என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் 12-ந்தேதி தேர் திருவிழா
Byமாலை மலர்8 Jun 2019 5:39 AM GMT (Updated: 8 Jun 2019 5:39 AM GMT)
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக அளவில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனி பகவான் தனியாக சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் இந்த கோவில் சனிதோஷ நிவர்த்திக்கு பிரசித்திபெற்ற பரிகார தலமாக விளங்கி வருகிறது. இங்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சி விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த கோவிலில் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த மாதம் (மே) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வரும் உற்சவம் கடந்த 5-ந் தேதி இரவு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று செண்பக தியாகராஜர் சுவாமி வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையொட்டி தியாகராஜருக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தியாகராஜர் ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு ஆட்டத்துடன் தியாகராஜர் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளினார்.
விழாவில் கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்சாமிகள், நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் வருகிற 12-ந் தேதி தேரோட்டமும், 13-ந் தேதி சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி சகோபுர வீதி உலாவும், 14-ந்தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
இந்த கோவிலில் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த மாதம் (மே) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வரும் உற்சவம் கடந்த 5-ந் தேதி இரவு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று செண்பக தியாகராஜர் சுவாமி வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையொட்டி தியாகராஜருக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தியாகராஜர் ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு ஆட்டத்துடன் தியாகராஜர் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளினார்.
விழாவில் கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்சாமிகள், நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் வருகிற 12-ந் தேதி தேரோட்டமும், 13-ந் தேதி சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி சகோபுர வீதி உலாவும், 14-ந்தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X