search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்

    திருவண்ணாமலையில் நவம்பர் மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரி வலம் செல்கிறார்கள்.

    இந்த மாதம் பவுர்ணமியை யொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:- வருகிற 11- ந்தேதி(திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு பவுர்ணமி தொடங்கி 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.

    Next Story
    ×