என் மலர்
டெல்லி
- மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
- விசாரணையில் மனிஷாவை தாக்கிய சோனு நாய்களைத் தாக்கியதும் தெரிந்தது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் ரகுபீர் நகரில் தெரு விலங்குகளை பராமரிக்கும் இளம்பெண் மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
மனிஷா கிட்டத்தட்ட 150 தெருநாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள கடையில் பணிபுரியும் ஒருவர் அவரை தாக்கினார். இச்சம்பவம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
மனிஷா இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவத்தை விவரித்தார். அதில், பாதுகாப்பற்ற விலங்குகளுக்கு எதிரான கொடுமையை எடுத்துக் காட்டினார். நாய்களைப் பாதுகாக்க முயன்றபோது தன்னைத் தாக்கியதையும் வெளிப்படுத்தினார். நாங்கள் மோசமாக அடிக்கப் பட்டோம். யாரும் எங்களுக்கு உதவவில்லை, எங்களுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, மனிஷாவின் தாயார் சோனு மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் சோனு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மனிஷாவை தாக்கியது சோனு என்பதும், நாய்களை தாக்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- 5-ம் கட்டத் தேர்தல் வருகிற திங்கட்கிழமை.
- பாஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தலில் இதுவரை 4 கட்டத் தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.
5-ம் கட்டத் தேர்தல் வருகிற திங்கட்கிழமை 49 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த 49 தொகுதிகளிலும் நாளை மாலை பிரசாரம் ஓய உள்ளது.
இதையடுத்து, 6-வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. 6-வது கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
6-வது கட்டத் தேர்தலில் 57 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடத்தப்பட உள்ளது. இந்த 57 தொகுதிகளில் பீகாரில் 8, அரியானாவில் 10, ஜார்க்கண்டில் 4, ஒடிசாவில்-6, உத்த ரபிரதேசத்தில்-14, மேற்கு வங்காளத்தில்-8, டெல்லியில்-7 என்ற வகையில் தொகுதிகள் அடங்கி உள்ளன.
இதில் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
5-ம் கட்டத் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்று உள்ள நிலையில் 6-வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நாளை முதல் தீவிரமாக மாற இருக்கிறது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் 6-வது கட்டத் தேர்தல் நடக்கும் அரியானா, டெல்லி, பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம் மாநிலங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த மாநிலங்களில் டெல்லி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாரதீய ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவையும் 7 தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள பாஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
டெல்லியில் சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புதுடெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என்று 7 தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை பாரதீய ஜனதா களம் இறக்கி உள்ளது.
டெல்லி யூனியன் பிரதேசத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், 3 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடு கின்றன.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 தொகுதிகளி லும் போட்டியிடுகிறது என்றாலும் டெல்லியில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இருமுனை போட்டி நிலவுகிறது.
டெல்லியில் பா.ஜ.க., இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் தவிர, 99 சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. 49 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். மொத்தத்தில் 162 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறார்கள்.
அவர்கள் அனைவரும் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 6 நாட்களே அவகா சம் உள்ளது. இதனால் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் உச்சக்கட்ட பிரசாரம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், டெல்லி யில் நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடியும், காங்கி ரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் ஒரே நாளில் தேர்தல் பிரசாரம் செய்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர். பிரதமர் மோடி நாளை வடகிழக்கு டெல்லி தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அந்த தொகுதியில் உள்ள கோண்டா என்ற இடத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனப் பேரணி நடத்திவிட்டு அந்த கூட்டத்தில் மோடி பேச உள்ளார்.
வடகிழக்கு டெல்லி தொகுதியில் டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதால் நாளை டெல்லியில் மோடி பிரசா ரத்தில் பல்லாயிரக்கணக் கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை 2 தொகுதிகளில் ஆதரவு திரட்ட உள்ளார். சாந்தினி சவுக் மற்றும் வடமேற்கு டெல்லி தொகுதி களில் அவர் வாகனப் பேரணி நடத்துகிறார்.
அதன் பிறகு அவர் சாந்தினி சவுக் தொகுதியில் அசோக் விகார் என்ற பகுதியில் ஜே.பி.அகர்வா லையும், வடமேற்கு டெல்லி தொகுதியில் உதித் ராஜையும் ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கு பிறகும் 2 நாட்கள் டெல்லியில் பிரசாரம் செய்ய ராகுல் திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் மோடி நாளை ஒரு கூட்டத்தில் பேசிய பிறகு மீண்டும் 22-ந் தேதி டெல்லியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அன்று வடமேற்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் வாகனப் பேரணி நடத்த உள்ளார். அந்த தொகுதியில் உள்ள துவாரகா என்ற இடத்திலும் பொதுக் கூட்டத்திலும் பேச இருக்கிறார்.
இதற்கிடையே இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்காவும் டெல்லியில் 2 அல்லது 3 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இஸ்லா மியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு பிரியங்கா செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி, சாந்தினி சவுக் தொகுதியில் உள்ள 3 இடங்களில் பிரியங்கா பொதுக் கூட்டத்தில் பேச இருக்கிறார்.
ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்-மந்திரியு மான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் 6 நாட்களும் முற்றுகையிட்டு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் சேர்ந்து ஆதரவு திரட்ட உள்ளார். கெஜ்ரிவால் மாடல் டவுன், ஜகான்கீர் பூத் பகுதிகளில் வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி வேட்பா ளர்கள் போட்டியிடும் தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, புதுடெல்லி ஆகிய 4 தொகுதிகளிலும் முக்கிய வீதிகளுக்கு சென்று ஆதரவு திரட்டவும் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். அவர் தவிர ஆம் ஆத்மி மூத்த தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் சென்று பேச ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவும் 7 தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
வருகிற 20-ந் தேதி புதுடெல்லி தொகுதியிலும், 21-ந் தேதி சாந்தினி சவுக் தொகுதியிலும் நட்டா வாகனப் பேரணி நடத்த உள்ளார். தலை வர்களின் முற்றுகையால் டெல்லியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
- தனி நாடு என யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது.
- தென் மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது.
புதுடெல்லி:
மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தனிநாடு என்று யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது. தற்போது இந்த நாட்டை பிரிக்கவே முடியாது.
காங்கிரஸ் கட்சியின் உயரிய தலைவர் ஒருவர் வடஇந்தியா மற்றும் தென்னிந்தியாவை பிரிப்பது பற்றி பேசினார். காங்கிரஸ் கட்சி அதை மறுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டத்தை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.
கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது.
பெரும்பான்மை பெற முடியாததற்கான சாத்தியக்கூறுகள் எதையும் காணவில்லை. பலம் வாய்ந்த 60 கோடி பயனாளிகள் பிரதமர் மோடியுடன் நிற்கின்றனர். அவர்களுக்கு ஜாதி, வயது, பிரிவு கிடையாது.. இந்தச் சலுகைகள் பெற்ற அனைவருக்கும் நரேந்திர மோடி தெரியும்
பிளான் ஏ வெற்றி பெற 60 சதவீதத்துக்கும் குறைவான வாய்ப்பு இருக்கும்போது மட்டுமே திட்டம் பிளான் பி திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.
#WATCH | 'What if BJP doesn't cross 272 on 4th June?', Union Home Minister Amit Shah answers.
— ANI (@ANI) May 17, 2024
"I don't see any such possibilities. An army of 60 crore-strong beneficiaries are standing with PM Modi, they have no caste or age group...Those who have received all these benefits… pic.twitter.com/JRmZioEe8o
- இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அரசுமீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்துவருகின்றன.
- ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்.
புதுடெல்லி:
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதையடுத்து, டெல்லி போலீசார் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் மே 17-ம் தேதி காலை 11 மணி அளவில் தேசிய மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் அரசுமீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன.
இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் எழுத்துப்பூர்வமாக போலீசிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், முதல் மந்திரியின் தனிச்செயலர் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் நேற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
- ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, ஸ்டாம்ப் வரி, எஸ்டிடி, நீண்ட கால மூலதன ஆதாய வரி.
- இன்றைய காலக்கட்டத்தில் எங்களை போன்ற இடைத்தரகரை விட இந்திய அரசு அதிக அளவில் வருமானம் ஈட்டுகிறது.
இந்திய நிதிச் சந்தைகளுக்கான பார்வை என்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் உடன் மும்பையைச் சேர்ந்த முதலீட்டிற்கான இடைத்தரகர் ஒருவர் அரசு வசூலிக்கும் வரி தொடர்பாக தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
அந்த புரோக்கர், "ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, ஸ்டாம்ப் வரி, எஸ்டிடி, நீண்ட கால மூலதன ஆதாய வரி உள்ளிட்ட வரிகள் மூலம், எங்களைப் போன்ற இடைத்தரகரை விட அரசு அதிக அளவில் வருமானம் ஈட்டும் நிலை உருவாகியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் எங்களை போன்ற இடைத்தரகரை விட இந்திய அரசு அதிக அளவில் வருமானம் ஈட்டுகிறது.
முதலீட்டாளர்கள், இடைத்தரகர்கள் அடிக்கடி கடினமான ரிஸ்க் எடுக்கும் நிலையில், அரசு எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்கவில்லை. நான் மொத்தமாக அனைத்து ரிஸ்க்கையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அரசு அனைத்து வகையிலான லாபத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறது.
நீங்கள் (அரசு) என்னுடைய ஸ்லீப்பிங் பார்ட்னர் (முதலீடு செய்யாமல் சாம்பாதிப்பவர்) நான் வொர்க்கிங் பார்ட்னர் (நிர்வாகம் தொடர்பான அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்பவர்).
இவ்வாறு அந்த இடைத்தரகர் தனது குமுறலை தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராம், ஸ்லீப்பிங் பார்ட்னர் இங்கே உட்கார்ந்து கொண்டு பதில் சொல்ல முடியாது" என்றார். நிர்மலா சீதாராமனின் பதிலை கேட்டு பார்வையாளர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அதேவேளையில் மோடி தலைமையிலான 10 வருட ஆட்சியில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு கட்டமைப்புகளை உருவாக்க மோடி அரசு கொண்டு வந்த கொள்கைகள் குறித்து பேசினார். 3.74 லட்சம் கி.மீட்டர் தூரம் கிராமப் புற சாலைகள் போடப்பட்டுள்ளன. நகர்ப் பகுதிகளில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அடைந்துள்ளன என்றார்.
ஒரு படத்தில் தோசை ஆர்டர் செய்யும் வடிவேலு அது எப்படி சுட வேண்டும் என்று சப்ளையரிடம் நீண்டம் நேரம் விளக்கிக் கூறுவார். அதையெல்லாம் கேட்ட சப்ளையர், இறுதியாக அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் எனக் கூறும் காமெடி மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்காது என்பது அரவிந்த் கெஜ்ரிவாலின் அனுமானம்.
- எங்களுடைய உத்தரவு (அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2-ந்தேதி ஜெயிலுக்கு திரும்ப வேண்டும்) மிகவும் தெளிவாக உள்ளது.
இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது "நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள்.
நான் மீண்டும் ஜூன் 2-ம்தேதி சிறைக்கு செல்ல வேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள்" என தெரிவித்தார்.
கெஜ்ரிவால் இவ்வாறு பேசியிருப்பது நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும். உச்ச நீதிமன்ற நிபந்தனைகளை மீறிவிட்டார். இதனால் இடைக்கால ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
அமலாக்கத்துறையின் மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறுகையில் "ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்காது என்பது அரவிந்த் கெஜ்ரிவாலின் அனுமானம். அதைப்பற்றி நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. எங்களுடைய உத்தரவு (அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2-ந்தேதி ஜெயிலுக்கு திரும்ப வேண்டும்) மிகவும் தெளிவாக உள்ளது. இது நீதிமன்றம் உத்தரவு. நாங்கள் சட்டத்தின் ஆட்சியால் ஆளப்படுகிறோம்.
எங்களுடைய முடிவு குறித்த விமர்சனத்தை வரவேற்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் செல்லவில்லை. எங்களுடைய உத்தரவு தெளிவாக உள்ளது. நாங்கள் தேதி நிர்ணயித்துள்ளோம். இடைக்கால ஜாமின் வழங்கியதற்கான காரணத்தையும் கொடுத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.
- இந்தியா கூட்டணியை ஆதரித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
- இரு கட்சி தொண்டர்களும் இந்தியா கூட்டணி வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.
புதுடெல்லி:
டெல்லியில் வருகிற 25-ந்தேதி 6- வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களுக்கு இருப்பதால் அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
டெல்லியில் பாரதீயஜனதாவை வீழ்த்த ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் ஒன்றாக கைகோர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 4 இடங்களில் ஆம்ஆத்மியும், மீதமுள்ள 3 தொகுதிகளில் காங்கிரசும் களம் இறங்கி உள்ளது.
டெல்லி முதல்- மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மது பான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்ததால் அவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார். இதையடுத்து அவர் உடனடியாக பிரசாரத்திலும் குதித்தார். இது ஆம் ஆத்மி கட்சியினரிடையே உற்சாகத்தை அளித்துள்ளது.
ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று அவர் லால் பாக் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் அகர்வாலுடன் ரோடு ஷோ நடத்தினார். இந்த ரோடு ஷோவில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானவர்கள் திரண்டனர். இரு கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.
ஜகாங்கீர்பூரி என்ற பகுதியில் கெஜ்ரிவாலுடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் உதித் ராஜ் (வட மேற்கு டெல்லி) கன்னையாகுமார் (வட கிழக்கு) ஆகியோர் கெஜ்ரிவாலுடன் இணைந்து கொண்டனர். காங்கிரசை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
எங்கள் கட்சி சிறியது தான். நானும் சிறியவன் தான். ஆனால் எங்கள் கட்சி (ஆம் ஆத்மி) டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ளது.என்னை எதற்காக ஜெயிலில் அடைத்தார்கள் என தெரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன்.
டெல்லியில் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, பள்ளிகளுக்கு சிறந்த கட்டிடம் கட்டியது, பொது
மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்தது தான் நான் செய்த குற்றமா? நான் மீண்டும் ஜெயிலுக்கு செல்வதா? வேண்டாமா? என்பது உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் தாமரைக்கு (பா.ஜ.க.) ஓட்டு போட்டால் மறுபடியும் நான் ஜெயிலுக்கு சென்று விடுவேன். இந்தியா கூட்டணியை ஆதரித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு அனுமன் ஆசீர்வாதம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் இருந்து வந்த பிறகு ஆம் ஆத்மிக்கு ஆதரவாக 4 இடங்களில் ரோடு ஷோ நடத்தினார். இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது 3 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் ரோடு ஷோ நடத்தி உள்ள
தால் காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த பிரசாரத்தின் போது அவர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளார். இதை ஏற்று இரு கட்சி தொண்டர்களும் பம்பரமாக சுழன்று இந்தியா கூட்டணி வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.
இதை பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள்.
- நான் மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறைக்கு செல்லவேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அவருக்கு ஜூன் 1-ந்தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. அதனைத் தொடர்ந்து அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, "நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள். நான் மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறைக்கு செல்லவேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள்" என தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரசாரம், ஆட்சிக்கு வந்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டாமா? என்ற விமர்சனத்தை எழுப்பியது. அமித் ஷாவும் இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்திருந்தார். கெஜ்ரிவாலின் பேச்சு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாகும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
- பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைதுசெய்ய முடியாது.
- அவரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி பெறவேண்டும்.
புதுடெல்லி:
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது.
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமின் மனு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ் ஒகா மற்றும் உஜல் புயான் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைதுசெய்ய முடியாது.
குற்றம்சாட்டப்பட்ட நபரை காவலில் எடுக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்ய வேண்டும்.
காவலில் எடுப்பதற்கான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்து அமலாக்கத்துறை மனு மீது சிறப்பு நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும்.
நீதிமன்றம் அனுப்பிய சம்மனின் கீழ் ஆஜரானவர்கள் ஜாமினுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது.
- சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வேறு வழக்குகளில் ஆஜராவதால் அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை அவரது ஜாமின் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வேறு வழக்குகளில் ஆஜராவதால் அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் ஜூலை 10-ந்தேதிக்கு ஜாமின் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தது.
- மக்கள் எழுந்து நின்று அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும்.
- குடிமக்கள் முன் வராவிட்டால் பரேலியில் நடந்தது போல உரிமைகள் பறிக்கப்பட்டு சுயமரியாதை நசுக்கப்படும்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
இங்குள்ள பரேலி தொகுதியில் கடந்த 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இந்த தொகுதியில் தலித் வாலிபர் ஒருவர் பா.ஜனதாவுக்கு ஓட்டு போடாமல் இருந்ததாக கூறி கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். பா.ஜனதாவினர் அவர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யும், ரேபரேலி தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி இது தொடர்பாக பா.ஜனதாவை கடுமையாக சாடியுள்ளார். அவர் இது குறித்து தனது எக்ஸ் தளப்பதிவில் கூறி இருப்பதாவது:-
நாங்கள் அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இருக்கிறோம். இது வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. கோபமாகவும் உணர்ந்தோம். எங்கள் நாட்டு மக்களுக்கு என்ன நடக்கிறது.
பா.ஜனதா அரசு அரசியலமைப்பு உரிமைகளை அழிக்கிறது. காவி கட்சி அரசியல் அமைப்பை மாற்ற விரும்புகிறது. இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது.
மக்கள் எழுந்து நின்று அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும். குடிமக்கள் முன் வராவிட்டால் பரேலியில் நடந்தது போல உரிமைகள் பறிக்கப்பட்டு சுயமரியாதை நசுக்கப்படும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டு உள்ள மற்றொரு பதிவில் கூறி இருப்பதாவது:-
பா.ஜனதா பொய்களின் தொழிற்சாலையாகும். நான் மீண்டும் சொல்கிறேன். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு நரேந்திரமோடி பிரதமராக முடியாது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் புயல் வீசுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
नरेंद्र मोदी और भाजपा गरीबों का सबसे ताकतवर हथियार 'संविधान' उनसे छीन लेना चाहते हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) May 15, 2024
अगर आप संविधान की रक्षा के लिए नहीं खड़े हुए तो आपके अधिकार छीन कर आत्मसम्मान को रोज़ रौंदा जाएगा - जैसा बरेली में हुआ, वो देश भर में होगा।
इसलिए अपनी कमर कस लीजिए और सत्ता से उखाड़ फेंकिए… pic.twitter.com/LQhizgXbWg
- சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
- இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு கடந்த 20 ஆண்டுகளாக அவர் பங்களிப்பு அளித்து வந்துள்ளார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.
கால்பந்து வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனக்கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். சுனில் சேத்ரியின் இந்த அறிவிப்பால் இந்திய கால்பந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுகிறார்.
I'd like to say something... pic.twitter.com/xwXbDi95WV
— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024






