என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் துயர சம்பவத்தில் பா.ஜ.க.வின் விளையாட்டு ஆரம்பம் - திருமாவளவன் குற்றச்சாட்டு
- கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
- கரூரில் நடந்த கொடூரத்தை பற்றி உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டதே.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு இன்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க உள்ளனர்.
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,
* கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை பா.ஜ.க. நேரடியாக தொடங்கி உள்ளது.
* கரூரில் நடந்த கொடூரத்தை பற்றி உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டதே.
* காங்கிரஸ் பேரியக்கமும் உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* கரூர் விவகாரத்தில் பா.ஜ.க.வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாக உள்ளது.
* தமிழ்நாடு அல்லாத பிற மாநில பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை ராகுல் காந்தி நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






