என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி முருகன் கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
Byமாலை மலர்4 Nov 2019 3:50 AM GMT (Updated: 4 Nov 2019 3:50 AM GMT)
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலில், கந்தசஷ்டி திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. 7-ம் நாளான நேற்று காலை மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி- தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக காலை 8 மணிக்கு மேல் மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் சண்முகர், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. திருமண மேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
அதன்பிறகு சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என பக்தர்கள் சரண கோஷம் எழுப்ப, பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமாங்கல்யத்தை தெய்வானை மற்றும் வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம், சுந்தரமூர்த்திசிவம் மற்றும் குருக்கள்கள் திருமண மந்திரங்களை ஓதினர். முன்னதாக கந்தசஷ்டி திருவிழாவின் சிறப்பு விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து சண்முகர், வள்ளி- தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் ஓதுவார்கள், குருக்கள்கள் பாடல்கள் பாட மகா தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சப்பரத்தில் சண்முகர், வள்ளி- தெய்வானையுடன் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சண்முகருக்கான சன்னதியில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில் இரவு 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெயசந்திரபானு ரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் சேகர், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு, கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன், நரேஷ், கண்பத் கிராண்ட் ஹரிகரமுத்து, சரவணபொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக காலை 8 மணிக்கு மேல் மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் சண்முகர், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. திருமண மேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
அதன்பிறகு சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என பக்தர்கள் சரண கோஷம் எழுப்ப, பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமாங்கல்யத்தை தெய்வானை மற்றும் வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம், சுந்தரமூர்த்திசிவம் மற்றும் குருக்கள்கள் திருமண மந்திரங்களை ஓதினர். முன்னதாக கந்தசஷ்டி திருவிழாவின் சிறப்பு விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து சண்முகர், வள்ளி- தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் ஓதுவார்கள், குருக்கள்கள் பாடல்கள் பாட மகா தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சப்பரத்தில் சண்முகர், வள்ளி- தெய்வானையுடன் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சண்முகருக்கான சன்னதியில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில் இரவு 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெயசந்திரபானு ரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் சேகர், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு, கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன், நரேஷ், கண்பத் கிராண்ட் ஹரிகரமுத்து, சரவணபொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X