என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • ‘பிசாசு-2' படம் சில ஆண்டுகளாகவே வெளிவராமல் முடங்கி கிடக்கிறது.
    • படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டு வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா, மிஷ்கின் இயக்கத்தில் நடித்து முடித்த 'பிசாசு-2' படம் சில ஆண்டுகளாகவே வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. ஆனாலும், 'பிசாசு-2' படத்தில் 'ஆண்ட்ரியா அப்படி நடித்துள்ளார், இப்படி நடித்துள்ளார்' என மிஷ்கின் தொடர்ந்து பேசி, படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம், 'பிசாசு-2' படம் எப்போது ரிலீசாகும்? என கேட்கப்பட்டது. இதற்கு, ''நடிக்க மட்டும்தான் முடியும். ரிலீசும் நானே செய்ய முடியுமா? நான் மட்டும் தயாரிப்பாளராக இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசாக்கி இருப்பேன். என்ன செய்ய...'' என்று வருத்தப்பட்டு கொண்டார்.

    முன்னதாக இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி சிலர் மின்விசிறியைத் திருப்ப, அவரது தலைமுடி காற்றில் பறந்தது. நிகழ்ச்சிக்காக கூந்தலை சீவி, சிங்காரித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இதனால் கடும் 'அப்செட்' ஆகி போனார். 'பேனை ஆப் பண்ணுங்க...' என்று அங்கிருப்பவர்களை கடிந்து கொண்டார். பின்னர் உதவியாளர் கலைந்த அவரது கூந்தலை சரிசெய்த பிறகே ஆசுவாசமானார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் சுப்ராயன் அறிமுகம் ஆனார்.
    • ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார்.

    கெய்ன்ஸ்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரெனெலன் சுப்ராயன் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இந்த நிலையில் அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக கள நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். பந்துவீசும் போது முழங்கை 15 டிகிரி கோணத்துக்கு மேல் வளையக்கூடாது. ஆனால் அவரது பவுலிங் அதை மீறும் வகையில் உள்ளது. 31 வயதான சுப்ராயன் அடுத்த 14 நாட்களுக்குள் தனது பந்துவீச்சு முறையை சரி செய்து சோதனைக்குட்படுத்த வேண்டும்.

    இதன் முடிவு வரும் வரை அவர் தொடர்ந்து பந்து வீசலாம். ஆனால் சோதனையில் தேர்ச்சி பெற தவறினால் பவுலிங் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படும். ஏற்கனவே அவர் இரு முறை இதே போன்ற சர்ச்சையில் சிக்கி இருப்பது நினைவு கூரத்தக்கது.

    • இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர 'அமெரிக்கக் கட்சி' உருவாக்கப்பட்டது
    • குடியரசு கட்சியின் எதிர்கால வாரிசாகக் கருதப்படுகிறார்.

    கடந்த ஜூலை மாதம் டிரம்ப் நிர்வாகத்தால் கொடுவரப்பட்ட வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவை கடுமையாக எதிர்த்த உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க், அதிபர் டிரம்ப் உடனான நட்பை முறித்துக்கொண்டார்.

    அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே, புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார்.

    "இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர 'அமெரிக்கக் கட்சி' உருவாக்கப்பட்டது என்று அறிவித்தார். ஊழல் மற்றும் ஊதாரித்தனத்தால் நாடு திவாலாகிறது. நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம், ஜனநாயகத்தில் அல்ல" என்று கடுமையான கூறியிருந்தார்.

    2026 இடைக்காலத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்பதையும் மஸ்க் அப்போது தெரிவித்திருந்தார்.

    ஆனால் சமீபத்திய காலங்களாக சைலண்ட் மோடில் இருக்கும் மஸ்க் பிஸ்னஸில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் குடியரசு கட்சியின் எதிர்கால வாரிசாகக் கருதப்படும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் மஸ்க் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    2028 ஆம் ஆண்டு ஜனாதிபதி வெப்பாளராக ஜே.டி. வான்ஸை ஆதரிக்க மஸ்க் ஆர்வமாக உள்ளார் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    2024 தேர்தலில் டொனால்டு டிரம்ப் மற்றும் பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மஸ்க் 300 மில்லியன் டாலர்களை செலவிட்டது குறிப்பிடதக்கது. 

    • அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தபோது மக்களவையில் எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர்.
    • தவறு செய்தால் ஒருவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்பது மிகவும் தர்க்கரீதியானது.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர், கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் எதிர்த்துப் பேசியுள்ளார்.

    மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்த தகுதி நீக்க மசோதா, பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் இருந்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறுகிறது.

    அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தபோது மக்களவையில் எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர்.

    'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றுபட்டுள்ள நிலையில், சசி தரூர் வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.

    நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "30 நாட்கள் சிறையில் இருந்த ஒருவர் எப்படி அமைச்சராகத் தொடர முடியும்? இது மிகவும் பொதுவான விஷயம். இதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை" என்றார்.

    தவறு செய்தால் ஒருவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்பது மிகவும் தர்க்கரீதியானது என்று அவர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இது நமது ஜனநாயகத்திற்கு நல்லது என்று தான் கருதுவதாக அவர் கூறினார்

    இருப்பினும், மசோதாவை இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை என்றும், அவரது கருத்து இறுதியானது அல்ல என்றும் சசி தரூர் தெளிவுபடுத்தினார்.

    சந்தேகங்களைத் தீர்த்து, அது குறித்து ஆழமான விவாதம் நடத்த மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (ஜேபிசி) அனுப்ப வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். 

    • ஐ.நா.சபையின் முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.
    • இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நியூயார்க்:

    போர் உள்ளிட்ட மோதல் தொடர்பான பாலியல் வன்முறை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. இதில் இந்திய பிரதிநிதி எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலை போரின்போது லட்சக்கணக்கான பெண்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் செய்த மொத்த பாலியல் வன்முறையின் கொடூரமான குற்றங்கள் முற்றிலும் வெட்கக்கேடான பதிவு ஆகும். 1971-ம் ஆண்டு அட்டூழியங்கள் முதல் மோதல் சூழ்நிலைகளில் பாலியல் வன்முறையின் நீண்ட மற்றும் தொடர்ச்சியான வரலாற்றை பாகிஸ்தான் ராணுவம் கொண்டுள்ளது.

    இந்த வருந்தத்தக்க முறை இன்று வரை குறையில்லாமல் தொடர்கிறது. பாகிஸ்தானில் சிறுபான்மைப் பெண்கள் கடத்தல், கட்டாய மதமாற்றங்கள், இளம் வயது திருமணங்கள் மற்றும் பிற துஷ்பிரயோகங்கள் போன்ற துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பாகிஸ்தானின் நீதித்துறை பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்களை அங்கீகரித்துள்ளது.

    மோதல் தொடர்பான கொடூரமான பாலியல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மோதல் மண்டலங்களில் பாலியல் வன்முறை தனிப்பட்ட வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல் தலை முறை தலைமுறையாக சமூகங்களில் நீடித்த வடுக்களை விட்டுச்செல்கிறது.

    பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா. பொதுச்செயலாளரின் அறக்கட்டளை நிதிக்கு பங்களித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐ.நா.சபையின் இந்த முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன என தெரிவித்தார்.

    • கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானது.
    • சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக உறுதி.

    மதுரையில் நாளை த.வெ.க.வின் 2வது மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டது.

    கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

    கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில், இன்னோவா கார் ஒன்று சுக்கு நூறாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என்றாலும், விபத்தால் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும், சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், கொடிக்கம்பம் விபத்தை தொடர்ந்து, புதிய கொடிக்கம்பத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, மாநாட்டு மேடை அருகே சிறிய கொடிக் கம்பம் நடப்பட்டு, விஜய் கொடியேற்ற உள்ளார்.

    இதற்கிடையே, மதுரை தவெக 2வது மாநில மாநாட்டு திடலுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.

    • அக்னி 5 ஏவுகணை அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கி.மீ. தொலைவு சென்று தாக்கும் திறன் படைத்தது.
    • அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.

    புவனேஸ்வர்:

    மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை (டி.ஆர்.டி ஓ.) சார்பில் அக்னி 5 ஏவுகணை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏவுகணையானது மூன்று நிலைகளை கொண்டது. சாலை மூலமாக வாகனங்களில் கொண்டு செல்லும் வசதி கொண்டது. திட எரிபொருளை கொண்டு இயக்கப்படுவதாகும். உலகின் அதிவேகமான ஏவுகணைகளில் இதுவும் ஒன்று.

    அக்னி 5 என்பது கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையாகும். இந்த ஏவுகணை வினாடிக்கு 29,000 கி.மீ. வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.

    இந்நிலையில், ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்த ஏவுகணை சோதனை அனைத்து வகையிலும் வெற்றிகரமாக இருந்தது. தொழில்நுட்ப ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் அளவீடுகள் சிறப்பாக இருந்தன. ராஜதந்திர படைத்தலைமை மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    • நடன இயக்குனர் சதீஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
    • ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ். இவர் முதல் முறையாக கிஸ் (KISS) படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் கிஸ் படம் செப்டம்பர் 19ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    • எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு சுப்மன் கில்லை வளர்க்க வேண்டும் என கம்பீர் வலியுறுத்தியதாக தகவல்.
    • சுப்மன் கில்லை தவிர்த்து மற்ற வீரர்களை கண்டுபிடிக்க முடியாததால், தேர்வுக்குழு இந்த முடிவுக்கு வந்துள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய டி20 அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

    அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், ஐபிஎல் தொடரில் அசத்திய ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே சுப்மன் கில்லும் அணியில் இடம் பெறலாம். மாற்று தொடக்க வீரர் இடத்திற்கு ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுப்மன் கில் அணியில் இடம் பிடித்ததுடன், துணைக் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அக்சர் பட்டேல் துணைக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற நிலையில், சுப்மன் கில்லிடம் சென்றுள்ளது.

    அணியில் இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்த்த நிலையில் துணைக் கேப்டன் பதவி எப்படி சென்றது என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கவுதம் கம்பீர்தான் சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவி வழங்க வேண்டும் என வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முதலில் அக்சர் பட்டேலைத்தான் துணைக் கேப்டனாக நியமிக்க அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. சுப்மன் கில் பெயர் அவர்கள் மனதில் இல்லையாம்.

    ஆன்லைன் மூலம் கவுதம் கம்பீர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது சுப்மன் கில்லுக்கு அடுத்த மாதம் வந்தால் 26 வயது நிறைவடைகிறது. இந்தியாவின் எதிர்காலத்திற்கு யாராவது ஒருவரை வளர்ப்பது அவசியம். அதற்கு கில் தகுந்த நபராக இருப்பார். அவரால் நீண்ட காலத்திற்கு விளையாட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றுள்ளது. சுப்மன் கில்லை தவிர்த்து சரியான நபரை தேர்வுக்குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை. சூர்யகுமாரிடம் இருந்து கேப்டன் பதவியை பெறுவதற்கு தயாராக இது சரியான நேரம் என்று தேர்வுக்குழு கருதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால்தான் சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவி சென்றுள்ளது. சுப்மன் கில் கடந்த வருடம் ஜூலை மாதத்திற்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் விளையாடியது கிடையாது. ஒருநாள் போட்டி அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். டெஸ்ட் அணியில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • புதிய வெப் தொடரில் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார்.
    • இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலானது.

    'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் புதிய வெப் தொடரில் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 'ஜெகமே தந்திரம்', 'கட்டா குஸ்தி', 'பொன்னியின் செல்வன்', 'தக்லைப்', 'மாமன்' படங்களில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறாராம்.

    அர்ஜுன் தாசும், ஐஸ்வர்யா லட்சுமியும் காதலிப்பதாக 'கிசுகிசு'க்கப்பட்டது. இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலானது. ஆனால் இருவருமே இதனை மறுத்தனர்.

    இந்தநிலையில் 'கிசுகிசு' காதல் ஜோடியான இவர்கள், புதிய படத்தில் இணைந்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. காட்சிகளும் 'கலர்புல்' ஆக எடுக்கப்படுகிறதாம்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடக்க உள்ளது.
    • மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். உடன் விஜய் கட் அவுட்டும் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது.

    இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடக்க உள்ளது. இதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் 100 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றவுள்ளார்.

    மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். கட் அவுட்களுடன் விஜய் கட் அவுட்டும் நிறுவப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மாற்றுக்கட்சி தலைவர்களின் புகைப்படங்களை தமிழக வெற்றிக் கழகம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

    செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அண்ணாவும், எம்ஜிஆரும் பொதுவான தலைவர்கள் என்பதால் படத்தை பயன்படுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார். அப்போது விஜயகாந்த் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது பிரேமலதா தெரிவித்தது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், "விஜயகாந்த் புகைப்படங்களை நாங்கள் எங்கும் பயன்படுத்தவில்லை" என்று தெரிவித்தார்.

    • இந்திய விமானப்படையின் காலாவதியான MiG-21 ரக விமானங்களுக்கு மாற்றாக இருக்கும்.
    • இந்த விமானங்களில் 65%க்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

    இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜஸ் LCA (Tejas Light Combat Aircraft ) Mark 1A போர் விமானங்களை வாங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.62,000 கோடி மதிப்பீட்டில் 97 விமானங்களை வாங்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் இந்த விமானங்களை தயாரிக்கிறது.

    முன்னதாக ஏற்கனவே ரூ. 48,000 கோடி மதிப்பீட்டில் 83, LCA Mark 1A போர் விமானங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஆர்டர், இந்திய விமானப்படையின் காலாவதியான MiG-21 ரக விமானங்களுக்கு மாற்றாக இருக்கும்.

    இந்த புதிய LCA Mark 1A போர் விமானங்கள் மேம்பட்ட ரேடார் மற்றும் மின்னணு அமைப்புகளைக் கொண்டிருக்கும். இந்த விமானங்களில் 65%க்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

    இது உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும்.

    ×