search icon
என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    • மகளிருக்கு மாதம் ₹1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சுகு அறிவித்துள்ளார்.
    • டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

    இமாச்சலப் பிரதேசத்தில் 18 முதல் 60 வயதுடைய மகளிருக்கு மாதம் ₹1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சுகு அறிவித்துள்ளார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சுக் சம்மன் நிதி யோஜனா என்ற இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ₹ 800 கோடி செலவிடப்படும் என்றும், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இதன் கீழ் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

    இன்றைய தினத்தில், டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் இதனை செயல்படுத்தி வருகின்றன

    • களத்தில் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
    • மக்களவை தேர்தலுக்காக பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேச அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அம்மாநில தலைவர் பிரதிபா சிங் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரான பிரதிபா சிங் கூறுகையில் "காங்கிரசில் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் ஏராளம் உள்ளது. ஒரு எம்.பி.யாக நான் என்னுடைய தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சி செய்கிறேன். எங்களை விட பா.ஜனதாவின் வேலை சிறப்பாக உள்ளது என்பது உண்மை.

    முதல் நாளில் இருந்தே, அமைப்புகளை நீங்கள் வலிமைப் படுத்தினால் மட்டுமே வரவிருக்கும் மக்களவை தேர்தலை நாம் எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்து வருகிறேன். இது எங்களுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை. களத்தில் ஏராளமான கடினமான விசயங்களை எங்களால் பார்க்க முடிகிறது. மோடியின் உத்தரவுப்படி பா.ஜனதா ஏராளமான விசயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    விக்ரமாதித்யா சிங் ஆறு எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை நடத்தினாரா? என்பது குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நேற்று இரவு வரை இங்குதான் இருந்தார். அவருடைய அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்து எனக்கு ஏதும் தெரியாது. அவர்கள் பலத்த பாதுகாப்பிற்கு கீழ் உள்ளனர்.

    எங்களுக்கு கட்டளையிடும் உயர்பதவியில் இருப்பவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி. அவர்களிடம் சென்று இமாச்சல பிரதேச நிலைமை எடுத்துக் கூறுவேன். என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள் என்றும் கேட்பேன்" என்றார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது இக்கட்டான சூழ்நிலை நிலவி வருகிறது. 2022 சட்டமன்ற தேர்தலில் 68 இடங்களில் 40 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. சுக்விந்தர் சிங் சுகு முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலி காத்திருந்தது.

    40 எம்.எல்.ஏ.-க்கள் வைத்துள்ள நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என அபிஷேக் சிங்வி-ஐ வேட்பாளராக களம் நிறுத்தியது. ஆனால் 25 இடங்களை மட்டுமே வைத்துள்ள பா.ஜனதா போட்டி வேட்பாளரை நிறுத்தியது.

    விக்ரமாதித்யா சிங்

    தேர்தலின்போது ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் பா.ஜனதாவுக்கு மாற்றி வாக்களித்தனர். இதனால் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    அப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலி முற்றியது. வெற்றி பெற்ற பா.ஜனதா, காங்கிரஸ் தார்மீக மெஜாரிட்டியை இழந்து விட்டது எனத் தெரிவித்தது. மேலும், ஆளுநரை சந்தித்து காங்கிரஸ்க்கு மெஜாரிட்டி இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் கோர இருப்பதாக அதிரடியாக தெரிவித்தது.

    இதற்கிடையே சட்டமன்றம் கூடியது. எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாகூர் உள்ளிட்ட 15 எம்.எல்.ஏ.-க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வீரபத்ர சிங்கின் மகன் மந்திரியாக உள்ளார். மாநில மந்திரியாக உள்ள விக்ரமாதித்ய சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மாற்றி வாக்களித்த 6 எம்.எல்.ஏ.-க்கள் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இப்படி ஒரே குழப்பமாக நிலவி வந்த நிலையில் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்களை மேலிடம் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைத்தது. அவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    பிரதாப் சிங் இமாச்சல பிரதேச மாநில முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர், பா.ஜனதாவுக்கு வாக்களித்தனர்.
    • நேற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உள்பட 15 எம்.எல்.ஏ.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் வாக்களித்திருந்தால் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் சிங்வி எளிதாக வெற்றி பெற்றிருப்பார்.

    ஆனால், ஆறு எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்ததால் குறைந்த எம்.எல்.ஏ.-க்களை (25) கொண்ட பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    இதனால் இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது என பா.ஜனதா கூறியது. மேலும், சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று சட்டமன்றம் கூடியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட 15 எம்.எல்.ஏ.-க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பின் பட்ஜெட் மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை பா.ஜனதாவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நிதி மசோதாவை கொண்டு வர இருப்பதால், அனைத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்களும் அந்த மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என கொறடா உத்தரவிட்டிருந்தார். 

    இந்த கொறடா உத்தரவை மீறியதாக ரஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தேர் தத் லகான்பால், தேவிந்தர் குமார் பூட்டோ, ரவி தாகூர் மற்றும் சேதன்யா சர்மா ஆகிய ஆறு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சித் தாவல் தடைசட்டத்தின் கீழ் அவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. அவர்கள் மீதான உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா தெரிவித்துள்ளார்.

    • மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் சிலர் பா.ஜனதாவுக்கு வாக்களித்தனர்.
    • மெஜாரிட்டியான காங்கிரஸ் தோல்வியடைந்ததால், பெரும்பான்மையாக இழந்ததாக பா.ஜனதா கூறி வருகிறது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரேயொரு மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளதால் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், 25 எம்.எல்.ஏ.-க்களை கொண்ட பா.ஜனதா நிறுத்திய வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் மெஜாரிட்டியை இழந்தது என பா.ஜனதா கூறியது. அத்துடன் இன்று காலை பா.ஜனதா முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாகூர் எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரை சந்தித்தார். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து சட்டமன்ற சபாநாயகர் ஆளுநர் சந்தித்து பேசினார். இந்த நிலையில் இமாச்சல பிரதேச மந்திரி விக்ரமாதித்யா சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங்கின் மகன் ஆவார்.

    எம்.எல்.ஏ.-க்களை கட்சி மதிக்கவில்லை என விக்ரமாத்தியா சிங் தெரிவித்துள்ளார். நேற்றைய மாநிலங்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்தனர்.

    இமாச்சல பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறுபேரை பா.ஜனதா அரியானாவிற்கு கடத்திச் சென்றதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநிலங்களவை எம்.பி. இடத்தை பறிகொடுத்த காங்கிரஸ், தற்போது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

    • காங்கிரஸ்க்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
    • பா.ஜனதாவுக்கு 25 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அபிஷேக் சிங்கை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளரை நிறுத்தியதால் தேர்தல் நடத்தப்பட்டது.

    68 சட்டமன்ற இடங்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ்க்கு 40 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். இதனால் அபிஷேக் சிங்வி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் 25 எம்.எல்.ஏ.-க்களை கொண்ட பா.ஜனதாவின் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில்தான் பா.ஜனதா மெஜாரிட்டியை இழந்துள்ளது. இதனால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்து வந்தனர்.

    இமாச்சல பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான ஜெய்ராம் தாகூர் எம்.எல்.ஏ.-க்களுடன் சென்று கவர்னர் ஷிவ் பிரதாப் சுக்லாவை சந்தித்தார். அப்போது சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வலியுறுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    "பா.ஜனதா வேட்பாளருக்கான ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக குறைவான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்த நிலையில், நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். தார்மீக உரிமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை இழந்துள்ளது" என ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    மேலும் "பட்ஜெட் மீதான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுவதற்குப் பதிலாக வாக்குகள் பிரித்து எண்ணப்பட வேண்டும். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்பது தானாகவே தெரியவந்து விடும்" என்றார்.

    இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஆறு பேரை பா.ஜனதா அரியானாவிற்கு அழைத்துச் சென்றுள்ளது என முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றஞ்சாட்டியுள்ளார்.

    68 இடங்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 35 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆறு எம்.எல்.ஏ.-க்கள் மாற்றி வாக்களித்தால் காங்கிரஸ் பலம் 34 ஆக குறைந்து பெரும்பான்மையை இழந்துவிடும்.

    பா.ஜனதாவைத் தவிர மற்றவை வரிசையில் 3 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். இவர்கள் பா.ஜனதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்பு உள்ளது.

    • காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர்.
    • 6 எம்.எல்.ஏ.க்கள் மாற்றி வாக்களித்ததால் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி.

    இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் 68 இடங்களில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜனதா 25 இடங்களில் வெற்றி பெற்றது. 3 மற்றவை ஆகும்.

    இந்த நிலையில்தான் இன்று மாநிலங்களை எம்.பி.க்கான தேர்தல் இன்று நடைபெற்றது. ஒரேயொரு இடத்திற்கான போட்டியில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதா கட்சியும் மல்லு கட்டின.

    காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் வாக்களித்தால் காங்கிரஸ் வேட்பாளர் எளிதாக வெற்றி பெற்று விடுவார். ஆனால், ஆறு எம்.எல்.ஏ.க்கள் மாற்றி வாக்களித்ததாக கூறப்படுகிறது. மேலும் மற்றவை வகையில் சேரும் 3 எம்.எல்.ஏ.-க்களும் பா.ஜனதாவுக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    6 எம்.எல்.ஏ.-க்கள் மாற்றி வாக்களித்ததால் காங்கிரஸ் கட்சியின் பலன் 34 ஆகியுள்ளது. இதனால் இமாச்சால பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான மெஜரிட்டியையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

    இதற்கிடையே ஆறு எம்.எல்.ஏ.-க்களை அரியானா மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பா.ஜனதா அம்மாநில முதல்வர் குற்றஞ்சாட்டியுள்ளார்..

    இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஷ்நாத் இமயமலையில் யோகா பாரம்பரியமான இஷ்புத்ராவை உருவாக்கி வருகிறார்.
    • வீடியோ இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள சிராஜ் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.

    இமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் பனி படர்ந்த மலை பகுதியில் யோகி ஒருவர் தியானம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், பஞ்சாபை சேர்ந்த சத்யேந்திரநாத் என்ற அந்த யோகியின் ஆடை, தலைமுடி, முகம் என அனைத்தும் பனியால் மூடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களால் அதை நம்ப முடியாமல் திகைத்தனர். அந்த வீடியோ இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள சிராஜ் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. இவர் சத்யேந்திரநாத் கவுலாந்தக் பீத் ஆசிரமத்தில் கடந்த 22 ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வருகிறார். இவர் இஷ்நாத் என்ற இமயமலை யோகியை பின்தொடர்ந்து வருகிறார்.

    இஷ்நாத் இமயமலையில் யோகா பாரம்பரியமான இஷ்புத்ராவை உருவாக்கி வருகிறார். இஷ்நாத் இமயமலை யோகா யுக்தியின் மையமாகவும், தெய்வீக இடமாகவும் அறியப்படும் கவுலாந்தக் பீடத்தின் தலைவர் ஆவார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டுபிடிப்பு.
    • உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

    8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடலை போலீசார் மீட்டுள்ளனர்.

    கடந்த 4ம் தேதி தன் நண்பர் மற்றும் ஓட்டுநருடன் இமாச்சல பிரதேசம் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

    விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

    மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

    • விபத்தில் டிரைவர் பலியானார்.
    • ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமான வெற்றி துரைசாமியை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

    சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி. நேற்று தனது நண்பரான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள சட்லஜ் ஆற்றின் மலைப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் விழுந்தது.

    இந்த விபத்தில் டிரைவர் பலியானார். சைதை துரைசாமியின் மகன் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார். காரில் இருந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்த கோபிநாத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் கார் டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமான வெற்றி துரைசாமியை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

    • மக்களின் நீண்ட நாளைய காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
    • 140 கோடி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

    சிம்லா:

    மத்திய மந்திரி அனுராக் தாக்குர் இமாசல் பிரதேசத்தின் ஹமீர்புரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    60 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்ய முடியாத பணியை பிரதமர் நரேந்திர மோடி அரசு 10 ஆண்டுகளில் செய்துள்ளது.

    செய்த பணிகளை மக்களிடம் கொண்டு செல்வது கட்சி தொண்டர்களின் தலையாய பொறுப்பு.

    நீண்ட நாளைய காத்திருப்பு முடிவுக்கு வந்தது. 140 கோடி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தேசத்தில் பிறந்தது முதல் இன்று வரை சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வரும் ஒரே அரசியல் கட்சி பா.ஜ.க. மட்டுமே என்பது நிரூபணமானது என தெரிவித்தார்.

    • போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டும் சுற்றுலா பயணிகள் தங்களின் கொண்டாட்டத்திற்காக குலு மணாலியில் குவிந்தனர்.

    இதனால், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, சுமார் 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    இதேபோல், தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்திற்கு வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால், லஹாவுல் மற்றும் ஸ்பிட்டி போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்த கண்காணித்து வருகின்றனர். 

    • ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. முக்கியமானது.
    • ஒரு குறிப்பிட்ட காரணிகள் அடிப்படையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்பதை நீதிமன்றம் மனதில் கொள்ள வேண்டும்.

    போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டால் இது மேலும் குற்றத்தை தூண்டுவதற்கு வகை செய்யும் என நீதிபதி வீரேந்திர சிங் ஒரு வழக்கில் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் இமாச்சல பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு போக்சோ சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டால், வழக்கை ரத்து செய்யலாமா? என்பது முடியுமா? என்பது குறித்து கருத்து தெரிவித்தது.

    அப்போது நீதிபகள் தர்லோக் சிங் சவுகான், சத்யன் வைத்யா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் கூறிய கருத்து பின்வருமாறு:-

    போக்சே சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவரும், பாதிக்கப்பட்டவரும் திருமணம் செய்து கொள்ள உண்மையிலேயே சமரசத்திற்கு முன்வந்தால், அவர்களின் திருமண வாழ்க்கையை பாதுகாக்க போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யலாம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதிப்பது, உண்மையிலேயே தம்பதியின் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும். நீதியும் இதரப்பினரை சமரம் செய்து கொள்ள அனுமதிக்க கோரும்.

    ஆனால், தண்டனையில் இருந்து தப்புவதற்காக மட்டுமே திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு ஒப்புக் கொண்டது அவர் தானாகவே எடுக்கப்பட்ட முடிவாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. முக்கியமானது, ஒரு குறிப்பிட்ட காரணிகள் அடிப்படையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்பதை நீதிமன்றம் மனதில் கொள்ள வேண்டும்.

    குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் பிரச்சினையை தீர்த்துக் கொண்டார்கள் என்ற அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இறுதியில் ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைச் சுற்றியே சுழல்கிறது. எனவே, நேரான எந்தவித சூத்திரத்தாலும் உருவாக்க முடியாது.

    இருந்தபோதிலும் பயங்கரமான, கொடூரமான பாலியல் குற்றங்கள் ஒருபோதும் சமரசத்தின் விசயமாக இருக்க முடியாது.

    ×