என் மலர்
இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் கனமழை- வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி
- திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.
- பல நகரங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள குலு பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டது. மேக வெடிப்பால் அங்கு கனமழை பெய்தது.
இதனால் மலை ஓடைகள், ஆறுகள், காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கன்யாராவில் பகுதியில் உள்ள ஓடையின் அருகே அரசு நீர்மின் திட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்கு தற்காலிக குடில் அமைத்து தங்கியிருந்தனர்.
அங்கு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.
இந்த நிலையில் பல நகரங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.






