என் மலர்
ஆசிரியர் தேர்வு
- முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.
- 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் எனவும் கணித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் என கணித்துள்ளது.
2025-26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.
ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்கள் மீது விதித்த 50 சதவீத வரியால் ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக ADB தெரிவித்துள்ளது.
அதேபோல் 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் எனவும் கணித்துள்ளது.
அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி (Goods Exports) குறைந்தாலும், சேவை ஏற்றுமதி (Service Exports) வலுவாக இருக்கும் என ADB தெரிவித்துள்ளது.
- கடந்த 2013-ம் ஆண்டு சைந்தவியை ஜிவி பிரகாஷ் திருமணம் செய்து கொண்டார்.
- இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.
இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜரான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
- முசாபர்பூர் மாவட்டத்தில் 88,108 வாக்காளர் அதிகரித்துள்ளனர்.
- பாட்னா மாவட்டத்தில் 1,63,600 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது. அப்போது அங்கு வசிப்பதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனால் தேர்தல் ஆணையம் NRC-யை மறைமுகமாக அமல்படுத்த பாஜக, தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் பலரது வாக்குகள் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கடுமையாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஆதார்டு கார்டை ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முசாபர்பூர் மாவட்டத்தில் 88,108 வாக்காளர் அதிகரித்துள்ளனர். முன்னதாக 32,03,370 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 32,91,478 அதரித்துள்ளனர்.
பாட்னா மாவட்டத்தில் 1,63,600 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். நவடா மாவட்டத்தில் 30,491 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். முழு விவரத்தை https://voters.eci.gov.in/ என்ற இணைய தளத்தில் காணலாம்.
தேர்தல் ஆணையம் அக்டோபர் 4 மற்றும் அக்டோபர் 5ஆம் தேதி பீகார் சென்று தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆராய உள்ளது. அதன்பின் பீகார் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்.
- ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கான எனது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
- ஆனால், என்னுடைய மிகப்பெரிய இலக்கு உலகக் கோப்பை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 147 இலக்கை எதிர்நோக்கி களம் இறங்கியது. 3 விக்கெட் விரைவாக இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் திலக் வர்மா கடைசி வரை களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இறுதிப் போட்டி மற்றும் வெற்றி பெற்றது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-
முதலில் பிரதமர் மோடி இதை ஆபரேஷன் சிந்தூர் என அழைத்தார். ஆனால், ஆபரேஷன் திலக் என்று அழைப்பது மிகப்பெரிய விசயம். விளையாட்டில், நாங்கள் நம்முடைய நாட்டிற்காக விளையாடுகிறோம். சரியான தருணத்தில், சரியான நேரத்தில் நான் வாய்ப்பை பெற்றேன். எனது நாட்டிற்காக வெற்றி தேடிக்கொடுத்ததை சிறந்ததாக உணர்கிறேன்.
இறுதிப் போட்டியில் பதட்டம் நிலவியது. நாம் 3 விக்கெட்டை முன்னதாகவே இழந்தபோது, பாகிஸ்தான் வீரர் இன்னும் தீவிரமாக முயற்சி செய்தனர். நான் களத்தில் நின்றிருந்தேன். நாள் முன்னதாக சொன்னது போன்று, நான் அதற்குள் சிக்கி ஷாட் ஆட முயற்சி செய்திருந்தால், எனது நாட்டை தோல்வி பாதைக்கு அழைத்துச் சென்றிருப்பேன். நான் எப்போதும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பேன். போட்டியில் வெற்றி பெற தேவை என்னது? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
போட்டியின்போது ஏராளமான விசயங்கள் நடந்தன. மீடியா முன் அனைத்தையும் சொல்ல முடியாது. குறிப்பாக இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது நடைபெற்றது. போட்டிதான் உண்மையான பதிலடி. நான் அதை செய்ய விரும்பினேன். அதைச் செய்தேன்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கான எனது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், என்னுடைய மிகப்பெரிய இலக்கு உலகக் கோப்பை. 2011 உலகக் கோப்பையை பார்க்கும்போது, நான் கிரிக்கெட்டை விரும்ப தொடங்கினேன். அதன்பின் தொழில்முறை கிரிக்கெட்டை தொடங்கினேன்.
அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பையில் ஒரு பகுதியாக இருந்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன். இதுதான் என்னுடைய அல்டிமேட் கோல்.
இவ்வாறு திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
- விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
- எங்களுக்கு தரப்பட்ட இடத்துல நாங்க பேசிட்டு இருந்தோம். அதை தவிர நாங்க எந்த தவறும் செய்யல
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், கரூர் துயரம் குறித்து விஜய் முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் அவர் 5 நிமிட வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய விஜய், "எங்களுக்கு தரப்பட்ட இடத்துல நாங்க பேசிட்டு இருந்தோம். அதை தவிர நாங்க எந்த தவறும் செய்யல. எங்க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள் மேல FIR... அது மட்டுமில்ல சமூக வலைத்தளங்களை சேர்ந்த நண்பர்கள் மேல FIR போட்டு புடிச்சிட்டு இருக்காங்க.
CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள். அவங்க மேல கை வைக்காதீங்க. நா வீட்டுல இருப்பேன் இல்லைனா ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணா பண்ணுங்க.
நண்பர்களே, தோழர்களே, நம்மோட அரசியல் பயணம் இன்னும் வலிமையாகவும் தைரியமாகவும் தொடரும்" என்று தெரிவித்தார்.
- ரெங்கநாதன் தெரு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்தை தாண்டி மேம்பாலம் செல்லும் வகையில் இந்த இணைப்பு மேம்பாலம் இரும்பால் உருவாக்கப்பட்டு உள்ளது.
- மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னையின் மையப் பகுதியாக விளங்கும் தியாகராய நகரில் மிகப் பெரிய ஜவுளிகடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு தி.நகர் உஸ்மான் சாலையில் ஏற்கனவே ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு இருந்தது. இந்த மேம்பாலம் ரெங்கநாதன் தெரு அருகே இறங்கும் வகையில் இருந்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் தெற்கு உஸ்மான் சாலையையும், சி.ஐ.டி. நகர் முதல் பிரதான சாலையை இணைக்கும் வகையிலும் 1¼ கிலோ மீட்டர் நீளத்துக்கு தி.நகர் பாலத்தை நீட்டித்து புதிய மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
அதாவது ரெங்கநாதன் தெரு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்தை தாண்டி மேம்பாலம் செல்லும் வகையில் இந்த இணைப்பு மேம்பாலம் இரும்பால் உருவாக்கப்பட்டு உள்ளது.
இது 3,800 மெட்ரிக் டன் இரும்பினால் வடிவமைக்கப்பட்டு 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல் இரும்பு மேம்பாலம் ஆகும்.
இந்த புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இந்த புதிய மேம்பாலம், 1200 மீட்டர் நீளம் மற்றும் 8.40 மீட்டர் அகலத்தில் 53 இரும்பு தூண்களுடன் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு தெற்கு உஸ்மான் சாலையில் ஏற்கனவே உள்ள 800 மீட்டர் நீள கான்கிரீட் மேம்பாலத்துடன், உயரிய தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 2 கிலோ மீட்டர் நீளத்திலும் தியாகராய நகர் பஸ் நிலையத்தில் இருந்து இந்தப் பாலத்தில் ஏறுவதற்கு 120 மீட்டர் நீளத்திலும், தெற்கு உஸ்மான் சாலை பாலத்தில் இருந்து தியா கராய நகர் பகுதிக்கு இறங்குவதற்கு 100 மீட்டர் நீளத்திலும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இருபுறமும் நடைபாதைகளுடன் 6 மீட்டர் அகல சேவை சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மிக நீண்ட பாலமாக 2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் தினசரி சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து, சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
சிங்காரச் சென்னையை நோக்கிய பயணத்தில் புதிய பெருமைமிகு அடையாளமாக புதிய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இம்மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்களில் தியாகராய நகர் மற்றும் சுற்றுப்புறங்களின் வாழ்வியல் காட்சிகள் அழகிய ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் உழைப்பையும் மரபையும் சிறப்பிக்கின்றன.
சி.ஐ.டி நகர் முதல் பிரதான சாலையிலுள்ள தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சி.ஐ.டி நகர் நான்காவது பிரதான சாலை சந்திப்பை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மூலம், தெற்கு உஸ்மான் சாலை - பர்கிட் சாலை - மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - தென்மேற்கு போக்சாலை - நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, ஆ. ராசா எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த. வேலு, தாயகம் கவி, துணை மேயர் மு. மகேஷ் குமார், உயர் அதிகாரிகள் கார்த்திகேயன், ஆணையர் குமரகுருபரன், வினய், தமிழ்நாடு வீட்டுவதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, திண்டுக்கல் ஐ.லியோனி, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு,
தியாகராய நகர் மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை, கோ.சு.மணி, எம்.எஸ்.பழனி, ஜெ.ஜானகிராமன், ராஜா அன்பழகன், தியாகராய நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் பாண்டிபஜார் பாபா சுரேஷ், தி.நகர் கிழக்கு பகுதி பொருளாளர் ஜி.மோகன் ராஜ், வட்டச் செயலாளர் பி.மாரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி, வனிதாபுரம் துரை, இ.சஞ்சீவ் குமார்(எ) கார்த்தி, 133-வது வட்ட துணை செயலாளர் ஆர்.கலா ராஜா, என்.வெங்கடேசன், கனிமொழி வெங்கடேசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஒட்டுமொத்த உலக நாடுகளும் போரை வேண்டாம் என இறங்கி வந்தன.
- போரை தொடங்க வேண்டாம் என அமெரிக்கா கேட்டுக்கொண்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. மே மாதம் 7ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தான் நாடடிற்குள் புகுந்த இந்திய விமானப்படை விமானங்கள், அங்குள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதல்களை இந்தியா திறம்பட எதிர்த்தது பதிலடி கொடுத்து வந்தது. இந்த சண்டை மே 10ஆம் தேதி வரை நீடித்தது. பின்னர் இருநாட்டு ராணுவத் தலைவர்கள் பேச்சுவார்த்தை முடிவில் சண்டை முடிவுக்கு வந்தது.
ஆனால், வர்த்தக ஒப்பந்தத்தை முன்வைத்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் 3ஆவது நாடு தலையீடு இல்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே இந்திய எதிர்க்கட்சிகள் 3ஆவது நாடு தலையீட்டை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில்தான் டி.வி. விவாதத்தின்போது இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான ப. சிதம்பரம் 26/11 தாக்குதலின்போது போரை தொடங்க வேண்டாம் என்று அமெரிக்கா சொன்னதாக தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
டி.வி. விவாதத்தின்போது "அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் காண்டலீசா ரைஸ் என்னிடமும், பிரதமரிடமும் (அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்) போரை தொடங்க வேண்டாம். ஆயுதம் மூலம் (போர்) பதிலடி கொடுப்பதை மறுபரிசீலனை செய்யுங்கள் எனத் தெரிவித்தார். ஆனால், நான் இது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும் எனக் கூறினேன். ஆனால், எனது மனதில் பதிலடி கொடுக்க வேண்டும் சிந்தனை ஓடியது. மொத்த உலகமும் இந்திய அரசிடம், போரை தொடங்க வெண்டும் எனத் தெரிவிக்க முன் வந்தது" என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நுகர்வோர் விவகாரத்தறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி "வெளிநாட்டு அதிகாரத்தில் 26/11 தாக்குதலின்போது அரசு தவறான கையாண்டது தொடர்பாக ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தெரிந்ததை, 17 வருடங்களுக்குப் பிறகு சிதம்பரம் ஒப்புக்கொண்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
- கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
- கரூரில் நடந்த கொடூரத்தை பற்றி உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டதே.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு இன்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க உள்ளனர்.
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,
* கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை பா.ஜ.க. நேரடியாக தொடங்கி உள்ளது.
* கரூரில் நடந்த கொடூரத்தை பற்றி உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டதே.
* காங்கிரஸ் பேரியக்கமும் உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* கரூர் விவகாரத்தில் பா.ஜ.க.வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாக உள்ளது.
* தமிழ்நாடு அல்லாத பிற மாநில பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை ராகுல் காந்தி நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
- ஒருநாள் தொடர் அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடர் அக்டோபர் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது.
அதனை தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அவர் ஆசிய கோப்பை தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் கடைசி 2 போட்டிகளில் பாண்ட்யா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
- டிரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்தார்.
இதைதொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் டிரம்பின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. இதில் டிரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து டிரம்ப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இவ்வழக்கில் டிரம்புக்கு 24.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.217 கோடி) நஷ்ட ஈடு வழங்க யூடியூப் ஒப்புக்கொண்டுள்ளது.
- சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற வீடியோக்கள் மட்டுமின்றி முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்று கருத்துகளை பதிவிடும் நபர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறையினரை குற்றம் சாட்டியும், குறிப்பிட்ட கட்சி மீது களங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இப்படி அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை தலைமை இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தியான பதிவுகளை வெளியிட்ட 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியான சகாயம், மாங்காடு பகுதியைச் சேர்ந்த விஜய் கட்சி உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான சரத்குமார் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெலிக்சை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர மேலும் 22 பேர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர். இதை மீறி, செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசில் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கென்று ஏற்கனவே தனிப்பிரிவு உள்ளது. அவர்கள் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
- நடப்பு தொடரில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
- மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் 64.76 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
புதுடெல்லி:
மாற்றுத் திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்.46 பிரிவு) இந்திய வீரர் ரிங்கு ஹூடா 66.37 மீட்டர் தூரம் எறிந்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
நடப்பு தொடரில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். உலக சாதனையாளரான மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் 64.76 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். கியூபா வீரர் குல்லெர்மோ வரோனா கொன்சாலெஸ் (63.34 மீட்டர்) வெண்கலப்பதக்கம் பெற்றார். இன்னொரு இந்திய வீரர் அஜீத் சிங் (61.77 மீட்டர்) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.






