search icon
என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    • போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டும் சுற்றுலா பயணிகள் தங்களின் கொண்டாட்டத்திற்காக குலு மணாலியில் குவிந்தனர்.

    இதனால், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, சுமார் 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    இதேபோல், தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்திற்கு வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால், லஹாவுல் மற்றும் ஸ்பிட்டி போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்த கண்காணித்து வருகின்றனர். 

    • ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. முக்கியமானது.
    • ஒரு குறிப்பிட்ட காரணிகள் அடிப்படையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்பதை நீதிமன்றம் மனதில் கொள்ள வேண்டும்.

    போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டால் இது மேலும் குற்றத்தை தூண்டுவதற்கு வகை செய்யும் என நீதிபதி வீரேந்திர சிங் ஒரு வழக்கில் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் இமாச்சல பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு போக்சோ சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டால், வழக்கை ரத்து செய்யலாமா? என்பது முடியுமா? என்பது குறித்து கருத்து தெரிவித்தது.

    அப்போது நீதிபகள் தர்லோக் சிங் சவுகான், சத்யன் வைத்யா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் கூறிய கருத்து பின்வருமாறு:-

    போக்சே சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவரும், பாதிக்கப்பட்டவரும் திருமணம் செய்து கொள்ள உண்மையிலேயே சமரசத்திற்கு முன்வந்தால், அவர்களின் திருமண வாழ்க்கையை பாதுகாக்க போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யலாம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதிப்பது, உண்மையிலேயே தம்பதியின் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும். நீதியும் இதரப்பினரை சமரம் செய்து கொள்ள அனுமதிக்க கோரும்.

    ஆனால், தண்டனையில் இருந்து தப்புவதற்காக மட்டுமே திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு ஒப்புக் கொண்டது அவர் தானாகவே எடுக்கப்பட்ட முடிவாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. முக்கியமானது, ஒரு குறிப்பிட்ட காரணிகள் அடிப்படையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்பதை நீதிமன்றம் மனதில் கொள்ள வேண்டும்.

    குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் பிரச்சினையை தீர்த்துக் கொண்டார்கள் என்ற அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இறுதியில் ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைச் சுற்றியே சுழல்கிறது. எனவே, நேரான எந்தவித சூத்திரத்தாலும் உருவாக்க முடியாது.

    இருந்தபோதிலும் பயங்கரமான, கொடூரமான பாலியல் குற்றங்கள் ஒருபோதும் சமரசத்தின் விசயமாக இருக்க முடியாது.

    • காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யிடம் இருந்து 350 கோடி ரூபாய் பறிமுதல்.
    • மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் எண்ணப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பணத்தை கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் இவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் இலக்கான 400 இடங்களுடன், தற்போதைய ஊழலை மத்திய மந்திரி அனுராக் தாகூர் ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

    இதுகுறித்து அனுராக் தாகூர் கூறுகையில் "மக்களிடம் இருந்து பா.ஜனதா தொடர்ந்து ஆதரவை பெற்று வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் பொது நலத்திட்டம் கொள்கைதான் காரணம். அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.

    நாங்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் தலைவர் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊழலில் ஈடுபட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதனால்தான் அக்கட்சி எப்போதுமே அமக்கலாக்கத்துறை மற்றும் சிபிஐ, பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஆகியவற்றிற்கு எதிராக உள்ளது" என்றார்.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 388 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 383 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 388 ரன்கள் குவித்தது.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று தர்மசாலாவில் நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா திரில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.2 ஓவரில் 388 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. டிரெவிஸ் ஹெட் (109) சதமடித்தார்.

    நியூசிலாந்து சார்பில் போல்ட், பிலிப்ஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 383 ரன்கள் எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ரச்சின் ரவீந்திரா (116 ரன்) சதம் அடித்தார். கடைசி கட்டத்தில் ஜிம்மி நீஷம் (58 ரன்) வெற்றிக்காக போராடினார். ஆனால் அவர் ரன் அவுட்டானது பின்னடைவை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தோல்வி குறித்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறியதாவது:

    இது கிரிக்கெட்டின் அருமையான விளையாட்டாக இருந்தது. வெற்றிக்கு இவ்வளவு நெருக்கமாக வந்து தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. வெளிப்படையாக மனது வலிக்கிறது. ஆஸ்திரேலியா அருமையாக விளையாடி தொடக்கம் முதலே எங்களை பின்னுக்கு தள்ளினார்கள். முக்கியமான நேரத்தில் பிலிப்ஸ் அற்புதமாக பந்துவீசினார். 10 ஓவர் வீசி 37 ரன் விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தார்.

    ஒரு முனையில் இருந்து அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. 400 ரன்னுக்கு அருகே நீங்கள் சேசிங் செய்யும்போது சரியான ஆட்டத்தை விளையாட வேண்டும்.

    யங்-கான்வே நல்ல தொடக்கம் அளித்தனர். ரச்சின் ஒரு அசாதாரண விளையாட்டை ஆடினார். இது சிறந்த ஆட்டங்களில் ஒன்று. தரம்சாலா விளையாடுவதற்கு அருமையான இடம் என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 388 ரன்களை குவித்தது.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் தரம்சாலாவில் உலக கோப்பை தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.

    அதிரடியாக ஆடிய வார்னர் 65 பந்தில் 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 67 பந்தில் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 175 ரன்களைக் குவித்தது.

    மிட்செல் மார்ஷ் 36 ரன்னும், ஸ்மித் மற்றும் லபுசேன் தலா 18 ரன்னும் எடுத்தனர். மேக்ஸ்வெல்லும் அதிரடியில் மிரட்டினார். அவர் 24 பந்தில் 41 ரன் எடுத்து அவுட்டானார். ஜோஷ் இங்லிஸ் 38 ரன்னில் வெளியேறினார்.

    நியூசிலாந்து அணி வீசிய 48வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 4 சிக்சர்கள் உள்பட 27 ரன்கள் குவித்தது. கடைசி கட்டத்தில் பாட் கம்மின்ஸ் அடித்து ஆடி 14 பந்தில் 37 ரன்கள் குவித்தார்.

    49-வது ஓவரை வீசிய போல்ட் ஒரு ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 49.2 ஓவரில் 388 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து சார்பில் கிளென் பிலிப்ஸ், போல்ட் தலா 3 விக்கெட்டும், சான்ட்னர் 2 விக்கெட்டும், நீஷம், மேட் ஹென்றி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்குகிறது.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • தரம்சாலாவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் தரம்சாலாவில் உலக கோப்பை தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.

    நியூசிலாந்து பவுலர் மேட் ஹென்றி தனது 2வது ஓவரை வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு விரட்டினார் ஹெட். அடுத்த பந்து நோ பால் ஆனது. அதில் ஹெட் ஒரு ரன் எடுத்தார்.

    அடுத்த பந்தும் நோ பால் ஆனது. அதில் வார்னர் சிக்சர் அடித்தார். அடுத்த பந்திலும் வார்னர் சிக்சர் அடித்தார்.

    6, 1-NB, 6-NB, 6 என 2 பந்தில் ஆஸ்திரேலியா அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது. அதிரடியாக ஆடிய வார்னர் 65 பந்தில் 81 ரன்னும், டிராவிஸ் ஹெட் 67 பந்தில் 109 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர்.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • தரம்சாலாவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் தரம்சாலாவில் உலக கோப்பை தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்குகிறது.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
    • தரம்சாலாவில் நடக்கவுள்ள 27வது லீக் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இமாசல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் உலக கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

    இதற்கிடையே, நியூசிலாந்து அணியினர் இன்று காலை தரம்சாலா சென்றடைந்தனர்.

    இந்நிலையில், தரம்சாலாவில் தங்கியுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இன்று தங்களது குடும்பத்தினருடன் சென்று புத்தமத துறவியான தலாய் லாமாவை சந்தித்தனர். அவரிடம் ஆசி பெற்றனர்.

    இந்த போட்டோவை தலாய் லாமா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்கள் குவித்தார். இதன்மூலம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

    இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 5பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். சுப்மன் கில் 38 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.

    ஏற்கனவே, தென் ஆப்பிரிக்க அணியின் ஹசிம் ஆம்லா 40 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக கோப்பை தொடரில் 20 ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா வென்றுள்ளது.
    • உலக கோப்பை கிரிக்கெட் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடந்தது. இதில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் 137 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், சிராஜ் , பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா 48 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்னும், ரோகித் சர்மா 46 ரன்னும், ஜடேஜா 39 ரன்னும், ஷ்ரேயஸ் அய்யர் 33 ரன்னும் எடுத்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவுசெய்தது. மேலும், உலக கோப்பை தொடரில் 20 ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

    இந்தியா 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து 2-வது இடத்திலும், 6 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் முறையே 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளன.

    • நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே டக் அவுட்டானார். வில் யங் 17 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடி அரை சதம் கடந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஜோடி 159 ரன்கள் சேர்த்த நிலையில், ரச்சின் ரவீந்திரா 75 ரன்னில் அவுட்டானார். கேப்டன் டாம் லாதம் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். கிளென் பிலிப்ஸ் 23 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து 130 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    முதலில் விளையாடிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தலா 46 மற்றும் 26 ரன்களில் வெளியேறினர். அடுத்ததாக, விராக் கோலி 95 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால், சதம் எடுக்கும் வாய்ப்பை இழந்தார்.

    தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களும், கே.எல்.ராகுல் 27 ரன்களும், சூர்ய குமார் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ரவீந்திர ஜடேஜா 39 ரன்களும், முகமது ஷமி ஒரு ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இறுதியில், 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்து இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

    • நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இதில், நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

    இதில், தற்போது இந்திய அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட பனி மூட்டம் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ×