search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Psychiatric"

    • மனநல காப்பகத்தின் செயல்பாடுகளை எடுத்துக் கூறி கொடி அசைத்து வாகன கலை துவக்கி வைத்தார்.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி பிரசார நிகழ்வை கேட்டு மகிழ்ந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம் தமிழ்நாடு மக்கள் மனநல அமைப்புடன் இணைந்து உலக மனநல நாளை முன்னிட்டு வாகன கலை நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரசார நிகழ்வை திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடத்துகின்றது.

    இந்த நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் நம்பிக்கை மனநல காப்பக திட்ட மேலாளர் விஜயா வரவேற்றார்.

    நகர் மன்ற தலைவி கவிதா பாண்டியன் தலைமை வகித்தார்.

    வட்டாட்சியர் ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    திருத்துறைப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் விதம் அவர்களை வைத்து பராமரிக்கின்ற கஷ்டம் மனநல சிகிச்சை அளிக்கும் விதம் மனநல காப்பகத்தின் செயல்பாடுகளை எடுத்துக் கூறி கொடி அசைத்து வாகன கலை நிகழ்ச்சி பிரசார நிகழ்வை துவக்கி வைத்தார்.

    நிகழ்வில் ரோட்டரி டெல்டா சங்க தலைவர் ரமேஷ், லயன் சங்க தலைவர் வேதமணி, நூற்றாண்டு லயன் சங்க செயலாளர் தங்கமணி, பிசியோதெரபி டாக்டர் கருணாநிதி, சங்க உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி பிரசார நிகழ்வை கேட்டு மகிழ்ந்தனர்.

    மனநல தினத்தையும் நம்பிக்கை மனநல காப்பகத்தையும் மனநல பாதுகாப்பையும் பற்றிய துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    மனநலத்தைப் பற்றிய மேள தாள இசை நிகழ்ச்சியுடன் பாட்டுகள் பாடி சிறு நாடகத்தின் மூலம் நடத்திய கலை நிகழ்ச்சியை அனைவரும் கண்டு களித்தனர்.

    மனநலத்திற்காக தொண்டுகள் செய்யும் நம்பிக்கை மனநல காப்பகத்தை பற்றியும் வெகுவாக பாராட்டினர்.

    முடிவில் நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் இதயம் சௌந்தர்ராஜன் நன்றி கூறினார்.

    பிரசார வாகனம் ஆலத்தம்பாடி, திருவாரூர் பழைய பஸ் நிலையம், கூத்தாநல்லூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, எடையூர் ஆகிய இடங்களில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி திருத்துறைப்பூண்டியில் முடிவடைந்தது.

    ×