என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
6 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டது: பக்தர்கள் பரசவத்துடன் சாமி தரிசனம்
Byமாலை மலர்1 Sep 2020 2:58 AM GMT (Updated: 1 Sep 2020 2:58 AM GMT)
6 மாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலையில் கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை :
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி மூடப்பட்ட தமிழகத்தில் கோவில்கள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் 6 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டன.
6 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் பரவசத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அதனால் டோக்கன் முறையில் பக்தர்கள் கோவிலுக்கும் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்கள் கழித்து தரிசனம் செய்வதால் பக்தர்கள் பக்தி பரசவம் அடைந்தனர்.
அதே போல் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் வகையில், கோவில்களில் நேற்று துாய்மை பணிகள் உட்பட, தயார்படுத்தும் பணிகள் நடந்தன.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் அரசு கடைபிடிக்க கூறிய வழிமுறைகளின் படி கோவிலுக்குள் நுழையும் முன்னர் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக உள்ளே செல்வதற்கு ஒரு பாதையும், வெளியே வருவதற்கு ஒரு பாதையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி மூடப்பட்ட தமிழகத்தில் கோவில்கள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் 6 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டன.
6 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் பரவசத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அதனால் டோக்கன் முறையில் பக்தர்கள் கோவிலுக்கும் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்கள் கழித்து தரிசனம் செய்வதால் பக்தர்கள் பக்தி பரசவம் அடைந்தனர்.
அதே போல் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு டோக்கன் முறையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் வழிபாடு செய்ய காத்து இருந்தனர். அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் வகையில், கோவில்களில் நேற்று துாய்மை பணிகள் உட்பட, தயார்படுத்தும் பணிகள் நடந்தன.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் அரசு கடைபிடிக்க கூறிய வழிமுறைகளின் படி கோவிலுக்குள் நுழையும் முன்னர் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக உள்ளே செல்வதற்கு ஒரு பாதையும், வெளியே வருவதற்கு ஒரு பாதையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X