search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கவுசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் 20-ந்தேதி சூரசம்ஹார விழா
    X
    கவுசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் 20-ந்தேதி சூரசம்ஹார விழா

    கவுசிக பாலசுப்பிரமணியர் கோவிலில் 20-ந்தேதி சூரசம்ஹார விழா

    புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் 20-ந்தேதி காலை திருத்தேர் வீதி உலாவும், இரவு 7 மணிக்கு சூரசம்ஹார பெருவிழாவும் நடக்கிறது.
    புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் 68-ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நாளை (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு யானை முகன் சம்ஹாரம் நடக்கிறது. 19-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு வேல் வாங்குதலும், சிங்கமுகன் சம்ஹாரமும் நடக்கிறது. 20-ந்தேதி காலை திருத்தேர் வீதி உலாவும், இரவு 7 மணிக்கு சூரசம்ஹார பெருவிழாவும் நடக்கிறது.

    21-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு தீர்த்தவாரியும் நடக்கிறது. 28-ந்தேதி (சனிக் கிழமை) இரவு 8 மணிக்கு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலாவும், 29-ந்தேதி இரவு 7 மணிக்கு கார்த்திகை தீப திருவிழாவும், 1-ந்தேதி இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.

    மறுநாள் 2-ந்தேதி காலையில் வீரபாகு உற்சவமும், இரவு சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. விழாவில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ளவேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
    Next Story
    ×