என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தான் தாக்குதல்: மேஜர் பவன்குமார் வீரமரணம் - இமாச்சல் முதல்வர் இரங்கல்
    X

    பாகிஸ்தான் தாக்குதல்: மேஜர் பவன்குமார் வீரமரணம் - இமாச்சல் முதல்வர் இரங்கல்

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
    • இந்தியாவின் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுபேதார் மேஜர் பவன்குமார் வீரமரணம் அடைந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    பஞ்சாப் ரெஜிமேண்ட் மேஜராக பணிபுரிந்து வந்த பவன்குமார் இறப்புக்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×