search icon
என் மலர்tooltip icon

    பிரான்ஸ்

    • முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது
    • 2-வது பாதி ஆட்டத்தில் நைஸ் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது

    பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து தொடர் லீக்-1. இதில் முன்னணி அணியாக பிஎஸ்ஜி திகழ்ந்து வருகிறது. இந்த அணியில் இருந்து மெஸ்சி, நெய்மர் ஆகியோர் வெளியேறிவிட்டனர். நட்சத்திர வீரர் எம்பாப்வே அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்திய நேரப்படி இன்று காலை பிஎஸ்ஜி அணி நைஸ் அணியை எதிர்கொண்டது. இதில் எம்பாப்பே இரண்டு கோல்கள் அடித்த போதிலும், 2-3 என நைஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

    ஆட்டம் தொடங்கிய 21-வது நிமிடத்தில் நைஸ் அணியின் டெரெம் மொஃப்பி கோல் அடித்தார். இதற்கு எம்பாப்வே 29-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 சமனில் இருந்தது.

    2-வது பாதி நேரத்தில் நைஸ் வீரர்கள் அபாரமாக விளையாடினர். 53-வது நிமிடத்தில் கயேடன் லபோர்டேவும், 68-வது நிமிடத்தில் மொஃப்பியும் கோல் அடித்தனர். இதனால் நைஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் பிஎஸ்ஜி அணியால் கோல் அடிக்க முயற்சித்தது. ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆனால், அதன்பின் பிஎஸ்ஜி அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்காரணமாக பிஎஸ்ஜி 2-3 எனத் தோல்வியை சந்தித்தது.

    இந்தத் தோல்வியால் பிஎஸ்ஜி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது. மொனாக்கோ முதல் இடத்திலும், நைஸ் 2-வது இடத்திலும் உள்ளது.

    • இருவரையும் மீட்பதற்காக சிறப்பு பிரிவு உள்பட தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
    • பொது மக்களின் பார்வைக்காக ஈபிள் கோபுரம் திறப்பதில் ஒரு மணி நேரம் தாமதமானது.

    பிரான்ஸ், பாரிஸிற்கு சுற்றுலா வந்த இரண்டு அமெரிக்கர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியின் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஈபிள் கோபுரம் பொதுவாக காலை 9மணிக்கு சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும். திறப்பதற்கு முன்னதாக பாதுகாவலர்கள் கோபுரத்தில் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அப்போது, அமெரிக்கர்கள் இரண்டு பேர் கோபுரத்தின் உச்சியில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அமெரிக்க பயணிகள் இருவரும் அதிகளவில் மது அருந்தி இருந்ததால், கோபுரத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலைகளுக்கு இடையே பொதுவாக பொதுமக்கள் அனுமதிக்கப்படாத ஒரு இடத்தில் இரவு முழுவதும் உறங்கியுள்ளனர். ஆனால், இருவரும் எந்தவொரு வெளிப்படையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்தனர்.

    ஞாயிற்றுக்கிழமை இரவு 10.40 மணியளவில் நுழைவுச் சீட்டுக்கு பணம் செலுத்திய பிறகு, கோபுரத்தின் உச்சியில் இருந்து படிக்கட்டுகளில் ஏறும்போது இருவரும் பாதுகாப்பு தடைகளைத் தாண்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும், இருவரையும் மீட்பதற்காக சிறப்பு பிரிவு உள்பட தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால், பொது மக்களின் பார்வைக்காக ஈபிள் கோபுரம் திறப்பதில் ஒரு மணி நேரம் தாமதமானது.

    • 2004ம் ஆண்டில், பள்ளிகளில் முக்காடு அணிவதைத் தடைசெய்தது.
    • 2010ம் ஆண்டில் பொது இடங்களில் முழு முகத்தை மூடுவதற்குத் தடை விதித்தது.

    பிரான்ஸ் அரசு நடத்தும் பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா (பர்தா) எனப்படும் ஆடையை அணிவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    பிரான்ஸ், 19ம் நூற்றாண்டு சட்டங்கள் பொதுக் கல்வியில் இருந்து பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதில் இருந்து அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அமல்படுத்தியது. மேலும், வளர்ந்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை புதுப்பிக்கவும் போராடியது.

    2004ம் ஆண்டில், பள்ளிகளில் முக்காடு அணிவதைத் தடைசெய்தது மற்றும் 2010ம் ஆண்டில் பொது இடங்களில் முழு முகத்தை மூடுவதற்குத் தடை விதித்தது. இந்த தடை உத்தரவுகள் அங்கு வசித்து வரும் ஐந்து மில்லியன் வலிமையான இஸ்லாமிய சமூகத்தில் சிலரைக் கோபப்படுத்தியது. மதச்சார்பின்மையைப் பாதுகாப்பது என்பது பிரான்சில் ஒரு பேரணியாக உள்ளது.

    இந்நிலையில், "பள்ளிகளில் இனி அபாயா அணிய முடியாது என்று முடிவு செய்துள்ளேன்" என்று கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் கூறினார்.

    "நீங்கள் வகுப்பறைக்குள் செல்லும்போது, மாணவர்களைப் பார்த்து அவர்களின் மதத்தை நீங்கள் அடையாளம் காண முடியாது," என்று அவர் கூறினார்.

    • ஐரோப்பிய ஒன்றியத்தில் வைன் அருந்தும் பழக்கம் குறைந்து சரிவை சந்தித்துள்ளது
    • அதிக உற்பத்தி ஆனால் குறைவான விற்பனை எனும் நிலையில் வியாபாரம் சரிவை சந்தித்துள்ளது

    ஐரோப்பிய மதுப்பிரியர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்து ஐரோப்பிய கமிஷன் ஜூன் மாதத்திற்கான ஒரு தரவை வெளியிட்டது. இதன்படி வைன் அருந்தும் பழக்கம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிகிறது.

    நாடுகள் வாரியாக, இத்தாலியில் 7 சதவீதம், ஸ்பெயினில் 10 சதவீதம், பிரான்ஸில் 15 சதவீதம், ஜெர்மனியில் 22 சதவீதம் மற்றும் போர்ச்சுகலில் 34 சதவீதம் என்று சரிவின் சதவீதம் உள்ளது. அதே சமயத்தில், உலகின் மிக பெரிய வைன் தயாரிப்பாளர்களான ஐரோப்பிய ஒன்றியத்தில் வைன் உற்பத்தி 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    ஐரோப்பிய ஒன்றியத்தில் சில வருடங்களாகவே மக்களின் வாங்கும் சக்தி பொருளாதார காரணங்களால் குறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் தொழிற்சாலை சாராத வழியில் தயாரிக்கப்படும் பீர் மதுபானத்தை விரும்பி அருந்த தொடங்கியுள்ளனர்.

    இதனால் "அதிக உற்பத்தி ஆனால் குறைவான விற்பனை" எனும் நிலை தோன்றி வைன் வியாபாரம் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் அதிகப்படியாக உற்பத்தியாகி உள்ள வைன் மதுபானத்தை அழிக்கவும், அதே சமயம் வைன் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கவும், பிரான்ஸ் அரசாங்கம் சுமார் ரூ.1782 கோடி (200 மில்லியன் யூரோ) செலவிடுகிறது.

    அதிக வைன் பானங்களையும், கைகளை சுத்தம் செய்ய உதவும் சானிடைசர், சுத்திகரிப்பு பொருட்கள், நறுமண பொருட்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் வகைகளை அரசாங்கம் வாங்கி கொள்வதற்கும், வைன் உற்பத்தியாளர்களை ஆலிவ் போன்ற மாற்று விவசாய உற்பத்தியில் ஈடுபட ஊக்குவிக்கவும் இந்த தொகை பயன்படுத்தப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.

    "அரசு உதவி செய்தாலும் மது உற்பத்தியாளர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து தாங்களாகவே திட்டமிட்டு, உபயோகிப்பாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தங்கள் தயாரிப்புகளை மாற்றி கொள்ள வேண்டும்" என அந்நாட்டு விவசாய துறை அமைச்சர் மார்க் ஃபெஸ்னு தெரிவித்தார்.

    • பாரீஸ் நகரில் உலக கோப்பை வில்வித்தை போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்று அசத்தின.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உலக கோப்பை வில்வித்தை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இறுதிப்போட்டியில் திரில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளன.

    இரு அணிகளும் காம்பவுண்டு வில்வித்தை குழு போட்டியில் வெற்றி பெற்றன. இந்தியாவின் ஓஜாஸ் பிரவீன் டியோடேல், பிரதமேஷ் ஜாக்கர் மற்றும் அபிசேக் வர்மா ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி இறுதி போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டது. போட்டி முடிவில், 236-232 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இதேபோன்று, அதிதி கோபிசந்த் சுவாமி, ஜோதி சுரேகா வென்னம் மற்றும் பர்நீத் கவுர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி இறுதிப் போட்டியில் மெக்சிகோ அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில், 234-233 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தங்க பதக்கம் தட்டி சென்றது.

    சமீபத்தில் இந்திய மகளிர் அணி ஜெர்மனியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது ஈபிள் டவர். உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. கடந்த 1889-ஆம் ஆண்டு ஈபிள் டவர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. உலகில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஈபிள் டவர் உள்ளது.

    இந்நிலையில், ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக இன்று மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ஈபிள் டவர் மூடப்பட்டது.

    வெடிகுண்டு சோதனை தீவிரமாக நடத்தப்பட்ட பிறகு, அந்த மிரட்டல் போலியானது என தெரிய வந்தது. 2 மணி நேரம் கழித்து எச்சரிக்கை நீக்கப்பட்டு மீண்டும் ஈபிள் டவர் சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

    • 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்
    • இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி கலவரமாக வெடித்தது

    பிரான்ஸ் நாட்டில் சென்ற மாத இறுதியில் நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவன் பலியானான். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து சில மணி நேரங்களில் அந்நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்து, வன்முறை அதிகரித்தது.

    இக்கலவரம் பிரான்ஸில் 2005-ல் நடந்த கலவரத்திற்கு பிறகு நடைபெற்ற ஒரு மோசமான கலவரம் என வர்ணிக்கப்பட்டது.

    உயரடுக்கு காவல்துறை சிறப்புப் படைகள் மற்றும் கவச வாகனங்கள் உட்பட சுமார் 45,000 பாதுகாப்பு படைகளை கொண்டு 4 நாட்களாக பெரும் முயற்சி செய்து நிலைமையை அந்நாட்டு அரசாங்கம் கட்டுக்குள் கொண்டு வந்தது.

    கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்து கொண்டனர். இதனால் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வழக்குகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

    "உறுதியான மற்றும் முறையான செயலாக்கத்தை நாம் காட்ட வேண்டியது மிகவும் முக்கியமானது. நாட்டின் ஒழுங்கை மீண்டும் நிறுவுவது அவசியம். நீதிமன்றங்கள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்" என பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் எரிக் டுபாண்ட்-மோரெட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் கலவரங்கள் தொடர்பாக 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனை பாராட்டி மோரெட்டி கருத்து கூறும்போது, நீதிபதிகளின் உறுதியான தீர்ப்பை பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.

    மொத்தம் 1,278 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களில் 95 சதவிகிதத்திற்கு அதிகமானோர் பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது, காவல்துறை அதிகாரிகளை தாக்குவது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றுள்ளனர். 600 பேர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில நீதிமன்றங்கள் வார இறுதியில் வழக்குகளை கையாள்வதற்காக திறந்திருந்தன.

    கைது செய்யப்பட்ட 3,700 பேரின் சராசரி வயது வெறும் 17 ஆகும். அவர்கள் தனித்தனியாக குழந்தைகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டனர்.

    2005-ம் ஆண்டு நடந்த பெரும் கலவரத்தின்போது 400 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனை அப்போதைய எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெளவால் தாக்கியது என நினைத்தேன். பிறகு அதை ஒரு சிமெண்ட் துண்டு என்று நினைத்தோம்
    • அப்பொருளின் உள்ளே இரும்பு மற்றும் சிலிக்கான் கலவை இருந்தது

    மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக கருதப்படும் ஒரு சம்பவம் பிரான்ஸ் நாட்டில் நடந்திருக்கிறது. சுமார் 10 நாட்களுக்கு முன்பு, அங்கு ஒரு பெண் மொட்டை மாடியில் அமர்ந்து தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். திடீரென கூழாங்கல் போன்ற ஒரு பொருள் அவர் விலா எலும்பை தாக்கியிருக்கிறது.

    "பக்கத்து கூரையின் அருகில் 'பூம்' என பெரிய சத்தம் கேட்டது. அடுத்த வினாடி என் விலா எலும்பில் ஒரு அதிர்ச்சியை உணர்ந்தேன். என்னை ஒரு வெளவால் தாக்கியது என நினைத்தேன். பிறகு அதை ஒரு சிமெண்ட் துண்டு என்று நினைத்தோம். அது நிறம் எதுவும் இல்லாமல் இருந்தது" என அந்த பெண் கூறியிருக்கிறார்.

    தொடர்ந்து அப்பெண் அந்த பொருள் என்ன என தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறார். அதில் அது சிமெண்ட்டால் செய்யப்பட்டதல்ல என்றும் அது ஒரு விண்கல் போல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    தியர்ரி ரெப்மான் (Thierry Rebmann) எனும் புவியியலாளரிடம் இதுகுறித்து அவர் கேட்டிருக்கிறார். அதனை பரிசோதித்த ரெப்மான், அது பூமியை சேர்ந்த பொருளல்ல என உறுதிப்படுத்தினார்.

    "அப்பொருளின் உள்ளே இரும்பு மற்றும் சிலிக்கான் கலவை இருந்தது. அது விண்கல்தான். விண்கற்கள் பூமியில் விழுவது அரிதானதல்ல. ஆனால், விண்கல்லை கண்டெடுப்பதும், அதிலும், விண்கல் ஒருவர் மேலே வந்து விழுவது போன்ற சம்பவங்களும் மிக அரிதான நிகழ்வாகும். வழக்கமாக பாலைவன பகுதிகளில் விழும் விண்கற்கள், பிரான்ஸ் போன்ற மிதமான வானிலையை கொண்டிருக்கும் நாடுகளில் விழுவது வழக்கமான ஒன்றல்ல" என்று டாக்டர் ரெப்மான் கூறியிருக்கிறார்.

    பூமியின் வளிமண்டலத்தில் பல நாட்கள் பயணம் செய்து தரையைத் தாக்கும் விண்வெளிப் பாறைகள்தான் விண்கற்கள் எனப்படும். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 50 டன் விண்கற்கள் பூமியில் விழுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் நியூஜெர்சியில் ஓல்ட் வாஷிங்டன் கிராசிங் பென்னிங்டன் சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் 4x6 அங்குல அளவில் ஒரு விண்கல் தாக்கியது. இதனால் அவ்வீட்டின் கடினமான மரத்தாலான தரைப்பகுதி சேதம் அடைந்தது. அப்போது அவ்வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை.

    விண்கல் மனிதர்கள் மீது விழும் சம்பவம் முதன்முதலாக 1954-ல் நடந்தது. இதில் 3.6 கிலோ எடையுள்ள ஒரு விண்கல் அமெரிக்காவில் ஒரு பெண் மீது விழுந்ததில் அவர் காயமடைந்தார்.

    • மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது.
    • மார்கெட்டா வோண்ட்ருசோவா- ஆன்ஸ் ஜெபருடன் மோதினார்.

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில், செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ருசோவா- துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் ஆகியோர் மோதினர்.

    இதில் வோண்ட்ருசோவா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜெபரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • பிரான்ஸ் நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சென்றார்
    • பிரான்ஸ் அதிபர், பிரதமர், செனட் தலைவர்களை சந்தித்து பேசினார்

    இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றிருந்தார். நேற்று நடைபெற்ற பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். பிரான்ஸ் அதிபரின் அழைப்பின்பேரின் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டார்.

    தேசிய தின கொண்டாட்ட அணிவகுப்பில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர்கள். பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்ட அணிவகுப்பில் இந்திய வீரர்களை பார்த்தது அற்புதம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    மேலும் பிரான்ஸ் பயணம் குறித்து அவர் கூறுகையில் ''பிரான்ஸ் சுற்றுப் பயணம் மறக்க முடியாத ஒன்று. கொண்டாட்டத்தில் இந்திய வீரர்களின் அணிவகுப்பை பார்த்தது, இந்த பயணத்தை மேலும் சிறப்பாக்கியது. சிறந்த முறையில் உபசரிப்பு தந்ததற்காக பிரான்ஸ் அதிபர், மற்றும் அந்நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா- பிரான்ஸ் நட்பு இன்னும் மேலாக தொடருட்டும்'' எனத தெரிவித்துள்ளார்.

    முன்னதாக நடைபெற்ற தேசியதின கொண்டாட்ட விழாவின்போது இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானம், பிரான்ஸ் விமானங்களுடன் இணைந்து சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டது.

    • பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
    • பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு சந்தனத்திலான கிடார் ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்தார்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் ஜூலை 13, 14-ம் தேதிகளில் 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றார். பிரதமர் மோடி.

    நேற்று நடைபெற்ற பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த அணிவகுப்பு விழாவில், இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பிரான்ஸ் படை வீரர்களுடன் சேர்ந்து இந்திய படை வீரர்களும் அணிவகுப்பு நடத்தினர்.

    தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

    மேலும், பிரான்ஸ் நாட்டின் செனட் மற்றும் பார்லிமெண்ட் தலைவர்களை அவர் சந்தித்தார். பிரான்சில் உள்ள இந்தியர்கள் மத்தியிலும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானுக்கு சந்தனத்திலான கிடார் ஒன்றை பிரதமர் மோடி பரிசாக அளித்தார். அதிபரின் மனைவி, அந்நாட்டு பாராளுமன்ற தலைவர், செனட் தலைவருக்கும் அவர் பரிசளித்தார்.

    இந்நிலையில், பிரான்சில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

    • இந்திய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.
    • பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வழங்கினார்

    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். தேசிய தின விழாவில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதில், பிளைபாஸ்ட் மூலம் பிரான்ஸ் தேசியக் கொடியின் வண்ணங்களில் வானத்தில் பறக்கவிட்டனர். இந்த அணிவகுப்பு விழாவில், இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பிரான்ஸ் படை வீரர்களுடன் சேர்ந்து இந்திய படை வீரர்களும் அணிவகுப்பு நடத்தினர்.

    இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானுக்கு சந்தனத்திலான கிடார் ஒன்றை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.

    மேலும் அதிபரின் மனைவிக்கு போச்சம்பள்ளி பட்டும், அந்நாட்டு பாராளுமன்ற தலைவருக்கு காஷ்மீரின் கார்ப்பெட்டும், செனட் தலைவருக்கு சந்தனத்தாலான யானைச் சிற்பத்தையும் பரிசளித்தார்.

    ×