search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் கெஜ்ரிவால் பிரசாரத்தால் காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகம்
    X

    டெல்லியில் கெஜ்ரிவால் பிரசாரத்தால் காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகம்

    • இந்தியா கூட்டணியை ஆதரித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
    • இரு கட்சி தொண்டர்களும் இந்தியா கூட்டணி வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் வருகிற 25-ந்தேதி 6- வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களுக்கு இருப்பதால் அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    டெல்லியில் பாரதீயஜனதாவை வீழ்த்த ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் ஒன்றாக கைகோர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 4 இடங்களில் ஆம்ஆத்மியும், மீதமுள்ள 3 தொகுதிகளில் காங்கிரசும் களம் இறங்கி உள்ளது.

    டெல்லி முதல்- மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மது பான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்ததால் அவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார். இதையடுத்து அவர் உடனடியாக பிரசாரத்திலும் குதித்தார். இது ஆம் ஆத்மி கட்சியினரிடையே உற்சாகத்தை அளித்துள்ளது.

    ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    நேற்று அவர் லால் பாக் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் அகர்வாலுடன் ரோடு ஷோ நடத்தினார். இந்த ரோடு ஷோவில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானவர்கள் திரண்டனர். இரு கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

    ஜகாங்கீர்பூரி என்ற பகுதியில் கெஜ்ரிவாலுடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் உதித் ராஜ் (வட மேற்கு டெல்லி) கன்னையாகுமார் (வட கிழக்கு) ஆகியோர் கெஜ்ரிவாலுடன் இணைந்து கொண்டனர். காங்கிரசை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    எங்கள் கட்சி சிறியது தான். நானும் சிறியவன் தான். ஆனால் எங்கள் கட்சி (ஆம் ஆத்மி) டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ளது.என்னை எதற்காக ஜெயிலில் அடைத்தார்கள் என தெரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன்.

    டெல்லியில் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, பள்ளிகளுக்கு சிறந்த கட்டிடம் கட்டியது, பொது

    மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்தது தான் நான் செய்த குற்றமா? நான் மீண்டும் ஜெயிலுக்கு செல்வதா? வேண்டாமா? என்பது உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் தாமரைக்கு (பா.ஜ.க.) ஓட்டு போட்டால் மறுபடியும் நான் ஜெயிலுக்கு சென்று விடுவேன். இந்தியா கூட்டணியை ஆதரித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு அனுமன் ஆசீர்வாதம் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் இருந்து வந்த பிறகு ஆம் ஆத்மிக்கு ஆதரவாக 4 இடங்களில் ரோடு ஷோ நடத்தினார். இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    தற்போது 3 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் ரோடு ஷோ நடத்தி உள்ள

    தால் காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த பிரசாரத்தின் போது அவர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளார். இதை ஏற்று இரு கட்சி தொண்டர்களும் பம்பரமாக சுழன்று இந்தியா கூட்டணி வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.

    இதை பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×