என் மலர்
ஆசிரியர் தேர்வு
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். தற்போது வித் லவ் படம்மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் ஜீவிந்த்க்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர், முதல் பாடல் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வித் லவ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து படம் வெளியாவது குறித்த அறிவிப்புகள் வெளியானாலும் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில், 'LIK' படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'LIK' படம் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகும் என முதன் முதலில் கூறப்பட்டது. அதன்பின், செப்டம்பர் 18, அக்டோபர் 17, டிசம்பர் 18 என வெளியிட்டு தேதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் சோபி மோலினக்ஸ் 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்த தாலியா மெக்ராத் துணை கேப்டனாக தொடருகிறார்.
சிட்னி:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பிப்ரவரி 15-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் ஆட்டங்கள் சிட்னி (பிப்.15), கான்பெர்ரா (பிப்.19), அடிலெய்டில் (பிப்.21) நடக்கிறது.
இதன் பின்னர் ஒருநாள் (பிப்.24, 27, மார்ச் 1) மற்றும் டெஸ்ட் போட்டி (மார்ச் 6-9) அரங்கேறுகிறது. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடாத ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் அணியை வழிநடத்துகிறார். பெர்த்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் 35 வயது அலிசா ஹீலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர், ஒருநாள், டெஸ்ட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் சோபி மோலினக்ஸ் 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக அலிசா ஹீலி தொடருகிறார்.
மார்ச் மாதம் நடக்கும் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் இருந்து அனைத்து வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக சோபி மோலினக்ஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்த தாலியா மெக்ராத் துணை கேப்டனாக தொடருகிறார். சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஆஷ்லி கார்ட்னெர் இணை துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன் பொறுப்பை ஏற்கும் 28 வயது சோபி மோலினக்ஸ் இதுவரை 3 டெஸ்டில் ஆடி 7 விக்கெட்டும், 17 ஒருநாள் போட்டியில் 31 விக்கெட்டும், 38 இருபது ஓவர் போட்டியில் 41 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். முழங்கால் காயம் காரணமாக அவர் 2024-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம் பெறவில்லை. ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் அங்கம் வகித்தார்.
- விஜய்யை இயக்கும் கொள்கை ஆசான் யார்?.
- தன் அரசியல் நடிப்பை வெளிப்படுத்தி வரும் திருமாவளவனும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடிகர் விஜய் ஊழலையும், வாரிசு அரசியலையும் ஒழிப்பதற்காக அரசியலுக்கு வந்தேன் என்று ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் சத்தியம் செய்ததை மறந்தது ஏன்?. விஜய்யை இயக்கும் கொள்கை ஆசான் யார்?.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனைதான் கொள்கை ஆசான் என்று த.வெ.க. தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் அறிவித்ததின் பின்னணி என்ன?. அனைத்துக் கட்சிகளுக்கும் அறிவுரை சொல்லும் திருமாவளவன் நடிகர் விஜய்யை காங்கிரசோடு கைகோர்க்க வேண்டும் என்று மறைமுகமாக ஆதவ் அர்ஜூனா மூலம் அறிவுரை சொல்வது ஏன்?.
எதிர்எதிர் துருவங்கள் போல காட்டிக் கொண்டு பா.ஜ.க.வை எதிர்ப்பதில் மறைமுகமாக ஒன்றிணைந்து, இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படும் அரசியல் நடிகர் விஜய்யும், ஒரு படத்தில் நடித்திருந்தாலும், தேர்தல் நேரத்தில் புதுப்புது அரசியல் கேரக்டராக, தன் அரசியல் நடிப்பை வெளிப்படுத்தி வரும் திருமாவளவனும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
- அதே போல் ஆண்களும் ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக இந்திய மனநல மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய காலத்தில் அனைத்து தரப்பினரையும் பாதிக்கக்கூடியது மன அழுத்தம். கல்வி, வேலை, வருமானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அதே போல் ஆண்களும் ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களும் பெருமளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதற்கு செல்போனும் முக்கிய காரணமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.
இந்தநிலையில் இந்திய மனநல மருத்துவ சங்கத்தின் 77-வது ஆண்டு தேசிய மாநாடு டெல்லியில் தொடங்கி நடந்து வருகிறது. நாளை (சனிக்கிழமை) வரை இந்த மாநாடு நடக்கிறது.
இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மனநல டாக்டர்கள், மருத்துவ வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதில் பல அதிர்ச்சியூட்டும், கவலைக்குரிய விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. அவை வருமாறு:-
மன நல பிரச்சினைகள் வாழ்வின் பிற்பகுதியில் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் இளம்பருவத்திலோ அல்லது இளமைப்பருவத்திலோ முன்கூட்டியே வெளிப்படுகின்றன.
மனச்சோர்வு, போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் மற்றும் நடத்தை சார்ந்த பழக்கங்களும் தற்போது குறைந்த வயதிலேயே பதிவாகின்றன.
34.6 சதவீத மன அழுத்த பிரச்சினைகள் 14 வயதுக்கு முன்பும், 48.4 சதவீதம் 18 வயதுக்கு முன்பும், 62.5 சதவீதம் 25 வயதுக்குள்ளும் தொடங்குகின்றன.
இது கல்வி முடிவுகள், தொழில் பாதைகள், உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
2011-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு மன உளைச்சல் 101.7 சதவீதம் அதிகரித்துள்ளன.
60 சதவீத மன அழுத்த பிரச்சினைகள் 35 வயதுக்குட்பட்டவர்களைப் பாதிக்கிறது. "கல்வி அழுத்தம், வேலையின்மை, சமூகத் தனிமைப்படுத்தல், டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தீர்க்கப்படாத உணர்ச்சித் துயரம் ஆகியவற்றின் சிக்கலான கலவையே இதற்கு காரணம்.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட நபர்களின் தற்கொலைக்கு மனநல பிரச்சினைகள் மூன்றாவது முக்கிய மரணக் காரணமாக உள்ளது. இளைஞர்களிடையே உள்ள மனநல சவால்களை தாக்குப்பிடிக்க முடியாத நிலையே தற்கொலையை தூண்டுகிறது என்கிறது அந்த அறிக்கை. இது ஒரு பொது சுகாதார அவசரநிலையாக மாற்றுகிறது.
"மன அழுத்த பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப்படாமல் இருக்கும்போது, அவை பெரும்பாலும் நாள்பட்டவையாக மாறி, நீண்ட கால இயலாமைக்கும், குறிப்பிடத்தக்க சமூக சிக்கல்களுக்கும் மற்றும் பொருளாதாரச் செலவுகளுக்கும், சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கும்" என்று இந்திய மனநல மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 4 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார்.
- 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனா செல்வது இது முதல் முறை
பீஜிங்:
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 4 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார். தலைநகர் பிஜீங் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனாவுக்கு செல்வது இது முதல் முறை ஆகும். ஸ்டார்மர் தன்னுடன் 54 தொழில் அதிபர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று காலை சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது.
இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
சமீபகாலமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரிகளை கடுமையாக விதித்து வருகிறார். சீனா, இங்கிலாந்து மீதும் வரிகளை விதித்தார். இதனால் இங்கிலாந்து பிரதமரின் இந்த சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று விழா நடைபெறுகிறது.
- 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சிறந்த நடிகர்களுக்கான விருது சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, கார்த்தி, பார்த்திபன், ஆர்யா, விக்ரம் பிரபுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரான் மீது ஒரு பெரிய புதிய தாக்குதலை நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது.
ஈரானில் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஈரான் அரசை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.
மேலும் ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை செல்வதாக அறிவித்தார். அதன்படி யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமா னம் தாங்கி கப்பல் படைப்பிரிவு ஈரானை நெருங்கி உள்ளது. இதற்கிடையே டிரம்ப் அணு ஆயுதங்கள் இல்லாத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் முன்பை விட ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்றார். ஆனால் டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தது.
அந்நாட்டு வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும் போது,"எங்கள் துணிச்சலான ஆயுதப் படைகள், எங்களது நிலம், வான் மற்றும் கடலுக்கு எதிரான எந்த வொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடியாகவும் சக்திவாய்ந்ததாகவும் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளன" என்றார்.
இந்த நிலையில் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இதனால் ஈரான் மீது ஒரு பெரிய புதிய தாக்குதலை நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஈரானின் பாதுகாப்பு அதிகாரிகளை இலக்காகக் கொண்ட அமெரிக்க ராணுவ வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஈரான் அணுசக்தி தளங்கள், அரசாங்க நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறும்போது, அணு ஆயுதங்கள் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதில் பேச்சுவார்த்தைகள் உண்மையானவையாக இருந்தால் மட்டுமே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது.
அதேநேரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க வீரர்களுக்குத் தீங்கு விளை விக்கப்படும் என்றார். அமெரிக்கா-ஈரான் இடையேயான எந்த நேரத்தி லும் மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது.
- அரையிறுதியில் ஜெசிகா பெகுலா ரைபகினாவுடன் மோதினார்.
- இறுதிபோட்டியில் ரைபகினா - சபலென்கா நாளை மறுநாள் மோதவுள்ளனர்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் 6-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா கஜகஸ்தானை சேர்ந்த 5-வது வரிசையில் உள்ள ரைபகினாவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ரைபகினா 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிபோட்டியில் ரைபகினா - சபலென்கா நாளை மறுநாள் மோதவுள்ளனர்.
- இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
- D55 ஆக்ஷன் அதிரடி படமாக வரவுள்ளது.
தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம் D55. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
இந்நிலையில், D55 படத்தின் முக்கிய அறைவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக இயக்குனர் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி D55 படத்தை ஒரு பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே மற்றும் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்
- 2027ல் 6.8 - 7.2% வரை பொருளாதார வளர்ச்சி இருக்கும்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதையொட்டி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்
பொருளாதார ஆய்வறிக்கையில் 2026ல் 7.4% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2027ல் 6.8 - 7.2% வரை பொருளாதார வளர்ச்சி இருக்கும்" என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமர்க்களப்படுத்தியது.
- கடைசி லீக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த பெங்களூரு தீவிரம் காட்டும்.
5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் 2-வது அணியாக நுழையும்.
இதுவரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (10 புள்ளி) அணி மட்டுமே 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து இருக்கிறது. எஞ்சிய இரு இடங்களுக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் (8 புள்ளி), மும்பை இந்தியன்ஸ் (6 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (6 புள்ளி), உ.பி.வாரியர்ஸ் (4 புள்ளி) ஆகிய அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இன்னும் 3 லீக் ஆட்டங்களே எஞ்சி இருக்கிறது. கடைசி இடத்தில் இருக்கும் உ.பி.வாரியர்ஸ் அணி ரன் ரேட்டிலும் பின்தங்கி இருப்பதால் தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும்.
இந்த நிலையில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கடைசி இடத்தில் உள்ள உ.பி.வாரியர்சை எதிர்கொள்கிறது.
முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமர்க்களப்படுத்தியது. அதன் பிறகு 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடமும், 15 ரன் வித்தியாசத்தில் மும்பையிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவி தொய்வு கண்டுள்ளது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (236 ரன்), ரிச்சா கோஷ் (183), கிரேஸ் ஹாரிசும், பந்து வீச்சில் லாரென் பெல் (11 விக்கெட்), நடினே டி கிளார்க், சயாலி சத்கரேவும் நல்ல நிலையில் உள்ளனர்.
உ.பி.வாரியர்ஸ் அணியில் பேட்டிங்கில் கேப்டன் மெக் லானிங் (207 ரன்), ஹர்லீன் தியோலும், பந்து வீச்சில் சோபி எக்லெஸ்டோன், தீப்தி ஷர்மாவும் நம்பிக்கை அளிக்கின்றனர். 243 ரன்கள் குவித்த போபி லிட்ச்பீல்டு காயம் காரணமாக வெளியேறி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான அமே ஜோன்ஸ் (ரூ.50 லட்சம்) சேர்க்கப்பட்டுள்ளார்.
மொத்தத்தில் இன்றைய தங்களது கடைசி லீக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த பெங்களூரு தீவிரம் காட்டும். ஏற்கனவே முந்தைய லீக்கில் உ.பி. வாரியர்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருப்பதால் கூடுதல் நம்பிக்கையோடு இறங்குவார்கள். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு காலியாகி விடும் என்பதால் உ.பி.வாரியர்ஸ் வெற்றிக்காக எல்லா வகையிலும் போராடும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.






