என் மலர்
நீங்கள் தேடியது "தவெக கட்சிக் கொடி"
- கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானது.
- சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக உறுதி.
மதுரையில் நாளை த.வெ.க.வின் 2வது மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டது.
கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானது.
கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில், இன்னோவா கார் ஒன்று சுக்கு நூறாக நொறுங்கியது.
இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என்றாலும், விபத்தால் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கொடிக்கம்பம் விபத்தை தொடர்ந்து, புதிய கொடிக்கம்பத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாநாட்டு மேடை அருகே சிறிய கொடிக் கம்பம் நடப்பட்டு, விஜய் கொடியேற்ற உள்ளார்.
இதற்கிடையே, மதுரை தவெக 2வது மாநில மாநாட்டு திடலுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.
- அனுமதி பெறாமல் வைத்த பேனர்கள், கொடிகம்பங்களை அகற்ற வேண்டும்.
- ஒரு மணி நேரத்தில் அகற்றி அறிக்கை தர மதுரை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறாமல் வைத்த பேனர்கள், கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒரு மணி நேரத்தில் அகற்றி அறிக்கை தர மதுரை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொடிக்கம்பம் குறித்து மதுரையில் நேரில் ஆய்வு செய்ய நாங்கள் தயார், ஒத்துழைப்பு தருவதற்கு அரசு தரப்பு தயாரா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
- கொடிக்கம்பம் சாய்ந்த ஏற்பட்ட விபத்தில் கார் ஒன்று பலத்த சேதம் அடைந்துள்ளது.
- இந்த விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் நாளை த.வெ.க.வின் 2வது மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது.
இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தால் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- தமிழக வெற்றி கழக (த.வெ.க) கட்சிக் கொடியின் அறிமுக விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
- மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
தமிழக வெற்றி கழக கட்சி தலைவர் நடிகர் விஜய் கட்சிக் கொடியை கடந்த மாதம் அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அம்பத்தூரில் ஆயிரம் பேருக்கு கட்சிக் கொடி, சிக்கன் பிரியாணி வழங்கி நல திட்டங்களோடு கொண்டாடிய விஜய் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்தனர்.

அம்பத்தூரில் தமிழக வெற்றி கழக (த.வெ.க) கட்சிக் கொடியின் அறிமுக விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
த.வெ.க கட்சியின் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 1000 பேருக்கு சிவப்பு மஞ்சள் நிறத்தில் யானை உருவத்துடன் கூடிய த.வெ.க கட்சி கொடியை வழங்கினர்.

முன்னதாக விழாவில் கலந்து கொண்ட கூலித் தொழிலாளிகளுக்கு கட்சி கொடியை வழங்கி மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பின்னர் பெண்கள், இளைஞர் என அனைவருக்கும் கட்சிக் கொடியை கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கியதோடு சுமார் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர்.
- நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார்.
- மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.
நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார். நடந்துவரும் பாதையின் இருபுறமும் தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தவெக கட்சிக் கொடி வடிவிலான துண்டுகளை மேடை மீது அவர்கள் வீசினர். அதை அன்போடு எடுத்து தனது தோளில் அணிந்துகொண்டார்.
அவ்வாறு வீசப்பட்ட கொடிகள் பலவற்றை எடுத்து தனது தோளில் அவர் போட்டுக்கொண்டது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பாதுகாவலர் ஒருவரும் உற்சாக மிகுதியில் நடைபாதை மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.
நடைபாதையிலிருந்து நிகழ்ச்சி மேடையில் ஏறிய விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மாமன்னர்கள், மொழிப்போர் தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.






