என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தீமை அகல இறைவனை வழிபடுங்கள்
Byமாலை மலர்25 Oct 2019 4:57 AM GMT (Updated: 25 Oct 2019 4:57 AM GMT)
பஞ்சபூதங்களால் ஆன நமது உடலில் இறைவனை குடியமர்த்திக் கொண்டால், அவர் நம் உள்ளத்தில் இருந்து அரசாட்சி புரியும், அறியாமை என்னும் இருள் அரக்கனை ஞான ஒளியேற்றி அங்கிருந்து அகற்றுவார்.
நரகாசுரனை அழிப்பதற்காகச் சென்ற கண்ணபிரான், அதற்கு முன்பாக அவன் தனக்கு பாதுகாப்பு அரணாக அமைத்திருந்த நான்கு கோட்டைகளை உடைத்தெறிந்தார். நரகாசுரன் அமைந்து வைத்திருந்த ‘கிரி துர்க்கம்’, ‘அக்னி துர்க்கம்’, ‘ஜல துர்க்கம்’, ‘வாயு துர்க்கம்’ ஆகிய நான்கு கோட்டைகளையும் தாண்டிதான் கண்ணன் நரகாசுரனை அழிக்க அவன் இருப்பிடத்திற்குள் நுழைந்தார். இதில் ஆழ்ந்த உள் அர்த்தம் பொதிந்திருக்கிறது.
அதாவது பஞ்ச பூதங்களால் ஆன நமது உடலின் உள்ளே புகுந்து ஆட்சி செய்யும் தீமைகளை அகற்றுவதற்கு, இறைவனை வழிபாடு என்றும் பக்தி மார்க்கம் வழியாக நம் உள்ளத்திற்குள் நாம் அனுமதிக்க வேண்டும். அப்படி நாம் அவரை அனுமதிக்கும்போது, பஞ்ச பூதங்களால் ஆன நமது உடல் என்னும் கோட்டைகளை தகர்த்து இறைவன் நம் உள்ளத்தின் அருகாமையில் வருவார். கிரி துர்க்கம்- மண், அக்னி துர்க்கம்- நெருப்பு, ஜல துர்க்கம்- நீர், வாயு துர்க்கம் - காற்று. இந்த நான்கு பூதங்களும் இருக்கும் இடத்தில் ஆகாயமான ஐந்தாவது பூதம் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இப்படி பஞ்சபூதங்களால் ஆன நமது உடலில் இறைவனை குடியமர்த்திக் கொண்டால், அவர் நம் உள்ளத்தில் இருந்து அரசாட்சி புரியும், அறியாமை என்னும் இருள் அரக்கனை ஞான ஒளியேற்றி அங்கிருந்து அகற்றுவார். அவ்வாறு ஒளிபெற்ற ஒருவனது வாழ்வில், ஆண்டின் ஒரு தினம் அல்ல, ஆண்டின் ஒவ்வொரு தினமும் தீபாவளியாகவே அமையும்.
அதாவது பஞ்ச பூதங்களால் ஆன நமது உடலின் உள்ளே புகுந்து ஆட்சி செய்யும் தீமைகளை அகற்றுவதற்கு, இறைவனை வழிபாடு என்றும் பக்தி மார்க்கம் வழியாக நம் உள்ளத்திற்குள் நாம் அனுமதிக்க வேண்டும். அப்படி நாம் அவரை அனுமதிக்கும்போது, பஞ்ச பூதங்களால் ஆன நமது உடல் என்னும் கோட்டைகளை தகர்த்து இறைவன் நம் உள்ளத்தின் அருகாமையில் வருவார். கிரி துர்க்கம்- மண், அக்னி துர்க்கம்- நெருப்பு, ஜல துர்க்கம்- நீர், வாயு துர்க்கம் - காற்று. இந்த நான்கு பூதங்களும் இருக்கும் இடத்தில் ஆகாயமான ஐந்தாவது பூதம் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இப்படி பஞ்சபூதங்களால் ஆன நமது உடலில் இறைவனை குடியமர்த்திக் கொண்டால், அவர் நம் உள்ளத்தில் இருந்து அரசாட்சி புரியும், அறியாமை என்னும் இருள் அரக்கனை ஞான ஒளியேற்றி அங்கிருந்து அகற்றுவார். அவ்வாறு ஒளிபெற்ற ஒருவனது வாழ்வில், ஆண்டின் ஒரு தினம் அல்ல, ஆண்டின் ஒவ்வொரு தினமும் தீபாவளியாகவே அமையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X