என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நவராத்திரி: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்மன்
Byமாலை மலர்19 Oct 2020 3:25 AM GMT (Updated: 19 Oct 2020 3:25 AM GMT)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நேற்று தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நேற்று தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.
விழாவையொட்டி அம்மன் மற்றும் சுவாமி சன்னதி மற்றும் கொலுசாவடி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர அனைத்து கோபுரங்கள் மற்றும் பொற்றாமரைக்குளம் பகுதியிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி விழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார். விழாவில் முதல் நாளான நேற்று மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் கொலு சாவடியில் உற்சவர் மீனாட்சி அம்மன் அருகே 3 படிகளில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டன.
நேற்று மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பட்டர்கள் கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் செய்தனர். கொரோனா காரணமாக பக்தர்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
விழாவையொட்டி அம்மன் மற்றும் சுவாமி சன்னதி மற்றும் கொலுசாவடி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர அனைத்து கோபுரங்கள் மற்றும் பொற்றாமரைக்குளம் பகுதியிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி விழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார். விழாவில் முதல் நாளான நேற்று மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் கொலு சாவடியில் உற்சவர் மீனாட்சி அம்மன் அருகே 3 படிகளில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டன.
நேற்று மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பட்டர்கள் கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் செய்தனர். கொரோனா காரணமாக பக்தர்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X