

இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், காங்ரா பகுதியில் பாலத்தில் ரெயில் சென்றுகொண்டிருந்த போதே பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக தாங்கு சுவர் இடிந்து விழுந்த சமயத்தில் எந்த விபத்தும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல் கண்காணிப்பாளர் (SP) அசோக் ரத்தன், "அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ரெயில்வே பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ரெயில்வே பாலம் மூடப்பட்டு ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளோம்" என்றார்.
Train Narrowly Dodges Disaster in Himachal as Bridge Retaining Wall Collapses Amid Heavy FloodwatersThe locomotive – reportedly carrying hundreds of passengers – just managed to safely cross the Chakki River in the Kangra district of Himachal Pradesh before part of the bridge… pic.twitter.com/V69QXrwb3n