search icon
என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
    • தரம்சாலாவில் நடக்கவுள்ள 27வது லீக் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இமாசல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் உலக கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

    இதற்கிடையே, நியூசிலாந்து அணியினர் இன்று காலை தரம்சாலா சென்றடைந்தனர்.

    இந்நிலையில், தரம்சாலாவில் தங்கியுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இன்று தங்களது குடும்பத்தினருடன் சென்று புத்தமத துறவியான தலாய் லாமாவை சந்தித்தனர். அவரிடம் ஆசி பெற்றனர்.

    இந்த போட்டோவை தலாய் லாமா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்கள் குவித்தார். இதன்மூலம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

    இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 5பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். சுப்மன் கில் 38 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.

    ஏற்கனவே, தென் ஆப்பிரிக்க அணியின் ஹசிம் ஆம்லா 40 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக கோப்பை தொடரில் 20 ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா வென்றுள்ளது.
    • உலக கோப்பை கிரிக்கெட் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடந்தது. இதில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் 137 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், சிராஜ் , பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா 48 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்னும், ரோகித் சர்மா 46 ரன்னும், ஜடேஜா 39 ரன்னும், ஷ்ரேயஸ் அய்யர் 33 ரன்னும் எடுத்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவுசெய்தது. மேலும், உலக கோப்பை தொடரில் 20 ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

    இந்தியா 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து 2-வது இடத்திலும், 6 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் முறையே 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளன.

    • நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே டக் அவுட்டானார். வில் யங் 17 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடி அரை சதம் கடந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஜோடி 159 ரன்கள் சேர்த்த நிலையில், ரச்சின் ரவீந்திரா 75 ரன்னில் அவுட்டானார். கேப்டன் டாம் லாதம் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். கிளென் பிலிப்ஸ் 23 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து 130 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    முதலில் விளையாடிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தலா 46 மற்றும் 26 ரன்களில் வெளியேறினர். அடுத்ததாக, விராக் கோலி 95 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால், சதம் எடுக்கும் வாய்ப்பை இழந்தார்.

    தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களும், கே.எல்.ராகுல் 27 ரன்களும், சூர்ய குமார் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ரவீந்திர ஜடேஜா 39 ரன்களும், முகமது ஷமி ஒரு ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இறுதியில், 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்து இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

    • நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இதில், நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

    இதில், தற்போது இந்திய அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட பனி மூட்டம் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 273 ரன்களை எடுத்தது.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே டக் அவுட்டானார். வில் யங் 17 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடி அரை சதம் கடந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஜோடி 159 ரன்கள் சேர்த்த நிலையில், ரச்சின் ரவீந்திரா 75 ரன்னில் அவுட்டானார். கேப்டன் டாம் லாதம் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். கிளென் பிலிப்ஸ் 23 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து 130 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • தரம்சாலாவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் தர்மசாலாவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய அணியில் முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
    • நெதர்லாந்து தரப்பில் எட்வர்ஸ் 78 ரன்கள் எடுத்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு டாஸ் போடப்படும் எனவும் 2.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2.30 டாஸ் போடப்படும் எனவும் 3 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 2.20 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட் களமிறங்கினர். இதில், விக்ரம்ஜித் சிங் 2 ரன், மேக்ஸ் ஓடவுட் 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து களம் இறங்கிய அக்கெர்மென் 12 ரன், பாஸ் டீ லீட் 2 ரன், ஏங்கல்பிரெக்ட் 19 ரன், நிதாமனுரு 20 ரன், வான் பீக் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

    பின்னர், ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டெர் மெர்வ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் வான் டர் மெர்வ் 29 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் எட்வர்ஸ் 78 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி உள்ளது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 364 ரன்களை குவித்தது.
    • அந்த அணியின் டேவிட் மலான் சதமடித்து அசத்தினார்.

    தர்மசலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இமாசலப்பிரதேசத்தின் தர்மசலாவில் 7வது லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. டேவிட் மலான் 107 பந்தில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 68 பந்தில் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உள்பட 82 ரன்கள் சேர்த்தார்

    வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி 76 ரன்னில் அவுட்டானார். முஷ்பிகுர் ரஹிம் 51 ரன்னில் வெளியேறினார். ஹிருடோய் 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வங்காளதேசம் 227 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    இங்கிலாந்து சார்பில் ரீஸ் டாப்ளே 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 364 ரன்களை குவித்தது.

    தர்மசலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இமாசலப்பிரதேசத்தின் தர்மசலாவில் 7வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. பேர்ஸ்டோவ், டேவிட் மலான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஜோ ரூட், மலானுடன் இணைந்து அதிரடியை தொடர்ந்தார். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். டேவிட் மலான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். ஜோ ரூட் அரை சதமடித்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மலான், ஜோ ரூட் 151 ரன்கள் சேர்த்தனர். மலான் 107 பந்தில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 68 பந்தில் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உள்பட 82 ரன்கள் சேர்த்தார்

    இறுதியில், இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது.

    வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்குகிறது.

    • எஸ்.எஃப்.டி. எனும் அமைப்பு நீண்டகாலமாக திபெத் விடுதலைக்கு போராடுகிறது
    • திபெத்திய குழுந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து சீனா பிரிக்கிறது

    கிழக்கு ஆசியாவின் மத்தியில் உள்ள நாடு திபெத். 1950-ல் திபெத்தை தன்னுடன் இணைத்து கொண்டு விட்டதாக சீனா அறிவித்தது. ஆனால், அப்போது முதல் அந்நாட்டின் விடுதலைக்காக ஆங்காங்கே அந்நாட்டவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

    தற்போது இந்தியாவில் ஜி20 உறுப்பினர் நாடுகள் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு, தலைநகர் புது டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பல உறுப்பினர் நாடுகளின் தலைவர்களும் டெல்லி வந்து இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், உலக தலைவர்களுக்கு தங்கள் விடுதலை போராட்டம் குறித்து அறிவிக்கும் விதமாக எஸ்.எஃப்.டி. எனும் சுதந்திர திபெத்திற்கான மாணவர்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலா நகரத்திற்கு வெளியே மெக்லியாட் காஞ்ச் எனும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த அமைப்பின் இயக்குனர் டென்சின் பசாங்க், "எங்கள் கலாசாரத்தையும், அடையாளங்களையும் அழிக்கும் விதமாக சீனா தொடர் முயற்சிகளில் ஈடுபடுகிறது. எங்கள் கல்வி அமைப்புகளின் மீது மறைமுக தாக்குதல் நடத்தி வருகிறது. சிறிய 4-வயது குழந்தைகளை கூட பெற்றோர்களிடம் இருந்து பிரித்து சீனாவின் உறைவிடப் பள்ளிகளில் வலுக்கட்டாயமாக சேர்க்கிறது. இதனால் அக்குழந்தைகளுக்கு நாளடைவில் எங்கள் மொழி, கலாச்சாரம், வாழ்க்கைமுறை ஆகியவையுடன் அறவே தொடர்பில்லாமல் போகிறது," என்று தெரிவித்தார்.

    இதே அமைப்பின் பிரச்சார இயக்குனர் டென்சின் லெக்தென், "ஜி20 தலைவர்கள் இது குறித்து பேச வேண்டும். குறிப்பாக, காலனி ஆதிக்க மனப்பான்மையுடன் சீனாவின் பள்ளிகளில் திபெத்திய குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கப்படுவதையும், திபெத் முழுவதும் சீனா செய்து வரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்தும் உலக தலைவர்கள் பேச வேண்டும்," என்று கூறினார்.

    • விலங்குகளை கொன்று இரையாக்குவது சுற்றுச்சூழலை பாதிப்பதில் தொடர்பு கொண்டிருக்கிறது.
    • நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்களை நாம் மீண்டும், மீண்டும் எதிர்கொண்டு வருகிறோம்.

    இறைச்சிக்காக உயிரினங்களை கொலை செய்வதால் தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர் சம்பவங்கள் ஏற்படுகின்றன என்று ஐ.ஐ.டி. மண்டி இயக்குனர் லக்ஷமிதார் பெஹெரா பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    உணவுக்காக விலங்குகளை கொல்லும் போது, சுற்றுச்சூழலில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார். யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டதும் வைரல் ஆக துவங்கி விட்டது.

     

    "அப்பாவி விலங்குகளை கொன்று இரையாக்குவது சுற்றுச்சூழலை பாதிப்பதில் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இது ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்களை நாம் மீண்டும், மீண்டும் எதிர்கொண்டு வருகிறோம். இவை அனைத்திற்கும் காரணம் விலங்குகளை கொடுமைப்படுத்துவது தான்."

    "நல்ல மனிதர்களாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இறைச்சி போன்ற உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். ஆமாவா, இல்லையா?" என்று அவர் மாணவர்களிடையே பேசும் போது கேள்வியாக எழுப்பியுள்ளார்.

    ×