search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஓமம் மோர் கஞ்சி
    X
    ஓமம் மோர் கஞ்சி

    உடல் சோர்வை போக்கும் ஓமம் மோர் கஞ்சி

    ஓமத்தில் கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கல் அரிசி நொய் - கால் கப்
    ஓமம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மோர் - 1 கப்

    ஓமம் மோர் கஞ்சி

    செய்முறை :

    வாணலியில் ஓமத்தையும் புழுங்கல் அரிசியையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள்.

    புழுங்கல் அரிசியை ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்துக் குழைய வேகவையுங்கள்.

    ஓமத்தை மிக்ஸியில் பொடித்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்ததும் வடிகட்டுங்கள்.

    இந்த ஓமத் தண்ணீருடன் வேகவைத்துள்ள கஞ்சியில் சேர்த்துப் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    கடைசியாக அதனுடன் மோர் சேர்த்தும் குடிக்கலாம்.

    வயிறு உப்புசத்தையும் செரிமானக் கோளாறை போக்கி உடலை சுறுசுறுப்பாக்கும் இந்தக் கஞ்சி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×