என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்
Byமாலை மலர்11 March 2021 7:16 AM GMT (Updated: 11 March 2021 7:16 AM GMT)
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதையொட்டி ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள், மங்கள பொருட்களை வைத்து சமர்ப்பணம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி இன்று (வியாழக்கிழமை) மகா சிவராத்திரி உற்சவம் நடக்கிறது. 14-ந்தேதி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
அதையொட்டி ஆந்திர மாநில அரசு சார்பில் மந்திரி பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி மற்றும் அவரின் மனைவி மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வெள்ளி தட்டுகளில் பட்டு வஸ்திரங்கள், மங்கள பொருட்களை வைத்து சமர்ப்பணம் செய்தனர்.
முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் சன்னதியில் இருந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக தலையில் சுமந்து அலங்கார மண்டபம் வரை வந்து கோவில் அர்ச்சகர்களிடம் வழங்கினர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.சி.வி.நாயுடு மற்றும் கோவில் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதையொட்டி ஆந்திர மாநில அரசு சார்பில் மந்திரி பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி மற்றும் அவரின் மனைவி மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வெள்ளி தட்டுகளில் பட்டு வஸ்திரங்கள், மங்கள பொருட்களை வைத்து சமர்ப்பணம் செய்தனர்.
முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் சன்னதியில் இருந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக தலையில் சுமந்து அலங்கார மண்டபம் வரை வந்து கோவில் அர்ச்சகர்களிடம் வழங்கினர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.சி.வி.நாயுடு மற்றும் கோவில் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X