என் மலர்
அரியானா
- அம்பேத்கரின் அரசியலமைப்பில் மதம் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உள்ளது.
- ஆனால், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஒப்பந்தங்களை மத அடிப்படையில் வழங்கி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி-க்களின் உரிமையை பறித்துள்ளது.
காங்கிரஸ்க்கு முஸ்லிம்கள் மீது உண்மையிலேயே அனுதாபம் இருந்தால், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை கட்சி தலைவராக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு 50 சதவீதம் இடம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். சமரச அரசியலைத் தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு எதுவும் கிடையாது என விமர்சித்தார்.
மேலும், "அம்பேத்கரின் அரசியலமைப்பில் மதம் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உள்ளது. ஆனால், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஒப்பந்தங்களை மத அடிப்படையில் வழங்கி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி-க்களின் உரிமையை பறித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களில் ஒரு சில அடிப்படைவாதிகளுக்காக திருப்திப்படுத்தும் கொள்கையை காங்கிரஸ் செய்து வந்தபோது, அதே மதத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும், ஏழைகளாகவும் இருந்தனர்.
இதற்கு மிகப்பெரிய சான்று, 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததுதான்.
அவர்களுக்கு உண்மையிலேயே முஸ்லிம்கள் மீது அனுதாபம் இருந்தால், காங்கிரஸ் கட்சியின் தலைவரை முஸ்லிம் மதத்தில் இருந்து நியமனம் செய்ய வேண்டும். அதை அவர்கள் ஏன் செய்யவில்லை?.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொல்வார்கள். ஆனால், அவர்கள் (காங்கிரஸ்) அதை செய்ய மாட்டார்கள். காங்கிரஸில் இருந்து எதையும் செய்யமாட்டார்கள். ஆனால், குடிமக்களின் உரிமையை அவர்களிடம் இருந்து பறிப்பார்கள்" என்றார்.
- பரிசை ஏற்றதற்கு பலரும் சமூக வலைத்தளத்தில் வினேஷ் போகத்தை விமர்சித்து வந்தனர்.
- 2 ரூபாய்க்கு ட்வீட் செய்து இலவச அறிவைப் பகிர்ந்துகொள்பவர்கள்... கவனமாகக் கேளுங்கள்!
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.
இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஜூலானா சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வினேஷ் போகத்துக்கு சலுகை வழங்குவதாக அரியானா அரசு அறிவித்தது.
அதன்படி ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது நிலம் ஒதுக்கீடு அல்லது 'குரூப் A' அரசு வேலை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என்று ஹரியானா அரசு தெரிவித்திருந்தது.
இதில் ரூ.4 கோடி பரிசுத் தொகையை வினேஷ் போகத் தேர்வு செய்தார். காங்கிரசில் இருந்துகொண்டு பாஜக அரசு தரும் பரிசை ஏற்றதற்கு பலரும் சமூக வலைத்தளத்தில் வினேஷ் போகத்தை விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் அவ்வாறு விமர்சிப்பவர்களுக்கு வினேஷ் போகத் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது,
"2 ரூபாய்க்கு ட்வீட் செய்து இலவச அறிவைப் பகிர்ந்துகொள்பவர்கள்... கவனமாகக் கேளுங்கள்!
உங்களுக்குத் தெரியப்படுத்த, நான் உங்களுக்குச் சொல்கிறேன் - இதுவரை, கோடிக்கணக்கான மதிப்புள்ள (விளம்பரத்தில் நடிக்கும்) சலுகைகளை நான் நிராகரித்துவிட்டேன். குளிர்பானங்கள் முதல் ஆன்லைன் கேமிங் வரை.
ஆனால் நான் என் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை.
நான் எதைச் சாதித்திருந்தாலும், அதை நேர்மையான கடின உழைப்பாலும், என் அன்புக்குரியவர்களின் ஆசீர்வாதத்தாலும் செய்திருக்கிறேன். அதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.
சுயமரியாதை கொண்ட தாயின் பாலில் கரைந்த மண்ணின் மகள் நான். உரிமைகள் பறிக்கப்படுவதில்லை, வெல்லப்படுகின்றன என்பதை என் முன்னோர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். எனக்கு நெருக்கமான ஒருவர் சிக்கலில் இருக்கும்போது, அவர்களுடன் ஒரு சுவர் போல எப்படி பாதுகாத்து நிற்பது என்பதும் எனக்குத் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மல்யுத்த வீராங்களைகளுக்கு பாஜகவை சேர்ந்த மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க நடந்த போராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- விக்ஷித் பாரத்திற்கான தீர்வு விக்ஷித் அரியானா ஆகும். டபுள் என்ஜின் அரசால் அரியானா தற்போது டபுள் வேகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது.
- காங்கிரஸ் ஆட்சியில் மின்தடை இருந்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மின் உற்பத்தி இரண்டு மடங்காகியுள்ளது.
பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குறிப்பாக மின்சார உற்பத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
* விக்ஷித் பாரத்திற்கான தீர்வு விக்ஷித் அரியானா ஆகும். டபுள் என்ஜின் அரசால் அரியானா தற்போது டபுள் வேகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது.
* காங்கிரஸ் ஆட்சியில் மின்தடை இருந்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மின் உற்பத்தி இரண்டு மடங்காகியுள்ளது. இந்தியா மின்சாரத்தை ஏற்றுமதி செய்து வருகிறது.
* கர்நாடகா மாநிலத்தில் மின்சாரம் முதல் பால் வரை எல்லாவற்றின் விலையும் காங்கிரஸ் தலைமையிலான அரசு கீழ் உயர்த்தப்பட்டுள்ளது.
* காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பொது மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. இமாச்ச பிரதேசத்தில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் முடங்கியுள்ளதால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஜூலானா சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
- தல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.
இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஜூலானா சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வினேஷ் போகத்துக்கு சலுகை வழங்குவதாக அரியானா அரசு அறிவித்தது. அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது அரியானா ஷாஹ்ரி விகாஸ் பிரதிகரன் (HSVP) கீழ் ஒரு நிலம் ஒதுக்கீடு அல்லது 'குரூப் A' அரசு வேலை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என்று ஹரியானா அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ரூ.4 கோடி பரிசுத் தொகையை வினேஷ் போகத் தேர்வு செய்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை மாநில அரசிடம் சமர்ப்பித்து உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக அரியானாவில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2.5 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை வந்தது.
- அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கான பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகி வருகிறது.
இந்நிலையில் நீதித்துறையை உலுக்கிய வழக்கு ஒன்றில் 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 13, 2008, அப்போதைய பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை டெலிவரி செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த பணம் மற்றொரு நீதிபதி நிர்மல் யாதவ் என்பவருக்கு வழங்கப்பட இருந்ததாகவும், தவறுதலாக நிர்மல்ஜித் கவுர் வீட்டில் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சொத்து பேரம் தொடர்பான விவகாரத்தில் சாதமாக செயல்பட இந்த பணம் நிர்மல் யாதவுக்கு லஞ்சமாக வழங்கப்பட இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

நிர்மல் யாதவ்
அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி நிர்மல் யாதவ் உட்பட 5 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.
இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து தற்போது முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ், மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைவரயும் குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப்பளித்து சண்டிகரில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இறுதி வாதங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும்
- என்ன சலுகைகளைப் பெற விரும்புகிறார் என்று வினேஷ் போகத்திடம் கேட்க அரசாங்கம் முடிவு
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.
இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர்கா தேர்வானார்.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.
ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது ஹரியானா ஷாஹ்ரி விகாஸ் பிரதிகரன் (HSVP) கீழ் ஒரு நிலம் ஒதுக்கீடு அல்லது 'குரூப் A' வேலை ஆகிய மூன்றில் எதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு பேசிய பேசிய நயாப் சிங் சைனி , "வினேஷ் போகட் இந்த பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பினார். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவரது பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு விளையாட்டுக் கொள்கையின் கீழ் சலுகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத் இப்போது ஒரு எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவர் என்ன சலுகைகளைப் பெற விரும்புகிறார் என்று அவரிடம் கேட்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது" எனறு தெரிவித்தார்.
- விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
- அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அரியானா மாநிலத்தில் வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரை உயிருடன் புதைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் தன் மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததை அடுத்து வீட்டு உரிமையாளர் இப்படி செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
அரியானா மாநிலம் ரோதக்கில் உள்ள பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம் அருகே வசித்து வருபவர் ஹர்தீப். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். இந்த வீட்டில் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்தீப் என்பவர் வாடகைக்கு குடியேறினார். அவர் அந்த பகுதியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
வாடகைக்கு குடியேறிய அவர் ஹர்தீப் மனைவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் மனைவியுடன் யோகா ஆசிரியர் ஜக்தீப் தனிமையில் சந்தித்ததை ஹர்தீப் கண்டுபிடித்தார். தன்னுடைய வீட்டில் வாடகைக்கு வந்தவர் மனைவியுடன் கள்ளக்காதலை ஏற்படுத்திக் கொண்டு தகாத முறையில் நடந்து கொண்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, யோகா ஆசிரியர் ஜக்தீப்பை தீர்த்தக்கட்ட ஹர்தீப் முடிவு செய்தார். இந்த கொலையில் தான் சிக்கிவிடக்கூடாது என்பதிலும் மிக கவனமாக இருக்க நினைத்துள்ளார். இதற்காக தனது நண்பருடன் தீவிர ஆலோசனை நடத்தி சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் திட்டம் தீட்டினார்.
அதன்படி ஹர்தீப் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து கொண்டு யோகா ஆசிரியர் ஜக்தீப்பை உயிரோடு குழி தோண்டி புதைக்க முடிவு செய்தார். அதற்காக விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப் போவதாக கூறி பணியாளர்களை அழைத்து வந்து 7 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி தயார் நிலையில் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தேதி ஜக்தீப் வேலைக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஹர்தீப் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து ஜக்தீப்பை கடத்திச் சென்று, ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டிருந்த 7 அடி பள்ளத்தில் தூக்கி வீசினர். தொடர்ந்து அவரை உயிரோடு புதைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் ஹர்தீப் எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார். இந்த நிலையில் யோகா ஆசிரியர் ஜக்தீப்பின் உறவினர்கள் அவரை காணவில்லை என கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி சிவாஜி காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதில் எந்த துப்பும் துலங்கவில்லை. இதனை தொடர்ந்து அவருடைய செல்போன் அழைப்பு பதிவுகளை வைத்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.
சந்தேகத்தின் பேரில் ஹர்தீப்பை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் யோகா ஆசிரியரை கை கால்களை கட்டி உயிரோடு புதைத்து கொலை செய்ததாக தெரிவித்தார்.
இந்த அதிர்ச்சி தகவலை அறிந்த போலீசார் நேற்று முன்தினம் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஹர்தீப் மற்றும் அவருடைய நண்பர் தரம் பால் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவித்தனர்.
- தலையை கெட்டியாக பிடித்து கொண்டு கழுத்தில் சரமாரியாக குத்து விட்டார்.
- விடாமல் அவரை அடித்து உதைத்து புரட்டி எடுத்தார்.
அரியானா மாநிலம், ஹிகார் பகுதியை சேர்ந்தவர் ஸ்வீட்டி பூரா. குத்துச்சண்டை வீராங்கனை. இவரது கணவர் தீபக் ஹூடா. கபடி வீரர்.
தனது கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், தன்னை துஷ்பிரயோகம் செய்வதாக கூறி கோர்ட்டில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்தார்.
மேலும் ஹிகார் போலீசில் கணவர் மீது புகார் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க நேற்று முன்தினம் தீபக் ஹூடா தனது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது ஸ்வீட்டி பூராவும் தனது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

போலீஸ் நிலையத்தில் இருந்த தனது கணவரை கண்ட ஸ்வீட்டி பூரா திடீரென ஆவேசம் அடைந்தார். தனது கணவரின் தலையை கெட்டியாக பிடித்து கொண்டு கழுத்தில் சரமாரியாக குத்து விட்டார்.
இதில் ஸ்வீட்டியின் கணவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். விடாமல் அவரை அடித்து உதைத்து புரட்டி எடுத்தார்.
இதனைக் கண்டு திகைத்துப் போன போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஸ்வீட்டியை விலக்கி விட்டனர்.
ஸ்வீட்டி தாக்கியதில் அவருடைய கணவர் கழுத்தில் 3 இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. ஸ்வீட்டி தனது கணவருக்கு சரமாரியாக குத்து விட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
- முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ரோஹ்தக் தொகுதியிலும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது.
- உள்ளாட்சித் தேர்தலில் 41 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின
அரியானா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி 10 நகராட்சிகளில் ஒன்பது மாநகராட்சிகளை பாஜக வென்றுள்ளது.
மீதமுள்ள ஒரு இடமான மானேசரில் பாஜகவில் இருந்து விலகிய அதிருப்தி தலைவர் இந்திரஜித் யாதவ் வெற்றி பெற்றார்.
குருகிராம், பரிதாபாத், ரோஹ்தக், ஹிசார் மற்றும் மூன்று நகராட்சிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மார்ச் 2 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேலும், மார்ச் 9 ஆம் தேதி பானிபட் நகராட்சிக்கு தனி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இவை தவிர, அம்பாலா மற்றும் சோனிபட் மேயர் பதவிகளுக்கான இடைத்தேர்தல்களும், 21 நகராட்சி குழுக்களின் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல்களும் மார்ச் 2 ஆம் தேதி அன்றே நடத்தப்பட்டன.
இதில் பதிவான வாக்குகள் இன்று (புதன்கிழமை) காலை முதல் எண்ணப்பட்டன. கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பாஜக முன்னிலை பெற்றதால், கட்சித் தலைவர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர்.
காங்கிரஸ் எங்கும் வலுவான போட்டியை அளிக்க முடியவில்லை. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ரோஹ்தக் தொகுதியிலும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. மறுபுறம், 26 வார்டு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முன்னதாக கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது தெரிந்ததே. சட்டமன்றத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் 41 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
- அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்டது.
- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
அரியானாவில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குளாகி உள்ளது.
அரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இந்திய விமானப்படையின் ஜாகுவார் ஏர்கிராஃப்ட் போர் விமானம், பஞ்சகுலாவில் உள்ள மோர்னியின் பால்ட்வாலா கிராமத்திற்கு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் விபத்துக்குள்ளானது.
விமானி ஒரு பாராசூட் துணைகொண்டு தரையிறங்கி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
இருப்பினும் இந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான்.
- சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார்.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் படித்து வந்த 15 வயது சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார். பாட்டியின் கணக்கில் நிறைய பணம் இருந்துள்ளது. பாட்டியின் கணக்கை பயன்படுத்துவது பற்றி சிறுமி தனது பள்ளித் தோழர்களிடம் கூறியுள்ளார்.
அவர்களின் ஒரு மாணவன் இதை தனது மூத்த சகோதரனிடம் கூறியுள்ளான். அந்த சகோதரன் தனது நண்பர்களுடன் இணைந்து சதித்திட்டம் ஒன்றை தீட்டியுள்ளான். சிறுமியின் சமூக வலைதள கணக்கை அறிந்து அவருடன் நட்பாக அந்த இளைஞன் பழகியுள்ளான்.
சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்த மோசடி தொடங்கி சுமார் 8 மாத காலங்களாக நடந்து வந்திருக்கிறது.
இளைஞன் கேட்ட போதல்லாம் சிறுமி ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் வரை தனது பாட்டியின் கணக்கிலிருந்து தனது செல்போன் நெட் பேங்கிங் மூலம் பரிவர்த்தனை செய்துள்ளாள். இவ்வாறு சுமார் ரூ.50 லட்சம் வரை சிறுமியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் பாட்டியின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் போகவே, சிறுமி படித்து வந்த டியூசன் சென்டருக்கு சென்று அந்த இளைஞன் மிரட்டியுள்ளார். இதை கண்ட டியூசன் டீச்சர் சிறுமியிடம் விசாரித்ததில் உண்மை வெளிவந்துள்ளது.
சிறுமியின் குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பரில் விசாரணை தொடங்கியதிலிருந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய குற்றவாளி நவீன் (28) நேற்று கைது செய்யப்பட்டான். நவீனிடமிருந்து ரூ.5 லட்சத்தையும், ஒரு டெபிட் கார்டையும் போலீசார் மீட்டனர். நவீன் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
சிறுமியிடம் மோசடியாகப் பெறப்பட்ட தொகையில் இதுவரை ரூ.36 லட்சம் மீட்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- அரியானா போலீசார் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தனர்.
- மேலும் விசாரணை நடந்து வருகிறது.
காங்கிரஸ் பிரமுகர் ஹிமானி நர்வால் கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ரோதக்கில் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொலை குறித்து விசாரிக்க அரியானா போலீசார் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தனர்.
இந்த நிலையில் நர்வால் கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "ஒருவரை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
ரோதக்கில் உள்ள விஜய் நகரில் வசித்து வந்த நர்வால் அரசியலில் மிக குறுகிய காலக்கட்டத்தில் வளர்ச்சி பெற்று வந்ததை பார்த்து கட்சி தலைவர்கள் சிலர் பொறாமைப்படுவதாக நர்வாலின் தாயார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய நர்வாலின் தாயார் சவிதா, "கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நான் அவளிடம் பேசினேன். மறுநாள் ஒரு கட்சி நிகழ்ச்சியில் மும்முரமாக இருப்பேன் என்று அவள் கூறியிருந்தாள். ஆனால் அவளுடைய தொலைபேசி அணைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. என் மகளுக்கு நீதி கிடைக்காத வரை, நாங்கள் அவளை தகனம் செய்ய மாட்டோம்," என்று அவர் கூறினார்.
அரியானா காங்கிரஸ் தலைவர்கள் நர்வால் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அர்ப்பணிப்புள்ள கட்சி பிரமுகர் என்று தெரிவித்திருந்தனர். அவர் முன்னதாக ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






