என் மலர்tooltip icon

    இந்தியா

    இரட்டை பெண் குழந்தைகளை கால்வாயில் வீசி கொலை செய்த தாய்க்கு வாழ்நாள் சிறை..!
    X

    இரட்டை பெண் குழந்தைகளை கால்வாயில் வீசி கொலை செய்த தாய்க்கு வாழ்நாள் சிறை..!

    • கால்வாயில் இரட்டைக் குழந்தைகளின் உடல்களை கண்டெடுக்கப்பட்டது.
    • சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டபொது பெற்ற தாயே கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.

    இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் இரட்டைக் குழந்தைகளை கால்வாயில் வீசி கொலை செய்த, கொடூர தாய்க்கு நீதிமன்றம் வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.

    கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி, மண்டிக்குச் செல்லும் பாதையில் உள்ள ஸ்கொடி கால்வாயில் இரட்டைக் குழந்தைகள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இரண்டும் பெண் குழந்தைகளாகும்.

    இந்த குழந்தைகளை கொலை செய்து வீசியது யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர் குழந்தைகளை தூக்கி வீசும் காட்சியை பார்த்து அதிர்ந்தனர். மேலும், அருகில் உள்ள மற்ற சில சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ரோஹினா என் பெண்தான் குழந்தைகளை கொலை செய்து வீசியவர் என்பதை கண்டுபிடித்தனர். மேலும், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அதை உறுதிப்படுத்தினர்.

    அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

    ரோஹினா தனது மாமியார் வீட்டில் இருந்து வெளியேறி, மற்றொரு நபருடன் ஜலந்தரில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் இரட்டைக் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ஆனால், மண்டியில் உள்ள அவரது முன்னாள் கணவர் வீட்டிற்கு வரும்போது, புதிதாக பிறந்த குழந்தைகள் இல்லாமல் வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் அளிக்க, குழந்தைகளை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×