search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் மாரியம்மன் கோவில் கொடை விழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
    X

    திருச்செந்தூர் மாரியம்மன் கோவில் கொடை விழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

    • முளைப்பாரி ஊர்வலமாக வந்து, கடலில் பிரி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • 27-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனை நடக்கிறது.

    திருச்செந்தூர் மேலத்தெரு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் கொடை விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 17-ந் தேதி மாலையில் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது.

    நேற்று அதிகாலை 3 மணிக்கு படைப்பு தீபாராதனை நடந்தது. பகல் 1 மணியளவில் மஞ்சள் நீராட்டு தீபாராதனையும், அம்மன் கும்பம் ஊரில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் நகரில் முளைப்பாரி ஊர்வலமாக வந்து, கடலில் பிரி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 3 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி, நேற்று பகல் 11.30 மணியளவில் கோவிலில் திருக்கால் நாட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 25-ந் தேதி மாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் சண்முகவிலாசத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக ரதவீதி வழியாக கோவிலுக்கு வருகிறது.

    பின்னர் சுவாமிக்கு கும்பம் ஏற்றப்பட்டு, குடியழைப்பு தீபாராதனை நடக்கிறது. 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரமாகி மகா தீபாராதனை, பின்னர் அன்னதானம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்காரமாகி, தீபாராதனை நடக்கிறது. 27-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேலத்தெரு யாதவ மகாசபை மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×