என் மலர்tooltip icon

    இந்தியா

    இமாச்சல பிரதேசம்: வெள்ள சேதத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி
    X

    இமாச்சல பிரதேசம்: வெள்ள சேதத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி

    • தர்மசாலாவில் வெள்ள பாதிப்பு குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
    • பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை மோடி சந்தித்து கலந்துரையாடினார்.

    சிம்லா:

    உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை இமாச்சல பிரதேசம் புறப்பட்டு சென்றார். துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பிறகு அவர் புறப்பட்டார்.

    இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

    தர்மசாலாவில் வெள்ள பாதிப்பு குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை மோடி சந்தித்து கலந்துரையாடினார். தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில மீட்புப்படையினரையும் அவர் சந்தித்தார்.

    இமாச்சல பிரதேச பயணத்தை முடித்த பிறகு இன்று மாலை பிரதமர் பஞ்சாப் செல்கிறார்.

    Next Story
    ×