என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான பச்சை மஞ்சள் ஊறுகாய்
Byமாலை மலர்20 May 2021 9:32 AM GMT (Updated: 20 May 2021 9:32 AM GMT)
கடைகளில் கிடைக்கும் விரலி மஞ்சள் விளை நிலங்களில் அறுவடை செய்யப்ப்டடு கொதிநீரில் இட்டு நன்கு வேக வைத்த பின்னரே விற்பனைக்கு வருகிறது. இங்கே சொல்லப்படும் ஊறுகாய் தயாரிப்பு முறையானது வேக வைக்காத பச்சை மஞ்சளை பயன்படுத்தி செய்யப்படுவதாகும்.
தேவையான பொருட்கள்
பச்சை மஞ்சள்(தோல் சீவி துருவியது) - கால் கிலோ
எலுமிச்சை பழம் - 3
நல்லெண்ணெய் - 100 மிலி
வெந்தயம் - 2 டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
கல்உப்பு - 4 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து ஆறவைத்து பெருங்காயம் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
எலுமிச்சை பழ சாறை பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்யை சூடாக்கி 1 டீஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும். அடுப்பை மிதமாக வைத்து துருவி வைத்த மஞ்சளை போட்டு பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும்.
அதன் பின்னர் அரைத்து வைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து ஒன்றிரண்டு நிமிடங்கள் வதக்கி விட்டு எலுமிச்சைசாறு அதில் சேர்க்க வேண்டும். கொதிக்கும் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலக்கும் போது உருவாகும் வெடிப்பு தணியும் வரை காத்திருந்த பின்னர் 5 நிமிடங்கள் வதக்கி விட்டு அடுப்பை அணைத்து ஆற விடவும்.
நன்றாக ஆறியவுடன் அதை கண்ணாடி பாட்டிலில் இட்டு பிரிட்ஜில் வைத்து சுமார் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
பச்சை மஞ்சள்(தோல் சீவி துருவியது) - கால் கிலோ
எலுமிச்சை பழம் - 3
நல்லெண்ணெய் - 100 மிலி
வெந்தயம் - 2 டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
கல்உப்பு - 4 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து ஆறவைத்து பெருங்காயம் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
எலுமிச்சை பழ சாறை பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்யை சூடாக்கி 1 டீஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும். அடுப்பை மிதமாக வைத்து துருவி வைத்த மஞ்சளை போட்டு பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும்.
அதன் பின்னர் அரைத்து வைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து ஒன்றிரண்டு நிமிடங்கள் வதக்கி விட்டு எலுமிச்சைசாறு அதில் சேர்க்க வேண்டும். கொதிக்கும் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலக்கும் போது உருவாகும் வெடிப்பு தணியும் வரை காத்திருந்த பின்னர் 5 நிமிடங்கள் வதக்கி விட்டு அடுப்பை அணைத்து ஆற விடவும்.
நன்றாக ஆறியவுடன் அதை கண்ணாடி பாட்டிலில் இட்டு பிரிட்ஜில் வைத்து சுமார் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X