இமாச்சலப் பிரதேசத்தை புரட்டிப்போட்ட கனமழை: 105 பேர் உயிரிழப்பு - சேதங்களால் ரூ.786 கோடி இழப்பு

184 பேர் காயமடைந்துள்ளனர், 35 பேர் காணாமல் போயுள்ளனர்.31 திடீர் வெள்ளங்கள், 22 மேக வெடிப்புகள் மற்றும் 18 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தை புரட்டிப்போட்ட கனமழை: 105 பேர் உயிரிழப்பு - சேதங்களால் ரூ.786 கோடி இழப்பு
Published on

இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 20 முதல் ஜூலை 14 வரை, மழை தொடர்பான சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துக்களில் மொத்தம் 105 பேர் உயிரிழந்துள்ளனர். 184 பேர் காயமடைந்துள்ளனர், 35 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதில் மழை தொடர்பான சம்பவங்களால் 61 பேரும், சாலை விபத்துக்களால் 44 பேரும் உயிரிழந்துள்ளனர். மண்டி (17), காங்ரா (14) மற்றும் குல்லு (4) உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 

கனமழை காரணமாக மாநிலத்தில் 786 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது. 199 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

 இந்த பருவமழையில், மாநிலத்தில் 31 திடீர் வெள்ளங்கள், 22 மேக வெடிப்புகள் மற்றும் 18 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.

மண்டியில் 141 சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஜூன் 30 அன்று பெய்த கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட 27 பேரை தேடும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com