search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கெங்கம்மாள் கோவிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X
    கெங்கம்மாள் கோவிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    கெங்கம்மாள் கோவிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    சேலம் வட்டமுத்தாம்பட்டியில் உள்ள கெங்கம்மாள் கோவிலில் விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் கைக்குழந்தைகளுடனும் குண்டம் இறங்கினார்கள்.
    சேலம் சர்க்கார்கொல்லப்பட்டியை அடுத்த வட்டமுத்தாம்பட்டியில் உள்ள கெங்கம்மாள் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அன்று இரவு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு பால் குடம் எடுத்தல், ஆடை ஆபரண அலங்காரம் செய்தல், கூழ்படைத்தல் நிகழ்ச்சியும், மாலையில் விளையாட்டு போட்டிகளும், மாணவ-மாணவிகளுக்கு நடனப்போட்டியும் நடைபெற்றது.

    நேற்று காலை மாவிளக்கு எடுத்தல், சக்தி கரகம் எடுத்தல், பூக்கரகம், சேத்துமுட்டி எடுத்தல் போன்றவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் கைக்குழந்தைகளுடனும் குண்டம் இறங்கினார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×