என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
வள்ளியூர் முருகன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Byமாலை மலர்9 May 2022 6:01 AM GMT (Updated: 9 May 2022 6:01 AM GMT)
வள்ளியூர் முருகன் கோவிலில் தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டத்திருவிழா 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விமர்சையாக நடைப்பெற்றது. பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ’என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம்,பல்வேறு வாகனங்களில் வீதியுலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி நேற்று காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது .
பின்னர் முருகபெருமான் மற்றும் வள்ளி அம்பாள் தேரில் எழுந்தருளினார்கள். அதனை தொடர்ந்து காலை 10.10 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து ‘முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா ’என்ற கோஷத்துடன் தேரை இழுத்தனர். தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இன்று இரவு சுவாமி மற்றும் அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள். நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம்,பல்வேறு வாகனங்களில் வீதியுலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி நேற்று காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது .
பின்னர் முருகபெருமான் மற்றும் வள்ளி அம்பாள் தேரில் எழுந்தருளினார்கள். அதனை தொடர்ந்து காலை 10.10 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து ‘முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா ’என்ற கோஷத்துடன் தேரை இழுத்தனர். தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இன்று இரவு சுவாமி மற்றும் அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள். நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X