search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனாட்சி அம்மன்"

    • மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தனர்.
    • மீனாட்சி அம்மன் கமல வாகனத்தில் வலம் வருவது வழக்கம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் 3-ம் நாளான நேற்று ஆடிப்பூரத்தன்று மூலஸ்தானம், உற்சவம் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவமும் நடந்தது. அப்போது அம்மனுக்கு வளையல், திருமாங்கல்ய கயிறு, குங்குமம் வைத்து அர்ச்சனை செய்தனர். பின்னர் அதனை பக்தர்களுக்கு பட்டர்கள் வழங்கினார்கள்.

    ஆடிபூரத்தன்று பல ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கமல (தாமரை பூ) வாகனத்தில் வலம் வருவது வழக்கம். மரக்கட்டையால் செய்யப்பட்ட அந்த வாகனம் நாளடைவில் பழுதடைந்தது. எனவே அந்த வாகனத்தில் அம்மன் வலம் வருவதற்கு பதில் வேறு வாகனத்தில் வலம் வந்ததாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த வக்கீல் ஒருவர் அம்மனுக்கு புதிதாக கமல வாகனம் செய்து கொடுத்தார். அந்த வாகனம் நேற்று காலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஸ்தானிக பட்டர்கள் ஹாலஸ், செந்தில் சிறப்பு பூஜை செய்த பின்பு புதிய வாகனம் வெள்ளோட்டம் நடந்தது. இந்த நிகழ்வில் கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து இரவு வீதி உலாவில் மீனாட்சி அம்மன் அந்த புதிய கமல வாகனத்தில் எழுந்தருளி பக்தர்கள் மத்தியில் பவனி வந்து காட்சி அளித்தார்.

    • நாளை மூலவர், மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவம் நடைபெறுகிறது.
    • 26-ந்தேதி சுவாமி, அம்மன் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

    "ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற முன்னோர் வாக்கின்படி விவசாயப் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை தொடங்குவர். பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபடுவார்கள்.

    உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்கள் திருவிழா நடைபெறும். அதில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியவை நடைபெறும். இந்தாண்டு ஆடி முளைக்கொட்டுத் திருவிழா நேற்று தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது

    இதையொட்டி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் நேற்று காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. அப்போது மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இன்றைய தினத்தில் இருந்து திருவிழா நடைபெறும் 10 நாட்கள் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி அளிப்பார்.

    விழாவில் 3-ம் நாளான நாளை (சனிக்கிழமை) ஆடிப்பூரத்தன்று மூலவர், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவம் நடைபெறுகிறது.

    7-ம் நாளான 26-ந் தேதி இரவில் வீதிஉலா முடிந்த பின் உற்சவர் சன்னதில் சுவாமி, அம்மன் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். விவசாயம் பெருகவும், நாடு செழிக்கவும் அமைந்ததே ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவாகும். திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கத்தேர் போன்றவை நடைபெறாது. ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • திருவிழா 20-ந் தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.
    • 26-ந்தேதி மாற்றும் வைபவம் நடைபெறும்.

    ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர் வாக்கின்படி விவசாயப் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வர். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.

    உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டுத் திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது.

    விழாவின் தொடக்கமாக அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    அன்றைய தினத்தில் இருந்து விழா நடைபெறும் 10 நாட்கள் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவில் 3-ம் நாளான 22-ந் தேதி ஆடிப்பூரத்தன்று மூலஸ்தானம், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவமும், 7-ம் நாளான 26-ந் தேதி இரவு வீதிஉலா முடிந்த பின் உற்சவர் சந்நதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும்.

    ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா இன்று தொடங்கியது.
    • இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் ஆனி ஊஞ்சல் திருவிழா இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணியளவில் தொடங்கு கிறது. ஆனி மாதம் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் ஈறாக 9 நாட்கள் என இன்று முதல் ஜூலை 2-ந் தேதி முடிய ஊஞ்சல் உற்சவம் நடைபெறவுள்ளது.

    நாளை (25-ந்தேதி) இரவு முதல் 26-ந் தேதி ஆனி உத்திரம் அன்றைய தினம் அதிகாலையில் 3 மணியளவில் வெள்ளி யம்பல நடராஜர் சிவ காமிக்கும், அம்மனுக்கும் சுவாமி கோவில் 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர் சிவகாமி யம்மனுக்கு சுவாமி கோவில் 2-ம் பிரகாம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும்.

    பின்னர் காலபூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர் சிவகாமியம்மன் 4 மாசி வீதிகளில் புறப்பாடாகும். அபிஷேக திரவிய பொருட்களை 25-ந் தேதி இரவு 7 மணிக்குள் கோவிலில் வழங்கலாம்.

    திருவிழா நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்ட பத்திற்கு எழுந்தரு ளுவார்கள்.

    அங்கு ஊஞ்சள் கொண்ட பின் மாணிக்க வாசகர் பாடிய திருவாச கத்தின் திருப் பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் ஓதப்படும். அதனை நாதசுர கலைஞர்கள் 9 வகையான ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து 2-ம் பிரகாரம் சுற்றி சேர்த்தியை சென்றடைவார்கள்.

    ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் படியாக ஆகமத்தில் விரித்துரைக்கப் பட்டுள்ளன.

    அதன்படி அடுத்த மாதம் 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமியன்று உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாத சிவப்பெரு மானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெற உள்ளது.

    இப்பூஜைகளை ஏற்று கொண்ட இறைவன் இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளும் புணர்வுறு போகம் எய்த அருள் பாலிப்பதாக ஐதீகமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஆனி ஊஞ்சல் உற்சவம் முடிவில் 4 சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழா நடைபெறும் நாட்களான வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி கோவில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ உபய திருக்கல்யாணம் மற்றும் தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்துள்ளனர்.

    • 3-ந்தேதி சுவாமிக்கு முப்பழ அபிஷேகம் நடக்கிறது
    • 25-ந்தேதி இரவு முதல் 26-ந்தேதி அதிகாலையில் 3 மணியளவில் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் ஆனி ஊஞ்சல் திருவிழா நாளை(சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது. ஆனி மாதம் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் ஈறாக" 9 நாட்கள் என வருகிற 24-ந் தேதி முதல் ஜூலை 2-ந் தேதி முடிய ஊஞ்சல் உற்சவம் நடைபெறவுள்ளது.

    திருவிழா நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளுவார்கள். அங்கு ஊஞ்சள் கொண்ட பின் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் ஓதப்படும். அதனை நாதசுர கலைஞர்கள் 9 வகையான ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து 2-ம் பிரகாரம் சுற்றி சேர்த்தியை சென்றடைவார்கள்.

    25-ந் தேதி இரவு முதல் 26-ந் தேதி ஆனி உத்திரம் அன்றைய தினம் அதிகாலையில் 3 மணியளவில் வெள்ளியம்பல நடராஜர் சிவகாமிக்கும், அம்மனுக்கும் சுவாமி கோவில் 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர் சிவகாமியம்மனுக்கு சுவாமி கோவில் 2-ம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் காலபூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர் சிவகாமியம்மன் 4 மாசி வீதிகளில் புறப்பாடாகும். அபிஷேக திரவிய பொருட்களை 25-ந் தேதி இரவு 7 மணிக்குள் கோவிலில் வழங்கலாம்.

    ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் படியாக ஆகமத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த மாதம் 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமியன்று உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாத சிவப்பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெற உள்ளது.

    இப்பூஜைகளை ஏற்று கொண்ட இறைவன் இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளும் புணர்வுறு போகம் எய்த அருள்பாலிப்பதாக ஐதீகமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஆனி ஊஞ்சல் உற்சவம் முடிவில் நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழா நடைபெறும் நாட்களான வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி கோவில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ உபய திருக்கல்யாணம் மற்றும் தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • எல்லாம் வல்ல சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள்ஏராளம்.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் இந்த அற்புதத்தை நடத்தினார்.

    கல் யானை கரும்பு சாப்பிடுமா? சித்தர்கள் நினைத்தால் சாப்பிடும். அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்திக்காட்டியவர் எல்லாம் வல்ல சித்தர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் இந்த அற்புதத்தை நடத்தினார். அதற்கான சான்றுகள் இன்றும் அந்த ஆலயத்தின் உள்ளே இருக்கின்றன. எல்லாம் வல்ல சித்தர் மதுரை வீதிகளில் சுற்றித்திரிந்த போது முதலில் அவரது சிறப்பை யாரும் உணரவில்லை. ஆனால் அவர் அற்புதங்கள் செய்யத்தொடங்கிய பிறகுதான் அவரை பற்றிய தகவல்கள் மதுரை முழுக்க பரபரப்பாக பேசப்பட்டன. அந்த அளவுக்கு அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஒவ்வொன்றும் இருந்தன.

    தன்னை தேடி வரும் வயதானவர்களை திடீரென இளைஞர் ஆக்கி விடுவார். ஆணை பெண்ணாக மாற்றி விடுவார். கல்லை எடுத்து வீசுவார். அவை தங்கங்களாக மாறும். ஊசி முனையில் நின்றபடி நடனமாடுவார். மரணம் அடைந்தவர்களை உயிரோடு எழுப்பி உள்ளார்.

    இப்படி அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். இந்த அற்புதங்கள் நிகழ்ந்த காலத்தில் மதுரையில் அபிஷேக பாண்டியன் ஆட்சி நடந்து வந்தது. அவரது காதுகளுக்கும் எல்லாம் வல்ல சித்தர் நடத்திய அற்புதங்கள் எட்டியது.

    அந்த சித்தரை பார்க்க வேண்டும் என்ற ஆசை அபிஷேக பாண்டியனுக்கு ஏற்பட்டது. தனது வீரர்களை அனுப்பி சித்தரை அழைத்து வருமாறு உத்தரவிட்டார். காவலாளிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று சித்தரை பார்த்து, "மன்னர் உம்மை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். வாரும்" என்றனர்.

    ஆனால் சித்தரோ அந்த காவலாளிகளை கண்டு கொள்ளவே இல்லை. "உங்கள் மன்னரால் எனக்கு எந்த பயனும் இல்லை. நான் ஏன் அவரைப் பார்க்க வேண்டும். அவருக்கு தேவை என்றால் இங்கே வந்து என்னைப்பார்க்க சொல்லுங்கள்" என்றார்.

    வீரர்களும் மன்னரிடம் இதை தெரிவித்தனர். அபிஷேக பாண்டியன் ஆத்திரப்படவில்லை. இறை அருள் பெற்றவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று நினைத்தார். பிறகு அவரே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று சித்தரை சந்தித்தார்.

    சித்தரிடம் அவர், "உங்களால் எது வேண்டுமானாலும் செய்ய முடியுமாமே.... உண்மையா?" என்று கேட்டார். அதற்கு அந்த சித்தர், "ஆமாம். நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதனால்தான் எனக்கு எல்லாம் வல்லவன் என்று பெயர்" என்றார். இதைக்கேட்டதும் மன்னருக்கு அவரை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

    அவர் சித்தரை பார்த்து, "நான் சொல்வதை உங்களால் நிகழ்த்திக்காட்ட முடியுமா?"என்றார். அதற்கு சித்தர், "நானே ஆதியும், அந்தமும் ஆவேன். என்னால் எதையும் செய்ய முடியும்"என்றார். உடனே மன்னர், " என்ன கடவுள் போல பேசுகிறீர்களே.... நீங்கள் என்ன கடவுளா?" என்றார். சித்தர் பதில் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டே, "உங்களுக்கு என்ன வேண்டும். அதை சொல்லுங்கள்" என்றார். அபிஷேக பாண்டியன் என்ன கேட்பது என்று யோசித்தார். சுற்றும் முற்றும் பார்த்த அவர் கண்களில் கல் யானை சிற்பம் தெரிந்தது. உடனே அவர் சித்தரிடம், "இந்த கல் யானையை கரும்பு சாப்பிட வையுங்கள் பார்க்கலாம்" என்று சவால் விட்டார்.

    மன்னர் உத்தரவுப்படி கரும்புக்கட்டுகள் கொண்டு வரப்பட்டன. எல்லாம் வல்ல சித்தர் எதுவுமே சொல்லவில்லை. கரும்பு கட்டுகளை வாங்கி அந்த கல் யானை சிற்பம் முன்பு போட்டார். "சாப்பிடு" என்று குரல் கொடுத்தார். அடுத்த வினாடி கல் யானை உயிர் பெற்று நிஜ யானையை போல் மாறி பிளிறியது.அங்கு கிடந்த கரும்புக்கட்டுகளை எடுத்து சுவைத்து சாப்பிட்டு விட்டது. இதைக்கண்ட மன்னர் ஆச்சரியப்பட்டார். எல்லாம் வல்ல சித்தரின் மகிமையை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். இதனால் மனம் இரங்கிய சித்தர், "என் திறமையை பரிசோதித்து பார்த்து விட்டாய்.... உனக்கு ஏதாவது வேண்டுமா கேள்" என்றார். மன்னர் கண்ணீர் மல்க, "இந்த ராஜ்ஜியத்தை வழிநடத்த எனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும்" என்று கேட்டார்.

    எல்லாம் வல்ல சித்தர், "அப்படியே உண்டாகும் போய்வா"என்று அனுப்பி வைத்தார். அவர் சொன்னபடியே அபிஷேக பாண்டியனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. விக்கிரமன் என்று பெயரிட்டு அந்த குழந்தையை அவர் வளர்த்தார் என்பது வரலாறாகும்.

    இத்தகைய சிறப்புடைய எல்லாம் வல்ல சித்தர் மதுரையில் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சித்தர் ஆய்வு நூல்களில் குறிப்புகள் உள்ளன. இவர் விண்வெளி பயணத்தில் மிகவும் சிறந்து விளங்கினார். பல தடவை சமாதி யோகத்தில் இருந்துள்ளார். இவர் 800 ஆண்டுகள் 28 நாட்கள் வாழ்ந்ததாக சில சித்தர்கள் தங்களது நூல்களில் எழுதி உள்ளனர். போகர் இவரை பற்றி கணித்து சில குறிப்புகளை கொடுத்துள்ளார். அதில் எல்லாம் வல்ல சித்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ரேவதி நட்சத்திரத்துக்கு உரிய சித்தராக இவரை கருதுகிறார்கள்.

    இவர் ரசவாத வித்தையில் கரைகண்டவராக திகழ்ந்தார். எந்த ஒரு பொருளை அவர் தொட்டு கொடுத்தாலும் அது தங்கமாக மாறும் அதிசயம் நடந்தது. சில சமயங்களில் அவர் சொன்னாலே பொருட்கள் தங்கமாக மாறின. அந்த வகையில் திருப்புவனத்தில் வாழ்ந்த பொன்னனையாள் என்ற தேவதாசி பெண்ணுக்கு அவர் தங்கம் வரவழைத்து கொடுத்தது இன்றும் வரலாற்று பதிவாக உள்ளது.

    சிறந்த சிவ பக்தையான பொன்னனையாள் சிவனடியார்களுக்கு தினமும் உணவு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாள்.ஒருநாள் அவள் சிவனடியார்களுக்கு அன்னதானம் கொடுத்த போது ஒரே ஒரு சிவனடியார் மட்டும் உணவு சாப்பிடாமல் அமைதியாக இருந்தார்.

    அவரிடம் பொன்னனையாள், "ஏன் சுவாமி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? வேறு ஏதாவது உங்களுக்குவேண்டுமா?" என்று கேட்டாள். அதற்கு அவர், "எனக்கு எதுவும் வேண்டாம். உனது முகத்தில் ஏதோ ஒரு கவலை தெரிகிறது. அதை சொன்னால் தீர்த்து வைக்கிறேன்" என்றார். உடனே பொன்னனையாள் கண்ணீர் விட்டு அழுதபடி தனது குறையை தெரிவித்தாள்.

    "இந்த ஊரில் உள்ள சிவபெருமான் பூவனநாதருக்கு தங்கத்தில் சிலை வடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அந்த அளவுக்கு என்னிடம் பொருள் வசதி இல்லை.அதை நினைத்துதான் கவலையில் இருக்கிறேன்" என்றாள்.

    அதைக்கேட்ட அவர், " நீ வைத்திருக்கும் பித்தளை பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வா" என்றார். அதன்படி பொன்னனையாள் எல்லா பாத்திரங்களையும் அவர் முன்பு கொண்டு வந்து வைத்தாள். அந்த பாத்திரங்கள் மீது திருநீறு அள்ளி வீசிய அவர், "இந்த பாத்திரங்களையெல்லாம் இன்று இரவு தீயில் போட்டுவிடு. அவை உனக்கு தங்கமாக மாறி கிடைக்கும்" என்றார்.

    அவர் சொன்னது போலவே அன்றிரவு பொன்னனையாள் பித்தளை பாத்திரங்களை தீயில் அள்ளிப்போட்டாள். அவை அனைத்தும் தங்கமாக மாறியது. அந்த தங்கத்தை சிற்பியிடம் கொடுத்து அழகான சிலை வடித்தாள். அதன்பிறகுதான் தனக்கு உதவி செய்த சிவனடியாரை தேடி கண்டுபிடித்து பேச வேண்டும் என்ற உணர்வு பொன்னனையாளுக்கு எழுந்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருப்பேன் என்று அவர் சொன்னது பொன்னனையாளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே அவள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தாள். கோவிலுக்குள் கடம்பமரத்தடியில் சித்தர் உட்கார்ந்திருந்தார். அப்போதுதான் தனக்கு தங்கம் தந்து அற்புதங்கள் நிகழ்த்தியது எல்லாம் வல்ல சித்தர் என்ற உண்மை பொன்னனையாளுக்கு தெரிய வந்தது.

    கண்ணீர் மல்க அவள் சித்தரின் கால்களில் விழுந்து வணங்கினாள். "உங்களது உதவியால்தான் தங்கத்தில் ஈசனுக்கு சிலை செய்ய முடிந்தது. உண்மையில் நீங்கள் யார்?என்றுபல்வேறு கேள்விகளை எழுப்பினாள்.

    ஆனால் எல்லாம் வல்ல சித்தர் எதுவும் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டே இருந்தார். பொன்னனையாள் விடவில்லை. "எனக்கு நீங்கள் உண்மையை சொல்லியே தீர வேண்டும்" என்று நச்சரித்தாள். உடனே சித்தர், "என்னை சொக்கநாதா என்பார்கள். சிலர் சுந்தரேசா என்கிறார்கள். சிலர் எல்லாம் வல்லவர் என்கிறார்கள். எனக்கு இப்படி ஏராளமான பெயர்கள் இருக்கிறது. உனக்கு எந்த பெயரில் அழைக்க விருப்பமோ அந்த பெயரில் அழைக்கலாம்" என்றார்.

    பிறகு அப்படியே தியான கோலத்தில் அமர்ந்தார். நீண்ட நேரமாக அவரது தியானம் நீடித்தது. பொன்னனையாள் பொறுமை இழந்து, "சுவாமி நான் விடைபெற வேண்டும். உத்தரவு தாருங்கள்"என்றாள். ஆனால் எல்லாம் வல்ல சித்தர் தியானத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை.

    அவர் அருகில் சென்ற போதுதான் எல்லாம் வல்ல சித்தர் கல்சிலையாக மாறி இருப்பது தெரிய வந்தது. இறைவனே சித்தராக மாறி இவ்வளவு நாளும் அருள் புரிந்ததாக மதுரை மக்கள் கொண்டாடினார்கள். அவர் வாழ்ந்த அந்த இடத்திலேயே அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டது.

    தற்போது அந்த இடம் மதுரை ஆலயத்தின் கருவறை அருகே உள்ள தனி சன்னதியாக உள்ளது. அந்த சன்னதி கருவறையில் எல்லாம் வல்ல சித்தரின் தியான கோல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    மதுரை ஆலயத்தில் இருக்கும் ஈசனை சுந்தரேசர் என்று சொல்வது போல இந்த சித்தரை சுந்தரானந்தர் என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலா னவர்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றே சொல்கிறார்கள். இவருக்கு தினமும் பூஜை நடத்தப்படுகிறது.

    இவருக்கென்று அபிஷேகங்கள் செய்யப் படுவதில்லை. அதற்கு பதில் தைலகாப்பு செய்யப்படுகிறது. ரேவதி நட்சத்திர நாட்களில் நிறைய பேர் வந்து இவரை வழிபட்டு செல்கிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு வரும் பக்தர்களில் சித்தரை பற்றி தெரிந்தவர்கள் இவரது சன்னதி அருகே நீண்ட நேரம் அமர்ந்து தியானம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இவர் தனது உயிரை பிரித்துக்கொண்ட போது பொன்னனையாள் கதறி அழுது புலம்பினாள். அப்போது அசரீரி ஒன்று கேட்டது. அதில், "நான் இந்த இடத்திலேயே அமர்ந்து இருப்பேன். எனக்கு பூப்பந்தல் அமைத்து வழிபாடு செய்தால் நினைத்ததை நடத்தி தருவேன்" என்று குரல் எழுந்தது.

    அதன்படியே பொன்னனையாள் பூக்களால் பந்தல் போட்டு எல்லாம் வல்ல சித்தரை வழிபட்டாள். அன்று முதல் இங்கு சித்தரை பூக்களால் கூடாரம் அமைத்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. 500 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் பூக்கூடாரம் அமைத்து இந்த சித்தரை வழிபடலாம்.

    எல்லாம் வல்ல சித்தர் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். இதனால் சித்தருக்கும் சித்தர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இதனால் எல்லாம் வல்ல சித்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உரிய வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட நாட்களில் இந்த சன்னதியில் சென்று வழிபட்டால் உரிய பலன்களை பெற முடியும்.

    மதுரைக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தும் எல்லாம் வல்ல சித்தரை வழிபடலாம். சுந்தரானந்தர் படத்தை வீட்டில் வைத்து ஐந்துமுகவிளக்கேற்றி அவர் தொடர்பான போற்றிகளை சொன்னாலே போதும். குறிப்பாக, "ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!!"என்ற மூல மந்திரத்தை 108 தடவை சொல்லி வழிபடுவது நல்லது.

    வியாழக்கிழமைகளில் எல்லாம் வல்ல சித்தரை வழிபடுவது மிகவும் சிறப்பானது. மஞ்சள் வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டால் சித்தர் அருளை எளிதாக பெறலாம்.

    எல்லாம் வல்ல சித்தரை தொடர்ந்து வழிபாடு செய்பவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வறுமை அகன்று வளமான வாழ்வு கிடைக்கும். குரு பக்தி அதிகரிக்கும் என்கிறார்கள். இதன்மூலம் முக்தி பாதைக்கும் காலடி எடுத்து வைக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் போது மறக்காமல் எல்லாம் வல்ல சித்தரையும் வழிபாடு செய்து விட்டு வாருங்கள்.

    • மதுரையை அழிக்க வருணன் 7 மேகங்களைஏவினான்.
    • இந்த தலத்தின் மூலவர் சுந்தரேசுவரர் சுயம்பு மூர்த்தி ஆவார்.

    மீனாட்சி-சுந்தரேசுவரர் குடிகொண்டுள்ள மதுரைக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. மதுரையை அழிக்க வருணன் 7 மேகங்களைஏவினான். அதனை தடுக்க சிவபெருமான் தன் சடையில் இருந்து விடுத்த 4 மேகங்கள் 4 மாடங்களாக கூடி மதுரையை காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயர் வந்ததாக புராணம் கூறுகிறது.

    இதேபோல் சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாகதன் வாலை வாயில் கவ்வி கொண்டு இந்த தலத்தின் எல்லையை காட்டியதால் ஆலவாய் என்று பெயர் வைத்ததாகவும் வரலாறு உள்ளது.

    இந்த தலத்தின் மூலவர் சுந்தரேசுவரர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல்,சொக்கநாதர் என்றும் அழைக்கிறார்கள்.

    அம்பாள் மீனாட்சி தடாதகை பிராட்டி, அபிடேகவல்லி, கற்பூரவல்லி, மரகதவல்லி, சுந்தரவல்லி, அபிராமவல்லி, கயற்கண் குமாரி, குமரிதுறையவள், கோமகள், பாண்டிபிராட்டி, மாணிக்கவல்லி, மதுராபுரி தலைவி, முதுமலை திருவழுதிதிருமகள் எனபல நாமங்களால் அழைக்கப்படுகிறார்.

    • மீனாட்சி அம்மன் தாய் உள்ளம் கொண்டவள்.
    • கோவில் பிரகாரத்தில் அமைதியான இடத்தில் தியானம் செய்வது மிகவும் சிறந்தது.

    மீனாட்சி அம்மன் தாய் உள்ளம் கொண்டவள். இங்கு யார் எதை கேட்டு வணங்கினாலும் அதை அருளுவதோடு சகல ஐஸ்வர்யங்களையும் வழங்க கூடியவர். திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பவர்.மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் எந்த ஒரு நல்ல விசேஷமாக இருந்தாலும் மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு அல்லது சுப காரியங்கள் முடிந்ததும் தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த கோவிலுக்கு வந்துமீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மனநிம்மதி கிடைக்கும். சுவாமி பிரகாரத்தில் ஓம் என்னும் நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு கேட்கும் அளவுக்கு மிக அமைதியாக இருக்கும். மன அமைதி, நிம்மதி வேண்டுவோர்கள் கோவில் பிரகாரத்தில் அமைதியான இடத்தில் தியானம் செய்வது மிகவும் சிறந்தது.

    சுவாமிக்குபால், எண்ணெய், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற அபிஷேகங்கள் செய்யலாம். தவம் செய்தல், விரதம் இருத்தல், தியானத்தில் ஈடுபடுதல், வேள்வி புரிதல்,தானதர்மங்கள் அளித்தல் போன்ற பல்வேறு நிலையில் சுவாமிக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

    அம்பாளை பொருத்தவரை பட்டு புடவை சாத்தி அபிஷேக ஆராதனைகள் செய்து தங்கள் வேண்டுதல்களைபக்தர்கள் பூர்த்தி செய்கின்றனர். சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்தும் யாகம் செய்தும் வழிபடலாம். கோவிலுக்குவரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

    • வசந்த உற்சவம் ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.
    • 2-ந்தேதி சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடக்கும். 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபம் என்று அழைப்பர். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட இந்த மண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மேலும் மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.

    வைகாசி வசந்த உற்சவத்தின் போது மீனாட்சி, சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி காட்சி தருவார். அப்போது கோடை காலமாக இருப்பதால் சூரியனின் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக அகழி வெட்டப்பட்டது. சுற்றிலும் தண்ணீரால் சூழ்ந்த இந்த மண்டபத்தை நீராழி மண்டபம் என்றும் அழைப்பர்.

    மேலும் இந்த மண்டபத்தில் புராண கதைகளை தெரிவிக்கும் வகையில் வடிவமைத்த சிலைகள், எங்கும் காணமுடியாத சிவனின் திருவிளையாடல் புராணத்தை விளக்கும் சிலை வடிவங்கள், நாயக்கர் காலத்தை சிறப்பிக்கும் வகையில் செதுக்கப்பட்ட தத்ரூபமான சிற்பங்கள் உள்ளன. திருமலைநாயக்கர் காலத்தில் இருந்து வசந்த உற்சவம் இங்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    திருவிழா நாட்களை தவிர இந்த மண்டபம் பக்தர்கள் அங்கு ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. பின்பு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கோவிலில் பூஜைக்கு தேவையான குங்குமம், தாலி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், துணி கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் சில்வர் பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் அங்கு செயல்பட்டு வந்தது. வணிக மண்டபமாக மாறியதால் அங்குள்ள சிறப்புகள் நாளடைவில் பக்தர்களுக்கு தெரியாமல் போனது.

    எனவே தொல்லியல், சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை இணைந்து அந்த புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை காணும் வகையில் அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்தது. அதற்காக அங்குள்ள கடைகளை குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நேற்று தொடங்கி வருகிற ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி, சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும்.

    பின்பு சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சென்றடைவர். வருகிற 2-ந்தேதி அன்று காலையிலேயே சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும். மேலும் மண்டபத்தை சுற்றி கடந்த ஆண்டு லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. ஆனால் இந்தாண்டு மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பணிகள் நடப்பதால் தண்ணீர் நிரப்பப்பட வில்லை. மேலும் அரசு உத்தரவின்படி புதுமண்டபத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் அடுத்தாண்டு தண்ணீர் நிரப்பி திருவிழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மஹா விஷ்ணு பெரியவரா, சிவபெருமான் பெரியவரா என்பது குறித்து பக்தர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர்.
    • நாகங்களின் அரசர்கள் சம்பா, பத்ம இருவரும் முறையே சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர்.

    ஸ்ரீ சங்கர நயினார் திருக்கோவில் உள்ள சங்கரன்கோவில் திருத்தலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலம் ஆகும். நெல்லை மாவட்டத்திற்கு தலைநகரம் திருநெல்வேலி. அதற்கு அடுத்த பெரிய நகரம் சங்கரன்கோவில் ஆகும். ஆடித்தபசு என்றால் உடனே நினைவுக்கு வருவது சங்கரன் கோவிலில் நடைபெறும் திருவிழா ஆகும்.

    மற்ற தலங்களைப் போன்றே இந்த திருத்தலத்திற்கும் ரசிக்கும்படியான, சுவையான புராணக்கதைகள் உண்டு. இந்து சமயத்திலே பல பிரிவுகள் உண்டு. வேற்றுமைகள், கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் ஒற்றுமை இருப்பதாலே உலகிலேயே மிகவும் தொன்மையான பெரிய சமயம் ஆக இருக்கின்றது.

    வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் வாதங்கள் உண்டாயிற்று. மஹா விஷ்ணு பெரியவரா, சிவபெருமான் பெரியவரா என்பது குறித்து பக்தர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர். இருவரும் ஒன்றே என்பதை உணர்த்த சங்கரனாகவும், நாராயணராகவும் இணைந்து தோன்றி, ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை புரிய வைத்தனர்.

    இங்குள்ள பெருமானார் பாதி உருவம் சந்தனம், பாம்பு, மான் ஆகியவற்றுடன் சிவபெருமான் ஆகவும், மறு பாதி உருவத்தில் சங்கு, சக்கரத்துடனும் நாராயணராகவும் காட்சி தருகிறார். ஆனாலும், இதை ஒப்புக்கொள்ளாத வைணவர்கள் இந்த தலத்திற்கு வந்து வழிபடுவதை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை என கூறுகின்றனர்.

    ஒரு காலத்தில் தேவர்களில் ஒருவரான மாணிக்கிரீவன் என்பவர் பார்வதி தேவியின் சாபத்தினாலே பூமியிலே மானிடனாகப் பிறந்து ஒரு தோட்டத்தில் தோட்டக்காரானாக வேலை செய்து வந்தார். அந்த தோட்டத்தில் இருந்து மலர்கள் அரண்மனைக்கு தினமும் அனுப்பப்பட்டு வந்தது.

    வன்மீகநாதன் பெயர் எப்படி?

    ஒரு நாள் தோட்டத்தில் ஒரு பாம்பு புற்று இருப்பது கண்டு அதை அகற்ற மாணிக்கிரீவன் முயன்றபொழுது அதில் இருந்த பாம்பின் வால் வெட்டப்பட்டது. அதன் அடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதை பார்த்து அரண்மனைக்கு வந்து மன்னனிடம் கூறினார். அப்பொழுது அரசனாக இருந்த மன்னன் உக்கிரம பாண்டியன் இது சிவபெருமானின் இருப்பிடம் தான் என்று தீர்மானித்து, அந்த லிங்கத்தை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து ஒரு கோவிலை நிர்மாணித்தார்.

    அந்த புற்று வன்மீகம் என்று அழைக்கப்பட்டதால் அந்த இறையனாருக்கு வன்மீகநாதர் என்று பெயரிட்டனர். அந்த புற்றை இப்பொழுதும் கோவிலிலுள்ள ஒரு பெரிய தொட்டியில் வைத்துள்ளனர். அந்த புற்று மண்ணை சகல நோய்களையும் தீர்க்கும் மருந்தாக பூசி வருகின்றனர். பாம்பு கடித்தல், தோல் நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

    சிவபெருமானின் துணைவியார் பார்வதி தேவி சிவபெருமானையும், தன் அண்ணன் மஹாவிஷ்ணுவையும் ஒன்று சேர காண விரும்பி, அதற்காக புங்கவன யாத்திரை சென்றாராம். ஆடி மாதம் ஒன்பது நாட்கள் விரதமிருந்து பூஜைகள் செய்தார். பவுர்ணமி அன்று அவர் விருப்பம் நிறைவேற பூஜையின் முடிவில் சங்கரரும், மஹாவிஷ்ணுவும் இணைந்து, சங்கர நாராயணராக காட்சி அளித்து ஆசி கூறியதால், இந்த இடம் சங்கர நாராயணர் கோவில் ஆயிற்று.

    சிவபெருமான்-விஷ்ணுவை வழிபட்ட நாக அரசர்கள்

    நாகங்களின் அரசர்கள் சம்பா, பத்ம இருவரும் முறையே சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர். இருவரும் போட்டியில் யாருடைய இறைவன் பெரியவர் என்று வினா எழுப்பியதற்கு விடை தரும் வகையில் சிவனும் மஹாவிஷ்ணுவும் இணைந்து, சங்கர நராயணராக காட்சி அளித்ததாகவும் மற்றொரு புராண வரலாறு கூறுகிறது.

    உக்கிர பாண்டிய மன்னன் யானை மீது ஏறி, மீனாட்சி அம்மனை தரிசிக்க புறப்பட்டபொழுது யானை ஒரு குழியில் விழுந்து அதனால் அந்த குழியில் இருந்து எழ முடியவில்லை. அதுசமயம், ஒரு குடியானவன் அரசனிடம், காட்டில் உள்ள ஒரு எறும்பு புற்றின் மேல் ஒரு சிவலிங்கம் உள்ளது என்றும் அந்த லிங்கத்தை ஒரு பாம்பு சுற்றி இருப்பதாகவும் கூறினான். அங்கு விரைந்து சென்று அந்த அதிசயத்தை கண்ட மன்னன், இது இறைவனின் ஆணை என்று தீர்மானித்து கட்டியது தான் இந்த தலம் என்றும் கூறுகின்றனர்.

    இப்படி பல புராண கதைகள் இத்தலத்தை பற்றி உள்ளது.

    இத்திருத்தலத்தை சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு உக்கிர பாண்டிய மன்னன் கட்டியுள்ளார். இங்கு மூன்று கருவறைகள் உள்ளன. ஸ்ரீ சங்கரேஸ்வரர், அன்னை கோமதி அம்மன், மற்றும் ஸ்ரீ சங்கரநாராயணன் ஆகியோர் முறையே உள்ளனர்.

    புற்று மண்ணே அருள் பிரசாதம்

    இங்குள்ள புற்று மண்ணை அருள் பிரசாதமாக நோய் தீர்க்கும் நிவாரணி என்று பக்தர்கள் நம்புகின்றனர். தங்கள் வீடுகளில் பாம்பு இருப்பதை கண்டால் சங்கரன் கோவிலுக்கு வருவதாக நேர்ந்து கொண்டால் அதன் பின்பு எந்த பாம்பும் அந்த வீட்டுக்கு வருவதில்லை என்பது இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கை.

    இங்குள்ள திருக்குளம் நாகசுனை என்பது ஆகும். இதை நாகதேவதைகளான பதுமன்-சங்கம் தோண்டியதாகவும், இந்த சுனையில் உள்ள நீருக்கு அதிக சக்தி உள்ளது என்று பக்தர்கள் நம்புகின்றனர். தினமும் இந்த சுனை நீர் கொண்டுதான் இங்குள்ள சிலைகளுக்கு ஆராட்டு செய்யப்படுகின்றது.

    இங்குள்ள அம்மன் விரதம், பூஜைகள் செய்து அமைந்த கோவில் என்பதால் இந்த அம்மன் மிகவும் சக்தி பெற்றவள் என்கின்றனர். அம்மன் கருவறைக்கு முன்பு சக்கரம் போன்ற ஒரு சிறிய குழி இருக்கின்றது. மன நோய் உள்ளவர்களும், மன அழுத்தம் உள்ளவர்களும் இந்த இடத்தில் அமர்ந்து அம்மனை வழிபட சகலமும் தீர்ந்திடும், வாழ்வு வளம் பெறும், மன நிம்மதி கிடைக்கும் என்பது உண்மை ஆகும்.

    ஆடித்தபசு அன்று திருக்குளத்தில் சர்க்கரையையும் உப்பையும் கலந்து வீசி எறிந்து வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்றும். சகல துன்பங்களும் அவை நீரில் கரைவது போன்று கலந்து போய்விடும் என்பது ஐதீகம்.

    சித்திரை பிரம்மோத்சவம் ஏப்ரல் மாதம் 10 நாட்களும், ஆடித்தபசு ஆகஸ்ட் மாதத்தில் 12 நாட்களும், தெப்பத்திருவிழா தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஆடித்தபசு விழா சமயத்தில் சுற்றி உள்ள அனைத்து ஊர்களிலுமிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கி பக்தர்களுக்கு வசதி செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு கூட்டம் அதிகமாக கூடுவர்.

    வளர்ந்து வரும் பெரிய நகரம்

    சங்கரன் கோவில் வளர்ந்து வரும் ஒரு பெரிய நகரம் ஆகும். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். பருத்தி, மிளகாய் வத்தல், நெல், வாழை, கரும்பு ஆகியவை முக்கிய பயிர்கள் ஆகும். மேலும் இதை சுற்றி, நூற்பாலைகளும், 4000 விசைத்தறி ஆலைகளும், கைத்தறி நெசவுத் தொழிலும் இருக்கிறது.

    இங்கு உற்பத்தி ஆகும் பருத்தி சேலைகள், பாலி பருத்தி சேலைகள், துண்டுகள், டெரிதுவாலை துண்டுகள் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருப்பதால் மிகவும் பிரசித்தி பெற்றவை.

    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

    நிலவு லாவிய நீர்மலி வேணியன்

    அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

    மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்

    சென்னையில் இருந்து தினமும் வரும் பொதிகை விரைவு ரெயில் மூலம் வரலாம். இங்கு ரெயில் நிலையம், பேருந்து நிலையமும் உண்டு.

    தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து ஆகம பூஜைகளும் பக்தர்களுக்காக தவறாமல் செய்யப்பட்டு வருகின்றது.

    • மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் பொதுமக்கள், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    • சுகாதார சீர்கேடுகள் நிலவுவது வேதனைக்குரிய விசயமாகும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், தற்போது பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.கடந்த 2 வாரங்களாக பெய்த கோடை மழையால் சாலைகள் மோசமாக காட்சியளிக்கிறது.

    நகரில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாததால் கழிவுநீர் வெளியேறுவது தொடர் கதையாக உள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை, மாசி விதிகளில் இந்த பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது.

    சமீபத்தில் நடந்த சித்திரை திருவிழாவின் போதுகூட கிழக்கு சித்திரை வீதியில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் வெளியேறியது. தற்போது மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சாலைகள், தெருக்களில் அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. சாலைகளில் வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வெளியூர் பக்தர்கள் நேதாஜி சாலை வழியாக வரவேண்டும். ஆனால் நேதாஜி சாலையில் உள்ள தண்டபாணி முருகன் கோவிலில் இருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள பாதாள சாக்கடை அடிக்கடி நிரம்பி வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவி லுக்கு வரும் வெளி மாநிலத்த வர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

    மேலும் மாதத்தில் ஒரு முறை பாதாள சாக்கடையை எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் ஊழியர்கள் அந்த கழிவுகளை உடனே அப்புறப்படுத்தாமல் ஒரு நாள் முழுவதும் நடு ரோட்டில் கொட்டி வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சொல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.

    இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க அக்கறையும் காட்டவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இன்று காலையில் வடக்கு மாசி வீதி சாலையில் உள்ள பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோன்று நாள்தோறும் கோவிலை சுற்றியுள்ள ஏதேனும் ஒரு பகுதியில் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

    இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து வரும் வெளி மாவட்டத்தினர் மற்றும் மற்ற மாநில மக்கள் டவுன்ஹால் ரோடு வழியாக கோவிலுக்கு செல்கின்றனர். டவுன்ஹால் ரோடு பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் தேங்கி சுகாதார மற்ற முறையில் காட்சி யளிக்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து நகருக்கு வரும் மக்களுக்கு மதுரையின் சுகாதாரம் குறித்து தவறான எண்ணம் ஏற்படும்.

    எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் கோவிலை சுற்றி சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    உலக அளவில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இது போன்ற சுகாதார சீர்கேடுகள் நிலவுவது வேதனைக்குரிய விசயமாகும்.

    • சிறிய தேரில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.
    • பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர்.

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் காலை வெகுவிமரிசையாக நடந்தது.

    நேற்று மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம் நடந்தது. இதற்காக வண்ணத் துணிகளாலும், மலர்களாலும் தேர்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

    தேரோட்டத்தையொட்டி மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் அதிகாலையில் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து கீழமாசி வீதியில் உள்ள தேரடி மண்டபத்திற்கு வந்தனர். அங்கு உள்ள கருப்பணசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர். சிறிய தேரில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.

    தேரோட்டத்தை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாசிவீதிகளில் குவிந்திருந்தனர்.

    சரியாக காலை 6.33 மணிக்கு பக்தர்கள் ''ஹரகர சுந்தர மகாதேவா'' என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் இருந்த பெரிய தேர் நகர்ந்தது. சிறிது நேரம் கழித்து 6.50 மணிக்கு மீனாட்சி அமர்ந்திருந்த சிறிய தேர் புறப்பட்டது. தேர்களை பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் இழுத்தனர்.

    தேர்களுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானை, 'டங்கா' மாடு ஆகியவை அணிவகுத்து சென்றன. தொடர்ந்து விநாயகரும், முருகனும் சிறிய சப்பரங்களில் சென்றனர்.

    தேர்கள், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதிகளில் வலம் வந்தன. இது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது.

    ×