும் சன்னிதானத்தில் செயல்படும் மருத்துமனைகள் இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் போன்ற சேவைகளையும் வழங்குகின்றன.

    * யாரையேனும் பாம்பு கடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சபரிமலையில் உள்ள சுகாதார மையங்களிலும் ஆன்டிவென் மற்றும் சிகிச்சைகள் கிடைக்கும்.

    * யாத்திரையின்போது வெதுவெதுப்பான நீரை மட்டுமே அருந்த வேண்டும். உணவை கையாளும் முன் கைகளை நன்றாக கழுவவும். மூடி வைக்காத உணவை உண்ணக்கூடாது.

    * பொது இடங்களில் மலம் கழிக்க வேண்டாம். கழிப்பறைகளை பயன்படுத்துங்கள். பின்னர் சோப்பை பயன்படுத்தி கைகளை நன்கு கழுவவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது. 

    • ஒரு நாளைக்கு 2 தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்.
    • தவறான வார்த்தைகளை தடை செய்யவேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மகளிர் ஆணையம் திருவனந்தபுரம், மலப்புரம், கோட்டயம் ஆகிய மாவட் டங்களில் 13 முதல் 19 வயது டைய இளைஞர்களிடம் தொலைக்காட்சி சீரியல்கள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் 43 சதவீதத்தினர் சீரியல்கள் தவறான செய்திகளை தெரிவிப்பதாக கூறியிருக்கின்றனர்.

    மேலும் 57 சதவீதத்தினர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கருப்பொருள் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.

    இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் ஒழுக்கக் கேடான அல்லது எதிர்மறை கதாபாத்திரங்களை பின்பற்றுவதும் தெரிய வந்திருக்கிறது.

    ஆகவே மலையாள தொலைக்காட்சி தொடர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களை தடை செய்யவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

    இது தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ள விஷயங்கள் தொடர்பாக விவரங்கள் வருமாறு:-

    தொலைக்காட்சிகளில் தினசரி ஒளிபரப்பாகும் நீண்ட கால மெகா சீரியல்களை நிறுத்த வேண்டும். ஒரு தொடரின் எபிசோட்களின் எண்ணிக்கை 20 முதல் 30 வரை இருக்குமாறு குறைக்க வேண்டும்.

    ஒரு தொலைக்காட்சி ஒரு நாளைக்கு 2 தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

    சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும். சீரியல்கள் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு அவற்றை முறையான தணிக்கை செய்யப்பட வேண்டும்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆய்வு செய்வதற்கு தற்போதுள்ள திரைப்பட தணிக்கை வாரியம் அல்லது புதிய சிறப்பு வாரியம் பொறுப் பேற்க வேண்டும்.

    இளைய பார்வை யாளர்கள் பார்க்க பொருத்த மானதாக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். பல சீரியல்களின் உள்ளடக்கம் குடும்பங்கள் மற்றம் குழந்தைகளை எதிர்மறையாக பாதிக்கும்.

    கருப்பொருள் பெரும்பாலும் உண்மைத்தன்மையை கொண்டிருக்கவில்லை. இது இளம் பார்வையாளர்களிடையே தீங்கு விளைவிக்கும் சாயல்களுக்கு வழி வகுக்கும்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தவறான வார்த்தைகளை தடை செய்யவேண்டும். பெண்கள் இழிவாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். ஆபாசமான உள்ளடக்கம் பரவுவதை தடுக்க கடுமையான விதி முறைகளை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    • பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
    • கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதற்கிடையே சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சபரிமலை சீசனையொட்டி இந்த ஆண்டு ஆன்லைன் தரிசன முன்பதிவு முறையில் செய்யப்பட்ட நவீன மாற்றங்கள் காரணமாக பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,800 பக்தர்களுக்கு குறையாமல் தரிசனம் செய்கிறார்கள். 18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றப்படுகிறார்கள். அதாவது 15 நிமிடங்களுக்கு பின் ஓய்வு அளிக்கப்படுகிறது. இதனால் 18-ம் படியில் அதிக அளவில் பக்தர்கள் ஏற்றி விடப்படுகிறார்கள்.

    சிரமமின்றி தரிசனம் செய்ய பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு வலியநடை பந்தலில் தனிவழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் தரிசனம் முடிந்து மலை இறங்கும் பக்தர்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சபரிமலையில் கடந்த ஆண்டு வரை தனியார் நிறுவனத்திடம் இருந்து களபாபிஷேகத்திற்கான சந்தனம் வாங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு சந்தனத்தை அரைக்க 3 அரவை எந்திரங்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த எந்திரங்கள் மூலம் தற்போது சந்தனம் அரைக்கப்பட்டு களபாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    சபரிமலையில் ஏற்கனவே 40 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது தினமும் 1 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடுகள் மற்றும் பக்தர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள்.
    • குருவா கும்பலை சேர்ந்த ஒருவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து தரிசனம் செய்வார்கள்.

    இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு கும்பல் பக்தர்களிடம் மட்டுமின்றி கேரளாவின் பல பகுதிகளிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. குருவா கும்பல் என போலீசாரால் அழைக்கப்படும் இந்த கும்பல், இந்த ஆண்டும் கேரளாவில் நடமாட தொடங்கி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    இது தொடர்பாக ஆலப்புழா சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மதுபாபு கூறியதாவது:-

    சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குருவா கும்பல் தற்போது ஆலப்புழாவில் நடமாடி வருகிறது. இவர்களை போலீசார் பார்த்துள்ளனர். அந்த கும்பலின் நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்தக் கும்பல் அம்பலப்புழா, காயம்குளம் போன்ற ரெயில் நிலையங்களுக்கு அருகில் தங்கி சிறு குழுக்களாக பிரிந்து சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இவர்கள் பகலில் உளவுப் பணிகளை செய்து சாத்தியமான இலக்குகளை கண்காணிப்பார்கள்.

    பின்னர் வீடுகள் மற்றும் பக்தர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் குருவா கும்பலை சேர்ந்த ஒருவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் என தெரியவந்துள்ளது.

    • உடல் நலக்குறைவால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த மித்ரன் காலமானார்.
    • இந்திரா காந்தி, ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களின் ஜோதிடராக இவர் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருப்பணித்துறை ஈருரில் உள்ள ஏலப்பிரக்கொடத்து மனை பகுதியை சேர்ந்தவர் மித்ரன் நம்பூதிரிபாடு, பிரபல ஜோதிடர்.

    உடல் நலக்குறைவால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த மித்ரன் நேற்று காலமானார். அவருக்கு வயது 95.

    இந்திரா காந்தி, ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களின் ஜோதிடராக இவர் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் ஆந்திர அரசின் அர்ஷ ஞான சரஸ்வதி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

    • நடிகர் இந்திரன் 7-ம் வகுப்பு சமத்துவ பாட திட்டத்தில் சேர்ந்து படித்து வந்தார்.
    • சினிமா படப்பிடிப்புகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போது பாடங்கள் படித்து வந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் குமாரபுரம் பகுதியை சேர்ந்த பிரபல நடிகர் இந்திரன். குடும்பத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக தனது சிறு வயதிலேயே தையல் வேலைக்கு சென்ற இந்திரன், நாடகங்களில் நடித்தார்.

    அதன்பிறகு அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி, ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்தார். சிறு வயதிலேயே வேலைக்கு சென்றுவிட்டதன் காரணமாக, அவர் 4-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போனது.

    எப்படியாவது பள்ளி படிப்பை முடிக்க வேண்டும் என்பதை தனது இலக்காக வைத்திருந்த அவர், தற்போது அதனை செயல்படுத்தியிருக்கிறார். அவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுத முயன்று வந்தார். இதற்காக 68 வயதான இந்திரன் கடந்த ஆண்டு (2023) கேரள மாநில சமத்துவ திட்டத்தில் பதிவு செய்தார்.

    17 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் 7-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் பத்தாம் வகுப்பு படிப்பில் சேரலாம். ஆகவே நடிகர் இந்திரன் 7-ம் வகுப்பு சமத்துவ பாட திட்டத்தில் சேர்ந்து படித்து வந்தார்.

    சினிமா படப்பிடிப்புகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போது பாடங்கள் படித்து வந்தார். கேரள மாநில சமத்துவ பாடத் திட்டத்தில் 1,604 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் நடிகர் இந்திரனும் ஒருவர் ஆவார். அவர் உள்பட 1,043 பேர் சமீபத்தில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

    அந்த தேர்வில் நடிகர் இந்திரன் உள்பட 1,007 பேர் தேர்ச்சி பெற்றனர். நடிகர் இந்திரன் 7-ம் வகுப்பு தேர்வில் 59.4 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பாங்காக்கில் இருந்து வந்த விமானம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது.
    • கோழிக்கோடு முகமது ஜாகிர், எர்ணாகுளம் நிசாமுதீன், மலப்புரம் ஜம்ஷீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் மூலம் அடிக்கடி போதை பொருட்கள், தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவற்றை கடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பாங்காக்கில் இருந்து வந்த விமானம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த 3 பயணிகள் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    அப்போது 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்தனர். அப்போது கலப்பின கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்கள் கடத்தி வந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.7.47 கோடி ஆகும்.

    இதனை தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கடத்தி வந்ததாக கோழிக்கோடு முகமது ஜாகிர், எர்ணாகுளம் நிசாமுதீன், மலப்புரம் ஜம்ஷீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    • யானைகளின் உணவு, ஓய்வை உறுதிசெய்ய வேண்டும்.
    • தினமும் 6 மணி நேரத்திற்கு கூடுதலாக யானைகளை வாகனங்களில் நிறுத்தி அழைத்து செல்லக்கூடாது.

    பெரும்பாவூர்

    கேரளாவில் கோவில் திருவிழாக்களில் சாமி எழுந்தருளிப்பு நிகழ்ச்சிகளுக்கு யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். அப்போது வனத்துறை தெரிவித்த வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. சில இடங்களில் இதை மீறுவதாக புகார் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் நம்பியார், கோபிநாத் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது.

    இந்த அமர்வு, யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில், கோவில் திருவிழாவின்போது யானைகளை எழுந்தருளிப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லும் வேளையில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து உத்தரவை, அதற்கு அனுமதி வழங்கும் மாவட்ட அளவிலான குழுவுக்கு பிறப்பித்து உள்ளது.

    அதன்படி, தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் யானைகளை நிறுத்தி வைக்கக்கூடாது. அவற்றிற்கு உணவு, ஓய்வை உறுதிசெய்ய வேண்டும். யானைகளை அழைத்து வரும் வாகனங்களின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 25 கி.மீ. கூடுதலாக இருக்கக்கூடாது. தினமும் 6 மணி நேரத்திற்கு கூடுதலாக யானைகளை வாகனங்களில் நிறுத்தி அழைத்து செல்லக்கூடாது உள்பட பல்வேறு உத்தரவுகளை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது கேமராவை ஆன் செய்யாமல் அட்டண்ட் செய்துள்ளார்
    • மோசடிக்காரர் கேமராவை ஆன் செய்யும்படி மீண்டும் மீண்டும் கூறினார்.

    இந்தியா முழுமைக்கும் செல்போன் போலி அழைப்புகள் மூலம் அரங்கேறும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் கவனமாக இருக்க எவ்வாறு அறிவுறுத்தினாலும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

    இதுபோன்ற சைபர் மோசடிகளை செய்வதையே வேலைவாய்ப்பாகச் சிலர் கருதி முழு நேரமும் அதில் ஈடுபட்டு வருகின்றனர். நான் போலீஸ் அதிகாரி பேசுகிறேன், உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, பணம் கொடுத்தால் உங்களை இந்த சிக்கலில் இருந்து காப்பற்றுகிறேன் என்று கூறியும் மோசடிகள் நடந்து வருகிறது.

    அந்த வகையில் வழக்கம்போல போலீஸ் உடை அணிந்து வீடியோ கால் மூலம் மோசடி செய்யலாம் என்று நினைத்த நபர் தவறுதலாக மோசடிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட கேரள சைபர் செல் அலுவலகத்துக்கே வீடியோ கால் போட்டுள்ளார். திருச்சூர் கேரள சைபர் செல் அதிகாரி ஒருவருக்கு வீடியோ கால் வந்துள்ளது.

    அதை அவர் தனது கேமராவை ஆன் செய்யாமல் அட்டண்ட் செய்துள்ளார். எதிர் பக்கம் இருந்த போலீஸ் உடையணிந்த மோசடி காரர் வழக்கம்போல பேசியுள்ளார். தனது கேமரா வேலை செய்யவில்லை என்று போலீஸ் அதிகாரி கூறியுள்ளார், ஆனால் மோசடிக்காரர் கேமராவை ஆன் செய்யும்படி மீண்டும் மீண்டும் கூறியதால் சைபர் போலீஸ் தனது கேமராவை ஆன் செய்தார்.

    அதன் பின்னரே தான் வசமாக சிக்கியதை மோசடிக்காரர் உணர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சைபர் போலீஸ், இந்த வேலையை செய்யாதீர்கள், என்னிடம் உங்களின் முகவரி, நீங்கள் உள்ள இடம் என அனைத்தும் தெரியும், இது சைபர் செல், இந்த [மோசடி] வேலையை இத்துடன் நிறுத்திக்கொள்வதே உங்களுக்கு நல்லது என்று எச்சரித்துள்ளார். அவர் பேசியது அனைத்தும் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்பட்ட நிலையில் அதை திருச்சூர் சைபர் போலீஸ் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ 1,77,000 வியூஸ்களை கடந்து வைரலாகி வருகிறது.

     

    • இன்று மாலை வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது.
    • இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த பூஜை காலங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நாளை (16-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் மேல் சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார்.

    பின்பு இரவு 7 மணிக்கு சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகைபுரம் கோவில்களின் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கிறார்கள்.


    சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக அருண் குமார் நம்பூதிரியும், மாளிகை புரம் கோவில் மேல் சாந்தி யாக வாசுதேவன் நம்பூதிரியும் பதவி ஏற்கிறார்கள். இன்று மாலை வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.

    அதன் பிறகு நாளை (16-ந்தேதி) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்ப தத்தன் ஆகியோர் முன்னிலையில் புதிய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

    கோவிலின் நடை திறக்கப்பட்டதும் நிர்மால்ய தரிசனமும், அதிகாலை 3:30 மணிக்கு கணபதி ஹோமமும் நடைபெறும்.

    அவை முடிந்ததும் அதிகாலை 3:30 மணிக்கு நெய் அபிஷேகம் தொடங்குகிறது. தொடர்ந்து காலை 7 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் காலை 7:30 மணிக்கு உஷ பூஜை நடைபெறுகிறது. அது முடிந்ததும் காலை 8:30 மணி முதல் 11 மணி வரை மீண்டும் நெய் அபிஷேகம் நடைபெறும்.

    அதனைத் தொடர்ந்து காலை 11 மணி முதல் 11:30 மணி வரை அஷ்டாபி ஷேகமும், பகல் 12:30 மணிக்கு உச்ச பூஜையும் நடைபெறும். அதன் பிறகு பிற்பகல் ஒரு மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படும்.

    மாலை 6:30 மணிக்கு சிறப்பு தீபாரா தனையும், இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை புஷ்பாபி ஷேகமும், இரவு 9:30 மணி முதல் அத்தாள பூஜையும் நடைபெறும். பின்பு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.

    மண்டல பூஜை காலத்தில் இந்த பூஜைகள் அனைத்தும் தினமும் நடைபெறும். அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை என தினமும் 18 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகின்றனர்.


    ஸ்பாட் புக்கிங் மூலம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆதார் அட்டை அல்லது அதன் நகலை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போட்டும் அவர்கள் கொண்டுவரலாம்.

    ஸ்பாட் புக்கிங் செய்யும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்குவதற்காக பம்பையில் 7 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் எரிமேலி மற்றும் வண்டி பெரியாரிலும் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் செயல்படுகின்றன.

    பக்தர்கள் வரக்கூடிய வாகனங்களை நிறுத்த நிலக்கல், பம்பை மலை உச்சி, சக்குபள்ளம் ஆகிய 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இந்த ஆண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

    பம்பையில் பக்தர்கள் வரக்கூடிய கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வருவதற்காக நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சங்கிலி தொடர் போன்று பஸ்கள் தொடர்ச்சி யாக இயக்கப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் இயக்கப்படும் தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் பம்பை வரை சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கிறது.

    மேலும் பக்தர்கள் தங்கு வதற்காக பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் நடைப் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பம்பையில் 7 ஆயிரம் பேர் தங்கும் வகை யில் 9 நடை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சன்னிதானத் தில் 10 ஆயிரம் பேர் தங்கும் வகையிலும், நிலக் கல்லில் 8 ஆயிரம் பேர் தங்கும் வகையிலும் நடை பந்தல்கள் அமைக்கப்பட்டு இருக்கின் றன.

    அது மட்டுமின்றி சபரி மலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்காக பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு யாத்திரை செல்லக்கூடிய பக்தர்களுக்கு வழங்கு வதற்காக 3 ஆயிரம் இரும்பு தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்களுக்கு தண்ணீர் நிரப்பி விநியோகிக்கப்படும்.

    பத்தர்கள் மலையில் இருந்து இறங்கும்போது அந்த பாட்டிலை திருப்பி கொடுத்து விட வேண்டும். இதேபோல் பக்தர்களுக்கு சுக்கு தண்ணீர் வழங்குவ தற்காக சரங்குத்தி முதல் சன்னிதானம் வரை 60 கவுண்டர்கள் அமைக்கப் பட்டுள்ளன.

    மேலும் பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்க பம்பையில் இருந்து சன்னிதானம் வரையிலான மலை பாதையில் பல இடங்களில் மருத்துவ சிகிச்சை மையங்கள் இருக் கின்றன. மேலும் பக்தர்கள் அமருவதற்காக ஆயிரத் துக்கும் மேற்பட்ட இரும்பு நாற்காலிகள் வைக்கப்பட் டுள்ளன.

    இந்தநிலையில் சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை முடிந்துவிட்டது. அடுத்த மாதத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    ஆன்லைன் முன்பதிவு செய்த நாளில் வர முடியாத பக்தர்கள், தங்களின் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யப்படும் முன்பதிவு டிக்கெட்டுகள் ஸ்பாட் புக்கிங் செய்யக்கூடிய பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    மண்டல பூஜை நாளை தொடங்குவதை முன்னிட்டு சபரிமலைக்கு பக்தர்கள் இன்றே வரத்தொடங்கினர். இதனால் எரிமேலி மற்றும் பம்பையில் பக்தர்கள் கூட்ட மாகவே காணப்பட்டது. மதியம் ஒரு மணி முதல் பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு மலை யேறிச் செல்ல பக்தர்கள் அனுமதிக் கப்பட்டார்கள்.

    பக்தர்களை ஒழுங்கு படுத்தி அனுப்புதல் மற்றும் பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சபரிமலையில் பணியமர்த்தப்பட்டு உள்ள னர். மேலும் அதிவிரைவு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி கமாண்டோ வீரர்களும் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×