என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனநல மருத்துவர்"

    • மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
    • அதே போல் ஆண்களும் ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

    25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக இந்திய மனநல மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

    இன்றைய காலத்தில் அனைத்து தரப்பினரையும் பாதிக்கக்கூடியது மன அழுத்தம். கல்வி, வேலை, வருமானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அதே போல் ஆண்களும் ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

    குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களும் பெருமளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதற்கு செல்போனும் முக்கிய காரணமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    இந்தநிலையில் இந்திய மனநல மருத்துவ சங்கத்தின் 77-வது ஆண்டு தேசிய மாநாடு டெல்லியில் தொடங்கி நடந்து வருகிறது. நாளை (சனிக்கிழமை) வரை இந்த மாநாடு நடக்கிறது.

    இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மனநல டாக்டர்கள், மருத்துவ வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

    அதில் பல அதிர்ச்சியூட்டும், கவலைக்குரிய விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. அவை வருமாறு:-

    மன நல பிரச்சினைகள் வாழ்வின் பிற்பகுதியில் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் இளம்பருவத்திலோ அல்லது இளமைப்பருவத்திலோ முன்கூட்டியே வெளிப்படுகின்றன.

    மனச்சோர்வு, போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் மற்றும் நடத்தை சார்ந்த பழக்கங்களும் தற்போது குறைந்த வயதிலேயே பதிவாகின்றன.

    34.6 சதவீத மன அழுத்த பிரச்சினைகள் 14 வயதுக்கு முன்பும், 48.4 சதவீதம் 18 வயதுக்கு முன்பும், 62.5 சதவீதம் 25 வயதுக்குள்ளும் தொடங்குகின்றன.

    இது கல்வி முடிவுகள், தொழில் பாதைகள், உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    2011-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு மன உளைச்சல் 101.7 சதவீதம் அதிகரித்துள்ளன.

    60 சதவீத மன அழுத்த பிரச்சினைகள் 35 வயதுக்குட்பட்டவர்களைப் பாதிக்கிறது. "கல்வி அழுத்தம், வேலையின்மை, சமூகத் தனிமைப்படுத்தல், டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தீர்க்கப்படாத உணர்ச்சித் துயரம் ஆகியவற்றின் சிக்கலான கலவையே இதற்கு காரணம்.

    உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட நபர்களின் தற்கொலைக்கு மனநல பிரச்சினைகள் மூன்றாவது முக்கிய மரணக் காரணமாக உள்ளது. இளைஞர்களிடையே உள்ள மனநல சவால்களை தாக்குப்பிடிக்க முடியாத நிலையே தற்கொலையை தூண்டுகிறது என்கிறது அந்த அறிக்கை. இது ஒரு பொது சுகாதார அவசரநிலையாக மாற்றுகிறது.

    "மன அழுத்த பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப்படாமல் இருக்கும்போது, அவை பெரும்பாலும் நாள்பட்டவையாக மாறி, நீண்ட கால இயலாமைக்கும், குறிப்பிடத்தக்க சமூக சிக்கல்களுக்கும் மற்றும் பொருளாதாரச் செலவுகளுக்கும், சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கும்" என்று இந்திய மனநல மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

    • ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தன்னுடைய முகவரியை, விலாசத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
    • அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் பகல்கனவு கானும் இந்த காலத்தையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

    தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசும் போது, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.

    இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:-

    அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும். அப்படி சந்திக்க முடியவில்லை என்றால் சொல்லுங்கள் நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம். எனவே, நாங்கள் மனநல மருத்துவத்தை பற்றி அறிந்திருக்கிறோம். உங்களக்கு மதுரையிலேயே கூட ஒரு பைசா கட்டணம் இல்லாமல் சேர்த்துவிட்டு அந்த புண்ணியத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

    தமிழ்நாட்டு மக்களை உங்களின் பைத்தியக்காரதனத்தில் இருந்து மீட்டெடுத்து உதவுகின்ற வகையில் அதை செயவதற்கு நாங்கள் முன்வருகிறோம்.

    பாரதிய ஜனதா கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த கட்சியுடைய விலாசத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தன்னுடைய முகவரியை, விலாசத்தை முன்னிலைப்படுத்தி, சுயநலத்தோடு எடுத்து வரும் அத்தனை முயற்சிகளும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்பட்டமாக வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது.

    தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கடுகளவும் உழைப்பை தந்திடாத ஆக்டோபஸ் அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் பகல்கனவு கானும் இந்த காலத்தையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×