என் மலர்tooltip icon

    இந்தியா

    அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி: பாதுகாப்புத்துறை
    X

    அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி: பாதுகாப்புத்துறை

    • அக்னி 5 ஏவுகணை அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கி.மீ. தொலைவு சென்று தாக்கும் திறன் படைத்தது.
    • அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.

    புவனேஸ்வர்:

    மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை (டி.ஆர்.டி ஓ.) சார்பில் அக்னி 5 ஏவுகணை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏவுகணையானது மூன்று நிலைகளை கொண்டது. சாலை மூலமாக வாகனங்களில் கொண்டு செல்லும் வசதி கொண்டது. திட எரிபொருளை கொண்டு இயக்கப்படுவதாகும். உலகின் அதிவேகமான ஏவுகணைகளில் இதுவும் ஒன்று.

    அக்னி 5 என்பது கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையாகும். இந்த ஏவுகணை வினாடிக்கு 29,000 கி.மீ. வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.

    இந்நிலையில், ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்த ஏவுகணை சோதனை அனைத்து வகையிலும் வெற்றிகரமாக இருந்தது. தொழில்நுட்ப ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் அளவீடுகள் சிறப்பாக இருந்தன. ராஜதந்திர படைத்தலைமை மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×