என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.
    • ஆளும் கட்சியான தி.மு.க. இந்த இடைக்கால பட்ஜெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. முதல் நாளான 20-ந்தேதி கவர்னர் உரை நிகழ்ச்சி நடைபெற்றது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.

    அவர்களுக்கு கடந்த 24-ந்தேதி பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதைத்தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டசபை அலுவல்கள் தள்ளிவைக்கப்பட்டன.

    தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எனவே, இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும்.

    தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் கட்சியான தி.மு.க. இந்த இடைக்கால பட்ஜெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.

    எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ந்தேதியன்று தாக்கல் செய்யலாமா? என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இல்லாதபட்சத்தில் பிப்ரவரி 3-ம் வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து 4 நாட்கள் அவையை நடத்தி முடிக்கலாமா? என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • 3350 டன் என்ற அளவில் உலகிலேயே அதிக தங்க இருப்பு வைத்துள்ள நாடுகளில் ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது
    • இதில் 37 சதவீதம், அதாவது 1,236 டன் தங்கத்தை அமெரிக்காவின் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியில் ஜெர்மனி சேமித்து உள்ளது.

    3350 டன் என்ற அளவில் உலகிலேயே அதிக தங்க இருப்பு வைத்துள்ள நாடுகளில் ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது

    1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, ஜெர்மனி அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி கொண்டது. நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, ஜெர்மனி தனது பெருமளவு தங்க இருப்பை அமெரிக்காவில் சேமித்து வைத்தது.

    ஜெர்மனியின் தங்க இருப்பில் 37 சதவீதம், அதாவது 1,236 டன் தங்கத்தை அமெரிக்காவின் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடைய வரிவிதிப்பு நடவடிக்கைகள், கிரீன்லாந்தை இணைப்பதாக அவர் கூறியுள்ள கருத்துக்கள், ஜெர்மனிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

    ஜெர்மன் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியான கிரீன் பார்ட்டி, பொருளாதாரத் தன்னிறைவு மற்றும் சர்வதேச மோதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தங்கத்தை உடனடியாகத் தாயகம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    "டிரம்ப் எப்போது என்ன செய்வார் என்று தெரியாது, வருமானத்திற்காக அவர் எதையும் செய்வார்" என்று ஜெர்மன் வரி செலுத்துவோர் சங்கத் தலைவர் மைக்கேல் ஜோகர் எச்சரித்துள்ளார்.

    சர்வதேச பொருளாதார வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4-வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், படம் "இதயம் முரளி". படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

    இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது.

    தமிழ் சினிமாவில் நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

    இதயம் முரளி படம் காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் 2-வது சிங்கிள் தங்கமே, தங்கமே பாடல் தற்போது வெளியாகி உள்ளது.  

    • விபத்தில் அஜித் பவார், அவரது பாதுகாவலர் விதீப் யாதவ் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
    • அதற்கு அவரது தந்தை, "சரிம்மா, வேலை முடிந்ததும் நாளை பேசலாம்" என்று பதிலளித்துள்ளார்.

    மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இன்று காலை புதன்கிழமை காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது, அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து, அவரது பாதுகாவலர் விதீப் யாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, விமானிகள் சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, மும்பையில் இருந்து விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்பாகத் தனது தந்தை சிவகுமார் மாலியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த உரையாடல் தற்போது வெளியாகி உள்ளது.

    பிங்கி தனது தந்தையிடம், "அப்பா, நான் இப்போது அஜித் பவாருடன் பாராமதிக்குச் செல்கிறேன். அவரை அங்கே இறக்கிவிட்டு, பிறகு நந்தேடுக்குச் செல்வேன். நாம் நாளை விரிவாகப் பேசலாம்" என்று கூறியுள்ளார்.

    அதற்கு அவரது தந்தை, "சரிம்மா, வேலை முடிந்ததும் நாளை பேசலாம்" என்று பதிலளித்துள்ளார்.

    ஆனால், அந்த நாளை இனி ஒருபோதும் வராது என்று அவரது தந்தை கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.  

    • நியூசிலாந்து அணி 215 ரன்கள் குவித்துள்ளது.
    • சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது.

    இதனால் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா முதல் பந்தை எதிர்கொண்டார். மாட் ஹென்றி முதல் ஓவரை வீசினார். முதல் பந்தை அபிஷேக் சர்மா இறங்கி வந்து அடிக்க முயற்சி செய்தார். பந்தை பேட்டில் எட்ஜ் ஆகி Third Man திசையில் மேல்நோக்கி பறந்தது. அங்கு நின்றிருந்த கான்வே அபாரமாக கேட்ச் பிடித்தார். இதனால் அபிஷேக் சர்மா கோல்டன் டக் உடன் ஏமாற்றம் அடைந்தார்.

    அடுத்து சூர்யகுமாயர் யாதவ் களம் இறங்கினார். அவர் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

    • அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
    • மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.

    அவரது மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    இந்நிலையில், அஜித் பவார் மரண விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என சரத் பவார் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்,"அஜித் பவாரின் விமான விபத்து முற்றிலும் எதிர்பாராத ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து மட்டுமே. இதை அரசியலாக்க வேண்டாம்.

    இது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு. இதை ஈடுசெய்வது கடினம். சிலர் இதை அரசியலாக்க முயற்சிப்பது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது" என்றார்.

    • வடமாநில வாலிபர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது.
    • மனைவி மற்றும் குழந்தையையும் கொன்றுவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.

    சென்னை அடையார், இந்திரா நகர் 1-வது அவென்யூ சாலையில் கடந்த 26-ந்தேதி காலை ஒரு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே அடையார் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாக்கு பையை பிரித்து பார்த்தபோது வடமாநில வாலிபர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தனிப்படை போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையை எடுத்து வந்து வீசி விட்டு செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    கொலை செய்யப்பட்ட வாலிபர் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டபோது அதில் ஒரு எண் அடையாரில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தின் எண் என்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில் கொலையுண்ட வாலிபர் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பதும் இவர் மனைவி முனிதா குமாரியுடன் வந்து காவலாளி வேலை கேட்டதும் அதற்கு செக்கியூரிட்டி நிறுவனம் தற்போது வேலை காலியில்லை.

    தேவைப்பட்டால் அழைப்பதாக கூறி அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக கவுரவ் குமாரின் நெருங்கிய நண்பர் உள்பட 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் மனைவி மற்றும் குழந்தையையும் கொன்றுவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.

    அடையாறு கெனால் ரோடு கூவம் ஆற்று ஓரம் உள்பட கூவம் முகத்துவாரம் பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில், இந்த கொலை விவகாரம் தொடர்பாக பீகாரை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சம்பந்தப்பட்ட சிகந்தர், நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆயிரம் பேரை நீக்கியது.
    • நிறுவனத்திற்குள்ளேயே புதிய பணியை தேடிக்கொள்ள 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என அறிவிப்பு.

    ஆன்லைன் வர்த்தகத்தில் ஜாம்பவானாக திகழும் அமேசான் அடிக்கடி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 16 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியது. அதன்பின் தற்போது மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்துள்ளது.

    இது தொடர்பாக அமேசான் நிறுவனத்தின் சீனியர் துணைத் தலைவர் பெத் காலேட்டி கூறுகையில் "அமெரிக்காவை சேர்ந்த ஊழியர்களுக்கு பணிநீக்க இழப்பீடு மாற்று வேலைவாய்ப்புச் சேவைகள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டுப் பலன்கள் வழங்கப்படுவதற்கு முன்பு நிறுவனத்திற்குள்ளேயே புதிய பணியைத் தேடிக்கொள்ள 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்" என்றார்.

    • மங்காத்தா’ படத்தின் ரீ ரிலீஸை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
    • ரீ ரிலீஸில் இதுவரை வெளிவந்த படங்கள் செய்த அனைத்து சாதனைகளையும் ‘மங்காத்தா’ முறியடித்துள்ளது.

    இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'மங்காத்தா' படம் கடந்த 23-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. 'மங்காத்தா' படத்தின் ரீ ரிலீஸை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 'மங்காத்தா' படம் ரூ.16 கோடி வசூலித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 5 ஆம் நாள் நிலவரப்படி ரூ.17.5 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் ஓப்பனிங் வசூலில் ரீ ரிலீஸில் இதுவரை வெளிவந்த படங்கள் செய்த அனைத்து சாதனைகளையும் 'மங்காத்தா' முறியடித்துள்ளது.

    'மங்காத்தா' படத்தில் அர்ஜுன், திரிஷா, வைபவ், அஞ்சலி, பிரேம்ஜி, ராய் லக்ஷ்மி, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    • தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு 2 நாட்கள் தங்கி இருந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வது வழக்கம்.
    • தேர்தல் கமிஷனின் துணை கமிஷனர்கள் தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு 2 நாட்கள் தங்கி இருந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வது வழக்கம். பொதுவாக வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டதும் இந்தக் குழு வரும் பிப்ரவரி மாதம் 17-ந் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதையொட்டிய தேதியில் இந்தக் குழு சென்னைக்கு வருகை தரும்.

    இந்த வருகையின்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், வருமான வரித்துறை, வங்கிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் அதிகாரிகளை அழைத்து தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துவார். அதற்கு முன்னதாக தேர்தல் கமிஷனின் துணை கமிஷனர்கள் தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.

    சிறப்பு தீவிர திருத்தப் பணியை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் வரும் 30-ந் தேதியுடன் (நாளை மறுநாள்) முடிகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் மேலும் கால அவகாசம் அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
    • 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

    கொழும்பு:

    இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்தது.

    ஜேக்கப் பெத்தேல் 65 ரன்னில் அவுட் ஆனார். 20-வது சதம் அடித்த ஜோ ரூட் 111 ரன்களுடனும் (108 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), 3-வது சதம் விளாசிய கேப்டன் ஹாரி புரூக் 136 ரன்களுடனும் (66 பந்து, 11 பவுண்டரி, 9 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

    அடுத்து ஆடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவன் ரத்னாயகேவின் (121 ரன்) கன்னி சதம் வீணானது. இங்கிலாந்து தரப்பில் ஜாமி ஓவர்டான், லியாம் டாவ்சன், வில் ஜாக்ஸ், அடில் ரஷித் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் ஆட்டநாயகன் விருதும், ஜோ ரூட் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

    மேற்கிந்திய தீவுகள் (1-2), (1-2), இந்தியா (0-3), நியூசிலாந்து (0-3) அணிகளுக்கு எதிராக தொடர்ந்து தோல்வியுற்ற நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

    • ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்கா அதிகப் பொருளாதாரத் தியாகங்களைச் செய்துள்ளது.
    • அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே கையெழுத்தாகி உள்ள வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், "இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதன் மூலம் ஐரோப்பா மறைமுகமாக ரஷியா-உக்ரைன் போருக்கு நிதியுதவி அளிக்கிறது.

    ஐரோப்பா ரஷியாவிடமிருந்து நேரடியாக எரிசக்தி இறக்குமதியைக் குறைத்திருக்கலாம், ஆனால் ரஷியாவின் கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து இந்தியா தயாரிக்கும் பெட்ரோலியப் பொருட்களைத் தொடர்ந்து வாங்கி வருகிறது.

    தங்களுக்கு எதிராக நடக்கும் போருக்கு அவர்களே பணம் வழங்குகிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

    ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்கா அதிகப் பொருளாதாரத் தியாகங்களைச் செய்துள்ளது" என்றார்.

    இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.   

    ×