search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    செஞ்சி பி ஏரிக்கரை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    செஞ்சி பி ஏரிக்கரை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • 22-ந்தேதி சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
    • 23-ந்தேதி அக்னி சட்டி ஊர்வலம், தீமித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    செஞ்சி பி ஏரிக்கரையில் உள்ள பிரசித்திபெற்ற சுப்பிரமணியசாமி கோவிலில் 49-ம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கும், கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொடிமரத்தில் ஆடி கிருத்திகை திருவிழா கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செஞ்சி ஒழுங்குமுறை விற்பணை கூட நெல், அரிசி, மணிலா, வியாபாரிகள் மற்றும் எடை போடும் தொழிலாளர்கள் சார்பில் நடைபெறும் இவ்விழாவில் வருகிற 22-ந்தேதி சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலையில் சாமி வீதியுலா நிகழ்ச்சியும், 23-ந்தேதி ஆடி கிருத்திகையை முன்னிட்டு மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து 108 பால் குட ஊர்வலமும், அக்னி சட்டி ஊர்வலமும், தீமித்தல் நிகழ்ச்சியும், தேர் வீதிஉலா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை செஞ்சி ஒழுங்குமுறை விற்பணைக்கூட நெல் அரிசி, மணிலா, வியாபாரிகள் சங்கம் மற்றும் எடை பணி தொழிலாளர்கள், பொது மக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×