search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கைது நடவடிக்கை: அமலாக்கத் துறைக்கு கட்டுப்பாடு விதித்த சுப்ரீம் கோர்ட்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கைது நடவடிக்கை: அமலாக்கத் துறைக்கு கட்டுப்பாடு விதித்த சுப்ரீம் கோர்ட்

    • பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைதுசெய்ய முடியாது.
    • அவரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி பெறவேண்டும்.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமின் மனு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ் ஒகா மற்றும் உஜல் புயான் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

    சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைதுசெய்ய முடியாது.

    குற்றம்சாட்டப்பட்ட நபரை காவலில் எடுக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்ய வேண்டும்.

    காவலில் எடுப்பதற்கான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்து அமலாக்கத்துறை மனு மீது சிறப்பு நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும்.

    நீதிமன்றம் அனுப்பிய சம்மனின் கீழ் ஆஜரானவர்கள் ஜாமினுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×